July 09, 2020

அறிய வேண்டியவை-பதிவு-89


               ஜபம்-பதிவு-581
         (அறிய வேண்டியவை-89)

காந்தாரி :
“என்னுடைய
புண்ணியங்கள்
அனைத்தையும்
ஒன்றாக்கி
ஒரே சக்தியாக்கி
என்னுடைய
கண்களின் மூலமாக
உன்னுடைய
உடலுக்கு
பாய்ச்சப் போகிறேன்
என் மகனே! “

“உன்னுடைய
இரண்டு கண்களையும்
மூடாமல்
கண்களைத் திறந்து
வைத்துக் கொண்டே
என்னைப் பார்
இரண்டு கண்களையும்
மூடாமல் என்னைப்
பார்க்க வேண்டும்
இந்தத் தாயைப்
பார்க்க வேண்டும்”

“நான் சொன்னவைகள்
அனைத்தையும்
மனதில் கொண்டு
உன்னுடைய
கண்களை மூடாமல்
என்னைப்
பார் மகனே
என்னைப் பார்”

(காந்தாரி தன்னுடைய
கண்களைத் திறந்தாள்
காந்தாரியின்
கண்களில் இருந்து
புறப்பட்ட சக்தியானது
துரியோதனனின்
உடலில் பாய்ந்தது
உடலில் உள்ள
அனைத்து
உறுப்புகளிலும்
பரவிக் கொண்டிருந்தது

துரியோதனன்
தன்னுடைய உடலில்
கட்டியிருந்த
வாழை இலையால்
மறைக்கப்பட்ட
இடத்தைத் தவிர
துரியோதனனின்
உடலில் உள்ள
அனைத்து
உறுப்புகளிலும்
காந்தாரியின்
கண்களில்
இருந்து பாய்ந்து
வந்த சக்தியானது
துரியோதனனின்
உடலில் பாய்ந்தது

ஆனால்
இடுப்பிற்குக் கீழே
தன்னுடைய
தொடையை
மறைக்கும்
வகையில்
துரியோதனனால்
வாழை இலையால்
கட்டி மறைக்கப்பட்ட
துரியோதனனுடைய
தொடையில்
காந்தாரி தன்னுடைய
கண்களால்
துரியோதனனுக்காக
பாய்ச்சிய
சக்தியானது
துரியோதனனின்
தொடையில்
பாயவில்லை

சக்தியைப் பாய்ச்சி
முடித்த பின் காந்தாரி
தன்னுடைய
கண்களைக்
கட்டிக் கொண்டு
அதிர்ச்சியுடன் பேசத்
தொடங்கினாள்)

காந்தாரி :
“எத்தகைய தவறை
செய்து விட்டாய்
என் மகனே
நான் உன்னை என்ன
செய்ய சொன்னேன்
நீ என்ன
செய்திருக்கிறாய்
உடலில் ஒரு சிறு
துணியும் இல்லாமல்
மறைப்பு எதுவும்
இல்லாமல்
பிறந்த மேனியாக
என் முன்னால்
வந்து நில் என்று
தானே சொன்னேன்
நான் சொன்னதைச்
செய்யாமல்
என்னுடைய
பேச்சைக் கேட்காமல்
ஏன் இத்தகைய
ஒரு மாபெரும்
தவறைச் செய்தாய் “

“இதனால் ஏற்படப்
போகும்
பின்விளைவுகள்
என்ன என்பதைப்
பற்றி - நீ அறிந்து
இருந்தால் இப்படி
ஒரு தவறை - நீ
செய்திருக்க மாட்டாய் “

“என்னுடைய
புண்ணியப் பதிவுகளின்
மொத்த சக்தியானது
என்னுடைய
கண்களிலிருந்து
வெளிப்பட்டு
உன்னுடைய உடலில்
எந்த உறுப்புகளில்
எல்லாம் பாய்ந்ததோ
அந்த உறுப்புகள்
எல்லாம் வஜ்ரமாக
மாறி விடும்
யாராலும் வீழ்த்த
முடியாத வஜ்ரமாக
உன்னுடைய
தேகம் மாறி விடும் “

“என்னுடைய
புண்ணியப் பதிவுகளின்
மொத்த சக்தியானது
என்னுடைய
கண்களிலிருந்து
வெளிப்பட்டு
உன்னுடைய
உடலில் உள்ள
எந்த உறுப்புகளில்
எல்லாம்
பாயவில்லையோ
அந்த உறுப்புகள்
எல்லாம் உன்னுடைய
உடலில் பலவீனமான
பகுதியாக மாறி விடும் “

“உன்னுடைய உடலில்
தொடையைத் தவிர
அனைத்து உறுப்புகளும்
யாராலும் வீழ்த்த
முடியாத வஜ்ரமாக
மாறினாலும்
உன்னுடைய தொடை
உன்னுடைய உடலில்
பலவீனமான
பகுதியாக இருக்கும் “

“வாழை இலையைக்
கட்டிக் கொண்டு
உன்னுடைய உடலில்
தொடையை மறைத்தாயே
அந்தத் தொடையை
உன்னுடைய எதிரி
அடித்தான் என்றால்
உன்னை எளிதில்
வீழ்த்தி விடுவான் “

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 09-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment