May 14, 2020

பரம்பொருள்-பதிவு-239


               ஜபம்-பதிவு-487
             (பரம்பொருள்-239)

காமம் :
“கணவனும்
மனைவியும்
தாம்பத்ய
உறவு கொண்டு
காமத்தின்
உச்சத்தில்
இருக்கும் போது
மனம் இல்லாத
நிலையில்
காலம் இல்லாத
நிலையான
கடவுள்
தன்மையை
தரிசனம்
செய்வார்கள் ;
அவ்வாறு
தரிசனம்
செய்தவர்களால்
மட்டுமே
தாம்பத்ய
உறவின்
புனிதத்
தன்மையை
உணர்ந்து
கொள்ள
முடியும் ;
அவர்களால் தான்
வாழ்வின்
ரகசிய
வேர்களை
அறிந்து
கொள்ள
முடியும் ; “

“தாம்பத்ய உறவு
கொள்ளும் போது
வைக்கப்படும்
தீபத்துடன்
கூடிய விளக்கு
தொடுத்த பூ ;
தொடுக்காத பூ ;
பழவகைகள் ;
இனிப்பு ;
ஊதுபத்தி ;
ஆகிய
அனைத்தும்
கடவுளுக்கும்
படைக்கப்படுகிறது “

“கடவுளுக்கு
என்ன
படைக்கப்
படுகிறதோ
அவைகள் தான்
தாம்பத்ய
உறவு
கொள்ளும் போது
தாம்பத்ய உறவு
கொள்ளும்
அறையிலும்
வைக்கப்படுகிறது “

“அதாவது
நம்முடைய
முன்னோர்கள்
காமத்தை
கடவுளாக
பார்த்தனர் ;
காமத்தை
கடவுளாக
பார்த்த
காரணத்தினால்
தான்
கடவுளுக்கு
படைக்கப்
படுவதை
காமத்தில்
ஈடுபடுவதற்கும்
பயன்படுத்தினர்”

“காதலின்
ஆழத்தில்
காமத்தின்
உச்சத்தில்
கடவுள்
தன்மையை
எப்படி உணர
முடியுமோ ?
அவ்வாறே
கடவுளாக
மாறும்
போதும்
கடவுள்
தன்மையை
உணர
முடியும் ?
என்பதையும் ;
காதல்
காமம்
கடவுள்
மூன்றும்
கடவுள்
தன்மையில்
ஒன்றாக
சந்திக்கின்றன
என்பதையும் ;
உணர்ந்தவர்களால்
வடிக்கப்பட்டதே
கோயிலின்
கோபுரத்திலும்
கோயிலுக்குள்
உள்ள
இடங்களிலும்
காதல் ததும்ப
காம ரசம்
சொட்ட
வடிக்கப்பட்ட
சிலைகள் “

“கோயிலின்
கோபுரத்திலும்
கோயிலுக்குள்
உள்ள
இடங்களிலும்
காதல் ததும்பும்
காம ரசம்
சொட்டும்
சிலைகளை
வடித்து
வைத்ததின்
முக்கியமான
நோக்கம்
தெரியாத
விஷயங்களை
மக்கள்
அனைவரும்
தெரிந்து
கொள்ள
வேண்டும்
என்பதற்காகவும்
நாகரிகம்
வளர்ச்சி
அடையாத
அந்த
காலத்தில்
தாம்பத்தியத்தில்
ஈடுபடும்
விஷயங்களை
அனைவரும்
தெரிந்து
கொள்ள
வேண்டும்
என்பதற்காகவும்
தான்”


----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 14-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment