May 14, 2020

பரம்பொருள்-பதிவு-240


               ஜபம்-பதிவு-488
             (பரம்பொருள்-240)

“ஒரு பெண்
பருவம்
அடைந்தவுடன்
பெற்றோர்கள்
தங்கள்
பிள்ளைகளை
கோயிலுக்கு
அழைத்து
செல்வார்கள் ;
கோயிலுக்குள்
கோயிலைச்
சுற்றி வரச்
சொல்லுவார்கள் ;
அவர்கள்
செதுக்கப்பட்ட
அந்த
சிலைகளை
பார்ப்பார்கள் ;
தெரியாத
விஷயத்தை
தெரிந்து
கொள்ள
முயற்சி
செய்வார்கள் ;
அதைப் போல
பல முறை
வரும் போது
எந்த
விஷயத்தை
தெரிந்து
கொள்ள
வேண்டுமோ
அதைப்
பற்றித்
தெரிந்து
கொள்வார்கள் ; “

“காதல் ததும்பும்
காம ரசம்
சொட்டும்
சிலைகளை
கோயிலில்
இல்லாமல்
தனியாக
வேறு ஒரு
இடத்தில்
வடிக்க
வேண்டாம்
என்று
நம்முடைய
முன்னோர்கள்
கருதினார்கள்
ஏனென்றால்
காமம்
என்பது
புனிதமானது
அது புனிதமான
இடத்தில் தான்
இருக்க
வேண்டும்
புனிதமான
இடத்தில்
இருந்து தான்
பார்க்க
வேண்டும்
தனியாக ஒரு
இடத்தை
தேர்ந்தெடுத்து
அந்த
இடத்தில்
அத்தகைய
சிலைகளை
உருவாக்கி
அதை
பார்க்க
வைத்தால்
அது
சுற்றுலா
தலமாகி
விடும்
காமம் தன்
மதிப்பை
இழந்து விடும்
காமம்
வேடிக்கை
பொருளாகி
விடும்
என்ற
காரணத்தினால்
காதல்
காமம்
கடவுள்
மூன்றும்
புனிதமானது
என்ற
காரணத்தினால்
காதல் ததும்பும்
காம ரசம்
சொட்டும்
சிலைகளை
கோயிலின்
கோபுரத்திலும்
கோயிலுக்குள்
உள்ள
இடங்களிலும்
வடித்தனர்’ “

“ஆனால்
இன்று
அந்த
காதல் ததும்பும்
காம ரசம்
சொட்டும்
சிலைகளை
பார்ப்பவர்கள்
கோயிலின்
கோபுரத்திலும்
கோயிலுக்குள்
உள்ள
இடங்களிலும்
உள்ள
சிலைகளை
ஆபாச சிலை
என்று
கிண்டல்
செய்கிறார்கள்
விவரம்
தெரியாதவர்கள் ;
அறிவு
குறைந்தவர்கள் ;
புத்தி
பேதலித்தவர்கள் ;
உண்மை
என்ன
என்று
தெரியாமல்
பிதற்றுவார்கள்“

“காதல்
காமம்
கடவுள்
மூன்றும்
புனிதமானது
என்பதை
உணர்ந்து
கொண்டவர்களால்
மட்டுமே
கோயிலின்
கோபுரத்திலும்
கோயிலுக்குள்
உள்ள
இடங்களிலும்
வடித்து
வைக்கப்பட்ட
காதல் ததும்பும்
காம ரசம்
சொட்டும்
சிலைகளை
புனிதமாக
பார்க்க முடியும் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 14-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment