September 07, 2016

2-இயேசு கிறிஸ்து-போகர்- தானான மோட்ச-பதிவு-77(பாகம்-2)

இயேசு கிறிஸ்து-போகர்- தானான மோட்ச-பதிவு-77(பாகம்-2)


""""பதிவு எழுபத்துஏழை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

போகர்
"""""தானான மோட்ச வழிக்கு இடமே தேடி
                                சதாகாலம் இருப்பது வேசாயுச் சியந்தான்
கோனான எனதையர் சொல் படிக்கு
                                கொற்றவனே இரண்டுமுறை சமாதி கண்டேன்
தேனான சீடர்களே நீங்களும் தான்
                                தெரிந்திருந்து பவக்கடலைச் சார வேண்டாம்
மானான வையத்தில் சிலநாள் தங்கி
                                மார்க்கமெனும் மோட்சவழி சேருவீரே""""""""
                                                                                -------போகர்
                                                                                ------போகர் - 7000

ஆன்மீகம் அன்று முதல் இன்று வரை
மூன்று நிலைகளில் இயங்கி வருகிறது அல்லது
ஆன்மீகம் மூன்று நிலைகளில்
பயன்படுத்தப் பட்டு வருகிறது.

ஆன்மீகத்தை வழி நடத்துபவர்கள்
இந்த மூன்று நிலைகளில்
ஏதோ ஒன்றுடன்  தொடர்பை
ஏற்படுத்திக் கொண்டோ,
மூன்று நிலைகளில்
ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்தோ,
மூன்று நிலைகளில்
எது தங்களுக்கு சாதகமாக இருக்கிறதோ,
அதை பயன்படுத்தியோ
மூன்று நிலைகளில் எது தங்களுக்கு தேவையோ
அதை பயன்படுத்தி வருகின்றனர்.

மூன்று நிலைகளுமே ஒன்றுக்கொன்று
தொடர்புடையவையாக தெரிந்தாலும்
மூன்று நிலைகளும் ஒன்றுக்கொன்று
தொடர்பற்றதாக தெரிந்தாலும்
மூன்றுமே ஒன்று போலவே தெரிந்தாலும்
மூன்றுமே ஒன்று போலத் தெரியாவிட்டாலும்
மூன்று வெவ்வேறு நிலைகளில்
மூன்று விதமான ஆன்மீக நிலைகளில்
அன்று முதல் இன்று வரை
ஆன்மீகம்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒன்று      : வியாபாரத்தை ஆதரிக்கும் ஆன்மீகம்
இரண்டு  : வியாபாரத்தை எதிர்க்கும் ஆன்மீகம்
மூன்று     : வியாபாரத்தை கண்டு கொள்ளாத ஆன்மீகம்

சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும்
இந்த மூன்று ஆன்மீக நிலைகளில்
ஏதோ ஒன்றுடன் தொடர்புடையவராகவோ
பின்பற்றுபவராகவோ
தெரிந்தோ தெரியாமலோ இருப்பார்கள்.

வியாபாரத்துடன் கூடிய ஆன்மீகம் என்றால்,
ஏழைகளுக்கு ஆதரவு தருவது போல் இருக்கும்
ஆனால் பணக்காரர்களை ஆதரித்துக்
கொண்டு இருக்கும்.
வியாபாரத்தை எதிர்க்கும் ஆன்மீகம் என்றால்,
உண்மையான ஆன்மீகத்தை தன்னுள் கொண்டிருக்கும்
ஏழைகளின் மேல் உண்மையான அன்பையும்
பணக்காரர்களை எதிர்த்தும் இருக்கும்.
வியாபாரத்தை கண்டு கொள்ளாத ஆன்மீகம் என்றால்
ஏழைகளின் மேல் அன்பு காட்டும்
பணக்காரர்களை ஆதரிக்கவும் செய்யாது
எதிர்க்கவும் செய்யாது.

ஒன்று  : வியாபாரத்தை ஆதரிக்கும் ஆன்மீகம்
வியாபரத்துடன் கூடிய ஆன்மீகம் என்பது
எந்த வித பிரச்சினையும் இல்லாதது
அது அனைவரையும் எதிர்க்காமல்
சமரசம் செய்து கொள்வது;
ஏழைகளை ஆதரிப்பது போல் இருக்கும்
ஆனால் ஆதரிக்காது;
பணக்காரர்களை எதிர்ப்பது போல் இருக்கும்
ஆனால் எதிர்க்காது;
ஆன்மீகம் போதிப்பது போல் இருக்கும்
ஆனால் ஆன்மீகத்தை போதிக்காது;
ஆன்மீகத்தை கற்று கொடுப்பது போல் இருக்கும்
ஆனால் கற்றுக் கொடுக்காது;
ஆன்மீகவாதிகளை வழி நடத்துவது போல் இருக்கும்
ஆனால் வழி நடத்தாது;
ஆன்மீகத்தை உயர்த்துவது போல் இருக்கும்
ஆனால் ஆன்மீகத்தை உயர்த்தாது;
ஆன்மீகத்தின் வெவ்வேறு நிலைகளை
கற்று தருகிறோம் என்று கூறிக்கொண்டு
ஒவ்வொரு நிலைக்கும்
அதிகபட்ச பணத்தை பிடுங்கும்;
ஆன்மீகப் பொருட்களுக்கு அதிகப்படியான
விலையை நிர்ணயம் செய்யும்;
ஆன்மீக தலைவரை பார்க்க வேண்டுமானால்
அதிகப்படியான பணத்தை நிர்ணயிக்கும்;
அதிக அளவு ஆட்களை சேர்த்துக் கொண்டு
கூட்டத்தை காண்பிக்கும்;
இது தான் உண்மையான ஆன்மீகம் - என்று
மக்களை நம்ப வைக்க
பல்வேறு விளம்பர உத்திகளைக் கையாளும்;
பல்வேறு பத்திரிக்கைகள் மற்றும்
ஊடகங்களில் கட்டுரைகள்
பேட்டிகள் இடம் பெற்று
மக்களிடம் உண்மையான ஆன்மீகம்
தங்கள் ஆன்மீகம் - என்று
மக்களை நம்ப வைக்கும்;
அதற்கு ஒத்து ஊத
ஒரு சாரார் கிளம்பி வருவர்;
அவர்கள் உயர்ந்த நிலையில் உள்ள
பணம் படைத்த செல்வந்தர்களாகவோ;
அதிகாரம் நிறைந்த
பதவியில் இருப்பவர்களாகவோ;
புகழ் பெற்ற நிலையில் உள்ள
பெரிய திரை மற்றும் சின்ன திரை
நட்சத்திரங்களாகவோ;
இந்த ஆன்மீகத்தை உண்மையான ஆன்மீகம்
என்று நம்பி ஏமாந்து போன
ஏழை மக்களாகவோ;
ஒன்றும் அறியாதவர்களாகவோ;
உண்மையான ஆன்மீகத்தை தேடி வந்து
புதை குழியில் மாட்டிக் கொண்டவர்களாகவோ;
மன அமைதியைத் தேடி வந்தவர்களாகவோ;
தங்கள் சோகம் தீரும் என்று
நம்பி வந்தவர்களாகவோ;
தங்கள் துக்கம்,கவலை நீங்கும்
என்று நம்பி வந்தவர்களாகவோ;
தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு
நல்லவற்றை தேடி வந்தவர்களாகவோ;
இருப்பர்.

இதனை பயன்படுத்திக் கொண்டு
உண்மையான ஆக்மீகத்தை காட்டுகிறேன்
என்று கூறிக்கொண்டு
தன்னை வளர்த்துக் கொள்ளும்
ஆன்மீகத் தலைவர்களைக் கொண்ட
ஆன்மீகக் கூடாரங்கள் உண்டு.

இத்தகைய கூடாரங்கள் மாட்டிக் கொண்டு
போலியான ஆன்மீக வலைகளுக்குள்
சிக்கிக் கொண்டு
தங்கள் வாழ்க்கையை இழந்து
உண்மையான ஆன்மீகத்தை பார்க்காமலேயே
உண்மையான ஆன்கத்தை உணராமலேயே
இறந்து விடுபவர் தான் அதிகம்.

இத்தகைய ஆன்மீகத்தை வழிநடத்தும்
வழிநடத்துபவர்கள் தான்
உயர்வார்களே தவிர
அந்த ஆன்மீகத்தை பின்பற்றுபவர்கள்
உயர மாட்டார்கள்
இத்தகைய ஆன்மீகத்தைத் தான்
சமுதாயத்தின் முப்பெரும்
நிலையில் உள்ள
அரசியல் தலைவர்கள்,
மதத் தலைவர்கள்,
பொருளாதாரத் தலைவர்கள்,
ஆகியோர்
ஆதரிப்பார்கள்
வளர்த்து விடுவார்கள்.

ஏனென்றால் இத்தகைய ஆன்மீகம்
அதிகார வர்த்ககத்தில் உள்ளவர்களையும்
பணம் படைத்த செல்வந்தர்களையும்
பகைத்துக் கொள்ளாது அவர்களுடன்
உறவு வைத்துக் கொண்டு
ஏழைகளை
நலிந்தோர்களை
வாழ்விழந்தவர்களை
உயர்த்துவது  போல் நடிக்கும்.
ஆனால் உயர்த்தாது
உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாது.

அதனால் இத்தகைய ஆன்மீகத்தை கொண்ட
ஆன்மீகத் தலைவர்களும்,
ஆன்மீகக் கூடாரங்களும்,
சமுதாயத்தில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் வளரும்.
இத்தகைய ஆன்மீகம்
அந்த நாள் முதல்
தற்போது இந்த மணித்துளி வரை
வளர்ந்து கொண்டு தான் வருகிறது.
சமுதாயத்தால் வளர்க்கப்பட்டு வருகிறது என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்.

இத்தகைய ஆன்மீகம் மட்டுமே
சமுதாயத்தால் வளர்க்கப்படும்.
மற்ற இரண்டு ஆன்மீகமும்
உண்மையான ஆன்மீகத்தை தன்னுள் கொண்டது;
அதனால் அதனை இந்த சமுதாயம் வளர்க்காது;
அதனை அழிக்க நினைக்கும்;
அது வளர்வதை தடுக்கும்;
அதனை ஆதரிக்காது
ஆதரிப்பவர்களையும் ஆதரிக்க விடாது
வளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளும்.

ஏனென்றால் மற்ற இரண்டு ஆன்மீகத்தாலும்
மதத் தலைவர்கள்
பொருளாதாரத் தலைவர்கள்
அரசியல் தலைவர்கள்
ஆகியோர்களுக்கு லாபம் என்பது கிடையாது.
இது முழுக்க முழுக்க உண்மையான
ஆன்மீகத்தை சார்ந்தது.
ஆன்மீகத் தேடல் கொண்ட
அனைவருக்கும் உகந்தது.

சமுதாயத்தின் மேலும்
மக்களின் மேலும்
ஏழைகளின் மேலும்
உண்மையான அக்கறை கொண்டது.

எப்போதுமே உண்மை
எப்போதும் சமுதாயத்தில்
மறைக்கப்பட்டே இருக்கும்.
அதனால் தான்
உண்மையான ஆன்மீகம் எது என்றும்
உண்மையான ஆன்மீகத்தை
வழிநடத்துபவர்கள் யார் என்றும்
மக்களுக்கு தெரியாமல் இருக்கிறது.

உண்மையான ஆன்மீகத் தேடல் கொண்ட
உண்மையான ஆன்மீகத் தாகம் கொண்ட
உண்மையைத் தேடுபவர்களுக்கு
உண்மையை உணர நினைப்பவர்களுக்கு
உண்மையை அடைய நினைப்பவர்களுக்கு
உண்மையாக மாற நினைப்பவர்களுக்கு
இந்த இரண்டு ஆன்மீகமும்
முக்கியமான நிலையைத் தன்னுள் கொண்டிருக்கும்.

உண்மையைத் தேடிச் செல்பவர்களுக்கும்
உண்மையை நாடிச் செல்பவர்களுக்கும்
உண்மையை அறிய நினைப்பவர்களுக்கும்
உண்மையை உணர நினைப்பவர்களுக்கும்
இந்த இரண்டு ஆன்மீகத்தை நாடிச் செல்வர்.

இரண்டு : வியாபாரத்தை எதிர்க்கும் ஆன்மீகம்
வியாபாரத்தை எதிர்க்கும் ஆன்மீகம் என்பது
புரட்சிகரமான ஆன்மீகம்.
உண்மையான கருத்துக்களை
தன்னுள் கொண்ட ஆன்மீகம்.
காலம் காலமாக இருந்து வந்திருக்கும்
தவறான கொள்கைகளை சாடும் ஆன்மீகம்.
இத்தகைய ஆன்மீகத்தை கொண்ட
ஆன்மீகத் தலைவர்கள்
பல நூற்றாண்டுகளுக்கு
ஒரு முறை தான்  தோன்றுவார்கள்;
இவர்கள் சமுதாயத்தில் நிலவி வரும்
அனைத்து தவறுகளையும் சுட்டிக் காட்டுவார்கள்;
தவறு செய்பவர்களை
சமுதாயத்திற்கு அடையாளம் காட்டுவார்கள்;
உண்மையான ஆன்மீகத்தை
உலகிற்கு  கொடுப்பார்கள்;
போலியான ஆன்மீகத்தை
தோலுரித்து காட்டுவார்கள்;
இத்தகையவர்கள்
இந்த உலகத்தில் தோன்றுவதே அதிசயம்;
அவர்களை மக்கள் புரிந்து கொள்ளாமல்
இந்த சமுதாயம் இருப்பது
என்பதை  விட கொடுமை ஒன்றும் இல்லை;
இத்தகைய ஆன்மீக வழிகாட்டிகளை
இந்த சமுதாயத்தில் உயர் வகுப்பினர்
ஏற்றுக் கொள்வதில்லை.
மதத் தலைவர்கள் ,
அரசியல் தலைவர்கள்,
பொருளாதாரத் தலைவர்கள்,
ஏற்றுக் கொள்வதில்லை.
இவர்கள் பெரும்பாலும்
சமுதாயத்தில் கொல்லப்படுவர்;
இவர்கள் நீடித்து
தங்கள் கருத்துக்களை சொன்னதாக
வரலாறு இல்லை;
பல நு£ற்றாண்டுகளுக்கு
ஒரு முறை தோன்றும் இவர்களை
இந்த உலகம் புரிந்து கொள்ளாமல்
தவறான குற்றச்சாட்டுகளை
அவர்கள் மேல் சுமத்தியோ,
தேவையில்லாத பொய்புகார்களை
அவர்கள் மேல் சுமத்தியோ
பல்வேறு முறைகளின் மூலமாகவோ,
பல்வேறு தண்டனைகளின் மூலமாகவோ,
இவர்களை விஷம் வைத்தோ
உணவில் விஷம் கலந்தோ
சிறுக சிறுக சாகும்படியோ
செயல்களை செய்வர்.
அவர்களின் கருத்துக்களை
முடிந்த வரை அழித்து விடுவர்;
அவர்கள் கருத்துக்கள்
சமுதாயத்தில் இல்லாதவாறு
பார்த்துக் கொள்வர்.

அவர்களுடைய கருத்துக்களை பின்பற்றுபவர்கள்
அதே புரட்சிகரமான
சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள்
என்று சொல்ல முடியாது.
பெரும்பாலும் இருக்க மாட்டார்கள்
கால ஓட்டத்தில் வியாபாரத்தை  எதிர்த்த ஆன்மீகம்
அதை பின்பற்றுவர்களால்
முதல் நிலை ஆன்மீகத்திற்கு
அதாவது வியாபாரத்தை ஆதரிக்கும்
ஆன்மீகமாக மாறி விடும்
அதன் உண்மைத் தன்மை மாறி
போலித் தன்மை உள்ளே புகுந்து விடும்.
வியாபாரத்தை எதிர்த்த
ஆன்மீகத்தை பின்பற்றுபவர்கள்
உண்மைத் தன்மை உடையவர்களாக
இல்லாத காரணத்தினால்
வியாபாரத்தை எதிர்த்த ஆன்மீகம்
உண்மைத் தன்மை இழந்த
ஆன்மீகமாக மாறி விடும்.

நாளடைவில் வியாபாரத்தை எதிர்த்த ஆன்மீகம்
வியாபாரத்தை ஆதரிக்கும் ஆன்மீகமாக மாறி விடும்
அதன் உண்மைத் தன்மைகள்
நாளடைவில் மறைந்து விடும்.

வியாபாரத்தை எதிர்த்த ஆன்மீகத்தின்
போலியான வழிகாட்டிகளால்
வியாபாரத்தை எதிர்த்த ஆன்மீகத்தை
உண்மையாக பின்பற்றுபவர்களையும்,
வியாபாரத்தை எதிர்த்த ஆன்மீகத்தின்
உண்மையான  கொள்கைகளையும்
இச்சமுதாயத்தில் இருந்து அழித்து விடுவர்.
அல்லது தானாவே அழிந்து விடும்.

மூன்று  : வியாபாரத்தை கண்டு கொள்ளாத ஆன்மீகம்
வியாபாரத்தை கண்டு கொள்ளாத
ஆன்மீகம் என்பது
அமைதி தவழும் ஆன்மீகம்
வியாபாரத்தை கண்டு கொள்ளாத
ஆன்மீகத்தின் வழிகாட்டிகள்
தங்கள் கருத்துக்களை மட்டுமே கூறுவர்;
மற்றவர்கள் கருத்தையோ,
மற்றவர்கள் பற்றியோ,
எதையும் கூற மாட்டார்கள்;
ஊடகங்களில் எந்த விளம்பரமும் செய்ய மாட்டார்கள்;
விளம்பரத்தை எதிர்பார்க்க மாட்டார்கள்;
புகழை எதிர்பார்க்க மாட்டார்கள்;
பணத்தை எதிர்பார்க்க மாட்டார்கள்;
சுகபோகத்தை எதிர்பார்க்க மாட்டார்கள்;
சொத்து சேர்த்து வைத்துக் கொள்ள மாட்டார்கள்;
யாரையும் ஏமாற்றி பணம் சேர்க்க மாட்டார்கள்;
போலியான ஆன்மீகத்தை போதிக்க மாட்டார்கள்;
தவறான வழியைக் காட்ட மாட்டார்கள்;
தேவையில்லாத வார்த்தைகளைப் பேச மாட்டார்கள்;

அரசியல் தலைவர்கள்,
மதத் தலைவர்கள்,
பொருளாதாரத் தலைவர்கள்,
இவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள்.

ஏனென்றால் வியாபாரத்தை கண்டு கொள்ளாத
ஆன்மீகத்தை வழி காட்டுபவர்களால்
அரசியல் தலைவர்களுக்கும்
மதத் தலைவர்களுக்கும்
பொருளாதாரத் தலைவர்களுக்கும்
எந்த பயனும் இல்லை
வியாபாரத்தை கண்டு கொள்ளாத
ஆன்மீகத்தை வழிநடத்துபவர்களை வைத்து
அவர்கள் வியாபாரம் செய்ய முடியாது
இவர்களால் அந்த மூன்று
நிலையில் உள்ளவர்களுக்கு ஆபத்து கிடையாது
எனவே, இவர்களை
கண்டு கொள்ளவும் மாட்டார்கள்;
இவர்களை கொல்லவும் மாட்டார்கள்;
இத்தகைய வியாபாரத்தை
கண்டு கொள்ளாத ஆன்மீகவாதிகளை
சமுதாயத்தில் உள்ள நிறைய
மக்களுக்கு தெரியாது;
ஆனால் உண்மையான ஆன்மீக நாட்டம்
கொண்ட மக்களுக்கு மட்டும்  தெரியும்;

உண்மையான ஆன்மீகம்
கடைக்கோடி மக்களுக்கும்
ஏழை மக்களுக்கும் கிடைக்க  வேண்டும்;
எட்டாக்கனியாக இருந்து ஆன்மீகம்
அனைவருக்கும் கிடைக்க வேண்டும்;
உண்மையான ஆன்மீகம் என்றால்
என்ன என்று உணர வேண்டும்;
என்ற காரணத்திற்காக
குறைவான விலையில்
உண்மையான ஆன்மீகத்தை போதிப்பர்;

சமுதாயத்தில் உண்மையாக இருப்பவர்களிடம்,
உண்மையை நாடுபவர்களிடம்,
உண்மையைத் தேடி ஓடுபவர்களிடம்,
உண்மையை உணர விரும்புபவர்களிடம்,
உண்மையான ஆன்மீகவாதிகளிடம்,
இத்தகைய ஆன்மீகம் அவர்கள்
உள்ளங்களிலும் இல்லங்களிலும் தவழும்;
சமுதாயத்தில் வெளிப்படையாக இருக்காது
ஆனால் சமுதாயத்தில் இருக்கும்;
உண்மையை உணர துடிப்பவர்களிடம்
இத்தகைய ஆன்மீகம் இருக்கும்;

இந்த ஆன்மீக வழிகாட்டிகள்
வியாபாரத்தை ஆதரிக்கும் ஆன்மீகத்தை
உண்டு பண்ணாமல்,
வியாபாரத்தை எதிர்க்கும் ஆன்மீகத்தின்
வழி செல்லாமல்,
வியாபாரமாகவும் இல்லாமல்,
புரட்சிகரமாகவும் இல்லாமல்,
அமைதி தவழும் ஆன்மீகத்தை பின்பற்றுவதால்
இந்த ஆன்மீகம் நின்று நிலைத்து வாழும்.

நன்றாக உற்று நோக்கினால்
சமுதாயம் இந்த மூன்று ஆன்மீகத்தை
தான் பின்பற்றி வரும்
ஆன்மீகத்தை நாடி வரும்
ஒவ்வொருவரும்
இந்த மூன்று ஆன்மீகத்தில்
ஒன்றை பின்பற்றுவர்
அதன் வழி செல்லுவர்.

வியாபாரத்தை ஆதரிக்கும் ஆன்மீகம்
உண்மையான ஆன்மீகமாக இருக்காது
வியாபரத்தை எதிர்க்கும் ஆன்மீகமும்
வியாபரத்தை கண்டு கொள்ளாத ஆன்மீகமும்
உண்மையான ஆன்மீகமாக இருக்கும்
இந்த இரண்டு ஆன்மீகத்தை
பின்பற்றி செல்வதன் மூலமே
உண்மையான ஆன்மீகம் என்றால் என்ன - என்று
புரிந்து கொள்ள முடியும்.
உண்மையான ஆன்மீகம் என்றால்
என்ன என்று தெரிந்து கொள்ள முடியும்.

உண்மையான ஆன்மீகம் எது என்று தெரியாமல்
உண்மையான ஆன்மீகத்தை பின்பற்றாமல்
இருப்போமேயானால்,
ஆன்மீகக் கருத்தைக்களை
புரிந்து கொள்ள முடியாமல்
நாம் ஆன்மீகத்தில்
முன்னேற முடியாமல் இருப்போம்.

"தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
இந்த வார்த்தை பல்வேறு விதமான
அர்த்தங்களை தன்னுள் கொண்டது

காந்த ஈர்ப்பு சக்தியின் திணிவு
வடக்குப் பகுதியில் அதிகமாக இருக்கும்
புவிஈர்ப்பு விசை
அதிகமாக இருக்கும் இடம் வடக்கு.
நாம் நிற்கும் போது
பூமியின் மேல் நிற்கிறோம்.
கால் வழியாக பூமியின் ஈர்ப்பு விசை
இழுக்கப்படுகிறது.
எனவே, கால் பாகத்தை
வடக்கு திசை என்கிறோம்.
அதற்கு எதிர்ப்புறம் தெற்கு.
அதாவது நமது தலைப்பாகம் தெற்கு
தலைப்பாகம் தான் தென்னாடு.

தலையில் பத்தாவது வாசல் கடந்து
உள்ளே சென்றால்
இறைவன் இருப்பான்
பரம்பொருள், ஆதி நிலை,
முதல் நிலை, மூல நிலை இருக்கும்
அதுவே இறைவன் இருக்கும் இடம்.

தலையில் பத்தாவது வாசலைக் கடந்து
உள்ளே செல்லும் போது
இறைவன் இருப்பான்.
பரம் பொருள் இருக்கும்.
தென்னாடுடைய சிவனே என்றால்
தலையில் இருக்கும்
பரம்பொருளே என்று பொருள்.

உலகில் உள்ள அனைவருக்கும்
தலையே தென்னாடு
அனைவரின் தலையிலும்,
பத்தாவது வாசலைக் கடந்து சென்றால்
இறைவன் இருப்பான்;
பரம்பொருள் இருக்கும்;

உலகில் உள்ள அனைவருக்கும்
தலையில் உள்ள
பத்தாவது வாசலைக் கடந்து
உள்ளே சென்றால்
பரம்பொருள் இருப்பான்;
உலகில் உள்ள அனைவருக்கும்
அது தான் இறைவன்;

தென்னாடு என்று
சொல்லப்படக்கூடிய தலையில்
பத்தாவது வாசலைக் கடந்து
பரம்பொருள் உண்டு
இது உலகில் உள்ள
அனைவருக்கும் உண்டு
இதுவே தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
என்பதன் பொருள்.


"மந்திரத்தால் மாங்காயை பறிக்க முடியாது"
என்பது அர்த்தம் உள்ள வார்த்தை.

மாங்காய் என்பது 6 சுவைகளையும்
தன்னுள் கொண்டது.
இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, உப்பு
இநத ஆறு சுவைகளையும்
தன்னுள் கொண்டது மாங்காய்.
அதைப் போல பரம்பொருள்
அனைத்தையும் தன்னுள் கொண்டது.
காலம் வரும் போது
வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.

மந்திரம் என்பது ஒலி உச்சரிப்பு
ஒலி பரவ ஊடகம் தேவை;
ஒலி வெற்றிடத்தில் பரவாது;
ஊடகம் என்ற ஒன்று இல்லையென்றால்
ஒலி பரவாது
ஒலி வெற்றிடத்தில் பரவாது.

மந்திரங்கள் என்பவை ஒலி உச்சரிப்பு
மந்திரங்கள் இயக்க நிலையில் உள்ளவை
இயக்க நிலை வரை தான் இயங்கும்
அதாவது சக்தி களம் வரை இயங்கும்
சிவகளம் என்பது இயக்கமற்ற நிலை
மந்திரங்கள் இயக்கமற்ற நிலையில் இயங்காது
அதாவது மந்திரங்கள் வெற்றிடத்தில் பரவாது
அதாவது மந்திரங்கள் சிவ களத்தில் இயங்காது
அதாவது இயக்க மற்ற நிலையில் இயங்காது
அதாவது மந்திரங்கள் இயக்க நிலையில் உள்ள
சக்தி களம் வரை தான் இயங்கும்
அதாவது மந்திரங்கள் இயக்க மற்ற நிலையில் உள்ள
சிவ களத்தில் இயங்காது.

இயக்க நிலையில் உள்ளவைகளுடன்
தொடர்பு கொள்வதற்கு மட்டுமே
மந்திரங்களைப் பயன்படுத்த முடியும்;
இயக்கமற்ற நிலையில் உள்ளவைகளுடன்
தொடர்பு கொள்வதற்கு
மந்திரங்களைப் பயன்படுத்த முடியாது;

இயக்கமற்ற நிலைகளுடன் தொடர்பு
கொள்ள வேண்டுமானால்
இயக்கமற்ற ஒன்றைத் தான்
பயன்படுத்த வேண்டும்;
இயக்கமுள்ள ஒன்றை வைத்துக்கொண்டு
இயக்கமற்ற நிலைகளுடன் தொடர்பு
கொள்ள முடியாது;
ஆனால் இயக்கமற்ற ஒன்றைக் கொண்டு
இயக்கமுள்ள நிலைகளுடனும்
இயக்கமற்ற நிலைகளுடனும்
தொடர்பு கொள்ள முடியும்;

இயக்கமற்ற நிலையான
பரம்பொருளை தொடர்பு கொள்ள வேண்டுமானால்
இயக்கமற்ற ஒன்றால் தான் முடியும்;
இயக்கமற்ற ஒன்றை பயன்படுத்தினால் தான்
இயக்கமற்ற பரம்பொருளுடன்
தொடர்பு கொள்ள முடியும்;

இயக்கமற்ற நிலையில் உள்ளவை
எவை எவை என்பதை
தெரிந்து கொண்டால் மட்டுமே,
இயக்கமற்ற பரம்பொருளுடன்
தொடர்பு கொள்ள முடியும்;
இயக்கமற்ற நிலையில் உள்ள எவைகள்
இயக்கமற்ற பரம்பொருளுடன்
தொடர்பு கொள்ளும் என்பதை உணர்ந்து
இயக்கமற்றதை வைத்து
இயக்கமற்ற பரம்பொருளுடன்
தொடர்பு கொள்ள வேண்டும்
இயக்கமற்றவை எவை என்பதை உணராமல்
இயக்கமற்ற பரம்பொருளுடன்
தொடர்பு கொள்ள முடியாது;
இயக்கமற்ற பரம்பொருளுடன்
தொடர்பு கொள்ள வேண்டுமானால்
இயக்கமற்றவை எவை என்பது
தெரிந்து இருக்க வேண்டும்
இயக்கமற்றவை எவை என்பது தெரியாமல்
இயக்கமற்ற பரம்பொருளுடன் தொடர்பு
கொள்ள முடியாது.

இயக்கமற்ற நிலையான பரம்பொருளே
அறுசுவையையும்
தன்னுள் வைத்திருக்கும் மாங்காய்
இயக்கமற்ற நிலையான பரம்பொருள்
எப்படி தன்னுள் உள்ளவைகளை
காலம் வரும் போது வெளிப்படுத்துமோ
அதைப்போல மாங்காயும்
அதன் ஒவ்வொரு நிலை மாறும் போதும்
அது தன் வளர்ச்சிக்கு ஏற்ப
தன் நிலையை வெளிப்படுத்தும்.

இயக்கமற்ற நிலையான பரம்பொருளை
இயக்கமற்ற பொருளுடன் தான்
தொடர்பு கொண்டு
தனக்கு வேண்டியதை
தனக்கு தேவையானதை
பெற்றுக் கொள்ள முடியும்.

இயக்கமற்ற நிலையான பரம்பொருளை
இயக்க நிலையில் உள்ள
இயக்க நிலையில் இயங்கும்
மந்திரத்தால் தொடர்பு கொண்டு
தனக்கு வேண்டியதை பெற்றுக்
கொள்ள முடியாது.
இது தான் மந்திரத்தால்
மாங்காயை விழ வைக்க முடியாது
என்பதன் பொருள்.

இயக்கமற்ற நிலையான பரம்பொருளை
நாம் உணர்ந்து கொள்ள வேண்டுமானால்
நாம் மூன்று வார்த்தைகளின்
அர்த்தங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
ஒன்று   ; ஞானம்
இரண்டு  ; சமாதி
மூன்று   ; முக்தி
ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் உள்ள தொடர்பையும்
ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் உள்ள வேற்றுமையையும்
உணர்ந்து கொள்ள வேண்டும்
தெரிந்து கொள்ள வேண்டும்
அறிந்து கொள்ள வேண்டும்

ஞானம் என்பது,
கடவுள் என்றால் என்ன என்பதையும்,
கடவுளை எப்படி அறிவது என்ற வழிகளையும்,
கடவுளை எப்படி உணர்வது என்ற நிலைகளையும்,
கடவுளை எப்படி அடைவது என்ற முறைகளையும்,
கடவுளாக எப்படி மாறுவது என்ற பயிற்சிகளையும்,
அறிவது ஞானம்.

சமாதி
சமம்+ஆதி= சமாதி
சமாதி என்றால் ஆதி நிலைக்குச் சமமாக
மனிதன் உயர்தல் என்று பொருள்படும்
அதாவது மனிதன் கடவுளுக்கு சமமாக உயர்வது

முக்தி
மனிதன் கடவுளாகவே மாறுவது முக்தி

ஞானம் கிடைத்தால் தான்
சமாதி பற்றியும்
முக்தி பற்றியும்
அறிந்து கொள்ள முடியும்

முக்தி பற்றி தெரியாமல்
சாமாதி அடைய முடியாது
சமாதி அடைய வேண்டுமென்றால்
முக்தி பற்றித் தெரிந்திருக்க வேண்டும்
முக்தி அடையக்கூடிய வழிமுறை தெரியாமல்
சமாதி அடைவது தவறு.

சமாதி அடைவதற்கு முன்
முக்தி என்றால் என்ன என்றும்,
முக்தி அடைவதற்குரிய
வழிமுறைகள் எவை என்றும்,
முக்தியை எப்படி அடைவது என்றும்
என்ற நிலைகளைத் தெரிந்த பிறகே
சமாதி அடைய வேண்டும்
ஏனென்றால் சமாதியை விட
உயர்ந்தது முக்தி.

சமாதி என்பது இறுதி நிலை அல்ல
முக்தி என்பதே இறுதி நிலை.
ஒரு கிணற்றில் தண்ணீர் இருக்கிறது
அந்த கிணற்று தண்ணீரை
கடவுள் என்று வைத்துக் கொள்வோம்
கிணற்று மேல் நின்று
தண்ணீரை பார்த்தால்
அதற்குப் பெயர்
ஞானம்;
கிணற்றில் உள்ள நீரை
எடுத்துக் குடித்தால்
அதற்குப் பெயர்
சமாதி;
நாம் கிணற்றுக்குள் விழுந்து
தண்ணீரும் நாமும்
ஒன்றாக மாறி விட்டோமானால்
அதற்குப் பெயர்
முக்தி;

மரம் என்பது ஞானம்;
அதில் உள்ள கிளை என்பது சமாதி;
கிளையில் வளரும் பழம் என்பது முக்தி;
நாம் மரத்தை கண்டுபிடித்து
கிளையை தாண்டி
பழத்திற்கு சென்று
பழத்தை உண்ண வேண்டும்.

சிலருக்கு மரமே கிடைக்காது
மரம் கிடைத்தால் கிளை கிடைக்காது
கிளை கிடைத்தால் பழம் கிடைக்காது.

நாம் பழம் கிடைக்க
முயற்சி செய்ய வேண்டுமே ஒழிய
கிளையுடன் நின்று விடக்கூடாது.
முதலில் மரத்தை நாட வேண்டும்;
பிறகு கிளையைத் தேட வேண்டும்;
பிறகு பழத்தை தேட வேண்டும்;
சிலருக்கு கிளையே போதும் என்று
நின்று விடுவார்கள்
ஏனென்றால் அவர்களுக்கு
பழம் தெரியாது;
பழத்தை அடையக்கூடிய
வழிகள் தெரியாது;
ஏனென்றால்.
முக்தியை அடையக்கூடிய வழிகள்
பெரும்பாலும் மறைத்தே வைக்கப்பட்டிருக்கிறது;
ஏனென்றால் முக்தி என்ற  வார்த்தையே
கோடியில் ஒருவருக்கே தெரியும்;
அப்படி என்றால்,
முக்தியை அடையக்கூடிய வழி
எத்தனை பேருக்கு தெரியும்;
முக்தி என்பதை அடையக்கூடிய வழி
கோடியில் கோடியில் கோடியில் கோடியில்
கோடியில் கோடியில்
ஒருவருக்கே தெரியும்
அவரால் மட்டுமே முக்தி அடைய முடியும்.

சமாதி என்பது
நிறைய பேருக்கு தெரியும்
அதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.
சமாதிகளில் நிறைய இருக்கிறது
ஜீவ சமாதி
ஜல சமாதி
பல பேருக்கு ஜீவ சமாதி தான் தெரியும்.
அதை அடைவதற்கான
வழி முறைகள் தெரியும்;
அதை அடைவதற்கான
பயிற்சி முறைகள் தெரியும்;
அதை அடைவதற்கு முயற்சிகள்
செய்து கொண்டிருப்பர்
சிலருக்கு சமாதி தான்
உயர்ந்த நிலை
இறுதி நிலை என்று
நினைத்துக் கொண்டிருப்பர்.

சமாதி தான் உயர்ந்தது என்று
போற்றி புகழ்ந்து கொண்டிருப்பர்
சமாதி என்பது இறுதி நிலை
இல்லை என்றும்
அதற்கு மேல்
ஒரு நிலை இருக்கிறது
என்றும்
அது முக்தி நிலை என்றும்
பல பேருக்கு தெரிந்து கொள்ள
வாய்ப்பில்லை.

மனிதன் பிறப்பதே கர்மாவினால் தான்
கர்மாவைக் கழித்துக் கொண்டிக்கும்
போதே மனிதன் இறந்து விட்டால்
அதாவது,
கர்மாவைக் கழிக்க முடியாமல்
மனிதன் இறந்து விட்டால்
அவனுக்கு அடுத்த பிறவி வந்து விடும்.

இறப்பை தடுக்க முடியாது
இறப்பை நிறுத்த முடியாது
இறப்பை தடுக்கக் கூடாது
முக்தியும் அடைய வேண்டும்
அதனால் தான் நம் முன்னோர்கள்
சமாதி அடைந்து விடுகின்றனர்.

இறப்பின் தேதி தெரிந்தவுடன்
அந்த இறப்பைத் தள்ளிப் போட முடியாது
என்றைய தினத்தில்
அவர்களுக்கு இறப்பு என்று தெரிகிறதோ,
என்றைய தினத்தில்
அவர்கள் இறப்பார்கள் என்ற செய்தி
அவர்களுக்கு கிடைக்கிறதோ,
அவர்களுக்கு இறப்பின் தேதி
என்றைய தினம் என்று தெரிகிறதோ,
அன்றைய தேதியில்
சமாதி அடைந்து விடுவர்.
அல்லது
இந்த சமுதாயத்தில் வாழ்ந்தது போதும்- என்று
முடிவெடுத்தவுடன்
சமாதி அடைய வேண்டும் என்ற முடிவை
எடுத்தவுடன் சமாதி அடைந்து விடுவர்.

எப்படி இருந்தாலும்,
சமாதி அடைபவர்கள்
முக்தி அடையாமல்,
முக்தி நிலை அடையாமல்,
முக்தி நிலை அடைவதற்கு
முயற்சி செய்யாமல்,
முக்தி அடைய முடியாமல்,
தான் சமாதி அடைகின்றனர்.

தாங்கள்
இந்த சமுதாயத்தில் வாழ்ந்தது போதும்
சமாதி அடைந்து விடுவோம் - அடுத்து
சமாதிக்குள் இருந்து கொண்டு
முக்தி அடைவதற்குரிய
முயற்சிகளை மேற்கொள்வோம் - என்ற
முடிவுகளை எடுத்தபின்
சமாதி அடைவர்.

சமாதி அடைவது என்பது
பல்வேறு ரகசியங்களை
தன்னுள் கொண்டது.

சமாதிக்குள்
தொடர்ந்து அவர்கள் இருப்பதால்
அவர்கள் கர்மாக்கள்
கழிந்து கொண்டே வரும்;
குறைந்து கொண்டே வரும்;
அழிந்து கொண்டடே வரும்;

மீண்டும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின்
சமாதியை உடைத்து விட்டு
வெளியே வருவார்கள்
மீண்டும் சமாதிக்குள் செல்வார்கள்
இதே மாதிரி 2 அல்லது 3 முறை அல்லது
அவர்கள் விருப்பப்படும் கால அளவு வரை
சமாதியில் இருப்பர்.

சமா£திக்குள் செல்லும் போது
நான் இத்தனை ஆண்டுகள் கழித்து
வெளியே வருவேன் என்று
சொல்லி விட்டு செல்வார்கள்
அவர்கள் சொல்லி விட்டு
சென்ற காலம் முடிந்தவுடன்
மீண்டும்
சமாதியை உடைத்து
வெளியே வருவார்கள்.

வெளியில் தங்கள்
தூல தேகத்துடன் உலா வருவார்கள்
மீண்டும் சமாதிக்குள் செல்வார்கள்
இத்தனை ஆண்டுகள் இருப்பேன்
இத்தனை ஆண்டுகள் கழித்து வெளியே
வருவேன் என்று சொல்லி செல்வார்கள்
மீண்டும் உடைத்து வெளியே வருவார்கள்.

வெளியே வந்து தூல உடலுடன் உலவுவார்கள்
தங்கள் கடமை
முடிந்து விட்டது என்பதை
உணர்ந்தவுடன்
தங்கள் கடமை போதும் என்று
முடிவு எடுத்தவுடன்
தாங்கள் இந்த உலகத்தில்
வாழ்ந்தது போதும் என்று
முடிவு எடுத்தவுடன்
இனிமேல் நான் சமாதியை விட்டு
வெளியே வர மாட்டேன்
என்று சொல்லி விட்டு சென்று
விடுவார்கள்.

அவர்கள் தூல தேகம் பிரபஞ்சத்துடன்
பரம்பொருடன் இணைந்து விடும்
உயிரும் பரம்பொருளுடன் இணைந்து விடும்.

சமாதி என்பது
உயிரை உடலில் வைத்து
உயிரின் பின்னமாகிய மனதை
இந்த பிரபஞ்சம் முழுவதும் பரப்பி
அமர்வதற்குப் பெயர் தான் சமாதி.

சமாதி என்பது திரும்பி வர முடியும்
முக்தி என்பது திரும்பி வர முடியாது.

சமாதி என்பது,
இறைவனுக்கு சமமாக மாறுவது;
முக்தி என்பது,
இறைவனாகவே மாறுவது;

இறைவனுக்கு சமாமாக மாறுவது பெரியதா
இறைவனாகவே மாறுவது பெரியதா
என்பதை சிந்தித்தாலே,
முக்தி அடைவதற்கான வழிமுறைகளை
ஆராய முற்படுவோம்.
சமாதி பெரியதா
முக்தி பெரியதா - என்பதை
போகர் தன் போகர்-7000 என்ற புத்தகத்தில்
அதில் உள்ள பாடல்களில்
சமாதியைப் பற்றியும்,
சமாதி அடைந்தவர்கள் நிலைகளைப் பற்றியும்
முக்தியைப் பற்றியும் மட்டுமின்றி
சமாதி பெரியதா ; முக்தி பெரியதா ;
என்பதை,
தெள்ளத் தெளிவாக
அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்
எழுதி இருக்கிறார்.

ஆன்மீகத்தில் ஒரு நிலை அடைந்தவர்கள்;
ஆன்மீகத்தில் சில எல்லைகளைக் கடந்தவர்கள்;
ஆன்மீகத்தில் சில விளக்கங்களைப் பெற்றவர்கள்;
பரம்பொருளை ருசித்தவர்கள்;
பரம்பொருளை உணர்ந்தவர்கள்;
அந்த பாடல்களில் உள்ள
அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

முயற்சி செய்தால்,
ஆன்மீக தாகம் கொண்ட அனைவராலும்,
சமாதிக்கும், முக்திக்கும்
உள்ள வேறுபாட்டையும்,
இரண்டிற்கும் உள்ள முக்கியத்துவத்தையும்
இரண்டில் எது தேவை என்பதையும்
இரண்டில் எது முக்கியமானது என்பதையும்
எதை அடைய நாம்
முயற்சி செய்ய வேண்டும் என்பதையும்
அறிந்து கொள்ளலாம்.

சட்டைமுனி நாதர் வரலாற்றை
தெரிந்து  கொண்டால்
சமாதிக்கும், முக்திக்கும்
உள்ள வேறுபாடு தெரியும்.

சட்டைமுனி நாதர்
காயம் அழியாமல் இருக்க
கற்பம் உண்டவர்
சமாதி இருக்க இடம் பார்த்தார்
சமாதி கட்டச் சொல்லி
சமாதியில் இறங்கி
சமாதி சென்றார்
சட்டைமுனி நாதர் சமாதியில் இருக்கும் போது
1000 சீடர்கள் அவர் சமாதியைப் பாதுகாத்தனர்
ஒரு அசரீரி கேட்டது
32 ஆண்டுகள் கழித்து
நான் சமாதியை விட்டு
வெளியே வருவேன் என்ற அசரீரி கேட்டது.

32 வருடங்கள் கழித்து
சட்டைமுனி நாதர் வருவார் என்று
அவருடைய சீடர்க்ள்
சமாதியைப் பாதுகாத்து
பூசைகள் செய்தனர்.

32 ஆண்டுகள் கழித்து சட்டமுனி நாதர்
சமாதியின் பாறையது வெடித்தபோது
சமாதியின் பாறை வெடித்து
சட்டைமுனி நாதர்
வெளியே வந்தார்.

தன்னுடைய சீடருக்கு போதித்தார்
தேகமானது உலகுதனில்
நிற்காது
நிலை நில்லாது
இந்த பூமியில் இறந்தவர்கள் மீண்டும்
இந்த பூமியில் மீண்டும் வருவதில்லை
கடவுளின் கடாட்சத்தினாலும்
குருவின் அருளினாலும்
இந்த அவனியிலே நான்
மறுபடியும் வந்தேன் என்றார்.

முதல் முறை சமாதியிலிருந்து
வெளியே வந்த சட்டை முனி நாதர்
இரண்டாவது முறையாக சமாதி சென்றார்
அவர் சமாதியில் சென்ற பிறகு
அசரீரி வாக்கு உண்டாயிற்று
16 வருடங்கள்
சமாதியில் இருப்பேன் என்றது.

16 வருடங்கள் கழித்து
சட்டைமுனி நாதர்
வெளிவரும் நாளும் வந்தது
சமாதியின் பாறையதுவும் வெடிக்க
சட்டை முனி நாதர் மேதியினில் வந்தார்.

இப்போது சட்டைமுனி நாதர்
சீடருக்கு உபதேசம் சொன்னார்
இந்த உலகத்தில் இருந்தும் என்ன,
மாளிகைகள் கட்டி இருந்தும் என்ன,
உலகத்தை ஆண்டும் என்ன,
உண்மையாக சிவயோகம் செய்தும் என்ன,
பல நூல்கள் கற்றும் என்ன,
அறிவாளியாக இருந்தால் என்ன,
காயம் அழியாமல் இருக்க
கற்பம் சாப்பிட்டும் என்ன,
ஒரு பிரயோசனமும் இல்லை.

இந்த உலகத்தில் தேகமது
நிலை நில்லாது
இந்த உலகத்தில் இறந்தவர்கள் கோடி
எனவே பாவத்தை நீக்கி
புனிதனாய் மாறி
இறைவனுடன் இரண்டக் கலக்கும்
நிலை அறிந்து
கலந்து விடு என்கிறார்.

நான் முக்தியை நாடி
முக்தியை அடைய
இரண்டு முறை சமாதி சென்றேன்.
நீங்களும் பாவத்திலிருந்து விலக,
பாவத்திலிருந்து தப்பிக்க,
பிறவிச் சுழலிலிருந்து தப்பிக்க,
முக்தியை நாடுவீர்
என்றார்.

சட்டைமுனி நாதர் மீண்டும்
சமாதி புக சென்றார்
தன் சீடர்களை அழைத்து - நான்
சமாதி ஆன பிறகு
என் சமாதியை மூடி விடுங்கள்.
நான் மீண்டும் வர மாட்டேன்
என் சமாதியை
யாரும் திறக்க வேண்டாம் - என்று
உத்தரவு பிறப்பித்தார்.

சித்தர்கள் தங்களுக்கு
எவ்வளவு காலம் வரை
இந்த உலகத்தில் இருக்க வேண்டும்
என்று தெரியும்;
எவ்வளவு காலம் இருந்து
இந்த மக்களுக்கு
நன்மை செய்ய வேண்டும்
என்று தெரியும்;
தங்கள் கடமை முடிந்து விட்டால்
அவர்கள் முக்தி அடைந்து விடுவார்கள்;
மீண்டும் வர மாட்டார்கள்;

அதனால் தான்
சட்டைமுனி நாதர்
நான் மீண்டும் வர மாட்டேன் என்றார்.
இரண்டு முறை
அதாவது,
32 ஆண்டுகள் ஒரு முறையும்,
16 ஆண்டுகள் ஒரு முறையும்,
ஆக இரண்டு முறைகள்
சமாதி அடைந்து
சமாதியை விட்டு வெளியே வந்து
நான் இனி மேல்
வெளியே வர மாட்டேன் என்று
சொல்லி விட்டு சென்று விட்டார்.

தேவைப்படும் போது
சமாதி அடையலாம்
சமாதியை விட்டு வெளியே வரலாம்
அதனால் தான்
சட்டைமுனி நாதர் சமாதியை
விட்டு வெளியே வந்தார்.
முக்தி அடைந்து விட்டால்
வெளியே வர முடியாது
அதனால் தான் சட்டைமுனி நாதர்
நான் வெளியே வர மாட்டேன் என்றார்.

இந்த விவரங்களை போகர்
தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார்.

சமாதி அடைந்தால் மட்டும் போதாது
முக்தி அடைய வேண்டும்
சமாதிக்கும் முக்திக்கும் உள்ள
வேறுபாட்டை உணர்ந்து
முக்தி அடைய முயற்சிக்க வேண்டும்
என்கிறார் போகர்.

இயேசு கிறிஸ்து - போகர்
இயேசு,
நான் மூன்றாம் நாள்
உயிர்த்தெழுவேன் என்றார்
அவ்வாறே உயிர்த்தெழுந்தார்.

அவ்வாறே,
சட்டைமுனி நாதரும்
இத்தனை ஆண்டுகள் கழித்து
நான் சமாதியை விட்டு
வெளியே வருவேன் என்றார்
அவ்வாறே
வெளியே வந்தார்
என்கிறார் போகர்.

""""போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுஎழுபத்துஏழுந் தான்முற்றே""""


1 comment: