May 03, 2020

பரம்பொருள்-பதிவு-228


               ஜபம்-பதிவு-476
             (பரம்பொருள்-228)

“கம்பத்தில்
பொருத்தி
வைக்கப்பட்ட
அரவானுடைய
தலையானது
கம்பத்தில்
இருந்து
மேல் எழும்பி
விஸ்வரூப தரிசனம்
எடுத்து நின்று
கொண்டிருந்த
மஹாவிஷ்ணுவின்
இதயத்தில்
கலந்து
ஒன்றாகி
விட்டது”

“அரவான்
இறைவனுடன்
ஒன்றாகக்
கலந்து
இறைவனாகவே
மாறி விட்டான்”

“ஆமாம் அரவான்
மோட்சம்
அடைந்து
விட்டான்”

“தன்னலம்
கருதாது
மக்களின்
நலத்தை
மட்டுமே
கருத்தில் கொண்டு
தர்மத்தை நிலை
நாட்டுவதற்காக
தன்னையே
களப்பலியாகக்
கொடுத்த
அரவானின்
மாபெரும்
சகாப்தம்
அரவான்
மோட்சம்
அடைந்தவுடன்
முடிந்து விட்டது
என்று சொல்ல
முடியாது”

“ஏனென்றால்
இந்த உலகத்தில்
உள்ள
கோடிக்கணக்கான
திருநங்கைகளின்
மனதில்
இன்றும்
தெய்வமாக
வாழ்ந்து
கொண்டு தான்
இருக்கிறார்
அரவான்”

ஒவ்வொரு
வருடமும்
அரவானை
கணவனாக
நினைத்து
தாலி
கட்டிக் கொண்டு
அரவான்
களப்பலியான
பிறகு
தங்களுடைய
பொட்டை
அழித்து
பூவை
எறிந்து
வளையல்களை
உடைத்து
தாலியை
அறுத்து
அழுது
கொண்டிருப்பவர்கள்
இருந்து
கொண்டு தான்
இருக்கிறார்கள்”

“தன்னுடைய
கணவானான
அரவான்
களப்பலியானதற்காக
வெள்ளைப் புடவை
அணிந்து
கொண்டு
துக்கம்
கொள்பவர்கள்
இருந்து
கொண்டு தான்
இருக்கிறார்கள்”

“அரவானுக்காக
அழுது
கொண்டிருப்பவர்களும்
அரவானை
தெய்வமாக
நினைத்து
வணங்கிக்
கொண்டிருப்பவர்களும்
இருந்து
கொண்டு தான்
இருக்கிறார்கள்”

“இந்த உலகம்
இருக்கும் வரை
இருந்து
கொண்டு தான்
இருக்கப்
போகிறார்கள்”

“””பஞ்ச பாண்டவர்கள்
குருஷேத்திரப் போரில்
வெற்றி
பெற்றதற்கு
முழுக்காரணமே
அரவான்
என்பதை
உணர்ந்து
கொள்வோம்”

“உலூபி என்ற
தெய்வத்தாய்
பெற்றெடுத்த
தெய்வமகனான
அரவானின்
பாதம் தொட்டு
வணங்குவோம்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-05-2020
//////////////////////////////////////////


No comments:

Post a Comment