April 13, 2020

பரம்பொருள்-பதிவு-196


              ஜபம்-பதிவு-444
            (பரம்பொருள்-196)

“நான்
அரவான் என்று
உன்னுடைய
பெயரைச் சொல்லி
ஓங்கி குரலை
எழுப்பியதும்
நீ சற்றும்
தாமதிக்காமல்
இடது கையால்
உன்னுடைய
தலையில் உள்ள
தலை முடியைப்
பிடித்துக் கொண்டு ;
உன்னுடைய
வலது கையில்
உள்ள  வாளால்
உன்னுடைய
கழுத்தை
வெட்ட வேண்டும் ; “

“வலது கையில்
உள்ள வாளால்
உன்னுடைய
கழுத்தை
வெட்டிய பிறகு
வலது கையில்
உள்ள வாளை
வானத்தைப்
பார்த்து
தூக்க வேண்டும்
வெட்டிய வாளின்
கூர்மையான
முனையானது
வானத்தைப்
பார்த்தது போல்
இருக்கவேண்டும் “

“தலையை வெட்டி
முடித்த அதே
நேரத்தில்
இடது கையால்
தலையில் உள்ள
தலையின்
முடியைப் பிடித்து
தலையை
உடலிலிருந்து
பிரித்து எடுத்து
கையினால்
இடது பக்கம்
தலையை தூக்கி
பிடித்துக்
கொள்ள வேண்டும் “

“இடது கையால்
தலை முடியைப்
பிடித்து
தூக்கியவாறு
வைத்துக்
கொள்ள வேண்டும்  

“நீ உன்னுடைய
தலையை
வெட்டிய பிறகு
எப்படி இருக்க
வேண்டும் என்றால்
தலை இல்லாமல்
உடல் மட்டுமே
பூமியில் நிற்க
வேண்டும்  

“வலது கையில்
வெட்டப்பட்ட
வாளின்
முனையானது
வானத்தைப்
பார்த்தது போல்
வலது பக்கம்
இருக்க வேண்டும் “

“வெட்டப்பட்ட
தலையில் உள்ள
முடியை இடது
கையால் தூக்கி
பிடித்த நிலையில்
வெட்டப்பட்ட
தலையானது
இடது பக்கம்
இருக்க வேண்டும் “

“வெட்டப்பட்ட
தலையிலிருந்து
சொட்டும்
இரத்தமானது
பூமியை நனைத்தபடி 
இருக்க வேண்டும் “

“இந்த செயலைத்
தான் நீ
செய்ய வேண்டும் “

“இதில் எந்த ஒரு
விஷயத்தையும்
மறந்து விடக்கூடாது “

“நான்
சொன்னவைகளை
நன்றாக மனதில்
வைத்துக் கொள்
அரவான் “

அரவான் ;
“அடுத்து என்ன
நடக்கும் “

கிருஷ்ணன் :
“அடுத்து என்ன
நடக்கும்
என்பதைப்பற்றி
கவலைப்படாதே
அரவான் !
நீ தலையை
வெட்டிய பிறகு
என்ன நடக்கப்
போகிறது என்பதை
நீ உணர்ந்து
கொள்ளத்தான்
போகிறாய் “

“அதனால் எதைப்
பற்றியும்
கவலைப்படாதே “

“அனைத்தையும்
நான் பார்த்துக்
கொள்கிறேன் “

“நீ உன்னுடைய
தலையை வெட்டி
காளிதேவிக்கு
படைப்பதற்காக
தயாராகக் காத்துக்
கொண்டு
மட்டும் இரு “

அரவான் :
“நான் தயாராக
இருக்கிறேன்
பரந்தாமா ! “

கிருஷ்ணன் :
“சரி”

“நான் அரவான்
என்று ஓங்கி
உன்னுடைய பெயரை
கூப்பிட்டதும்
சற்றும் தாமதிக்காமல்
நான் சொன்னபடி
நீ உன்னுடைய
தலையை
வெட்ட வேண்டும் “

“தயாராக இரு
அரவான்
தயாராக இரு “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 13-04-2020
//////////////////////////////////////////

1 comment:

  1. சிறப்பாக இருக்கு
    தொடருங்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

    ReplyDelete