November 14, 2020

அறிய வேண்டியவை-164

 

ஜபம்-பதிவு-656

(அறிய வேண்டியவை-164)

 

சகுனி :

“நாளை

நடைபெறப்போகும்

பகடை விளையாட்டிலும்

அதைத் தொடர்ந்து

பாண்டவர்களுக்கு

எதிராக

நடைபெறப் போகும்

நிகழ்விலும்

பீஷ்மர் துரோணர்

விதுரர் கிருபர்

ஆகிய நால்வரும் 

ஒன்றும் செய்ய

முடியாமல் அந்த

அவையில்

அமர்ந்திருந்தார்கள்

என்றால் அவையில்

நடக்கக்கூடிய

எந்த ஒரு

நிகழ்வையும்

தடுக்க முடியாமல்

அமர்ந்திருந்தார்கள்

என்றால் அவையை

விட்டு வெளியே

செல்ல முடியாமல்

அவைக்குள்ளேயே

அமர்ந்திருந்தார்கள்

என்றால் நாம் முடிவு

செய்து கொள்ளலாம்

இந்த நால்வரும்

நமக்கு ஆதரவாகத்

தான் இருப்பார்கள்

நமக்காக

போரிடுவார்கள்

என்று முடிவு

செய்து கொள்ளலாம்”

 

கர்ணன் :

“நீங்கள் சொல்வது

அனைத்தும்

நடக்குமா?”

 

சகுனி :

“நடக்கும்

நடந்து தான்

ஆக வேண்டும்

நடத்தி காட்டித்

தான் ஆக வேண்டும்

நடத்த வேண்டிய

கட்டாயத்தில் தான்

நாம் இருக்கிறோம்

நாளை

நடைபெறப் போகும்

பகடை விளையாட்டில்

இருந்தே தெரிந்து

விடும் இந்த

நால்வரும் யார்

பக்கம் இருக்கப்

போகிறார்கள் என்று”

 

துரியோதனன் :

“அதற்கு நான்

என்ன செய்ய

வேண்டும்

மாமா அவர்களே!”

 

சகுனி :

“ஒரு முக்கியமான

செயலைச் செய்ய

வேண்டும் என்

அன்பு மருமகனே!”

 

துரியோதனன் :

“நான் என்ன

செய்ய வேண்டும்

சொல்லுங்கள்

செய்வதற்கு

நான் காத்துக்

கொண்டிருக்கிறேன்”

 

சகுனி :

“என்னுடைய

குழந்தைகளை நீ

வைத்துக் கொள்

என்னுடைய

குழந்தைகளான

என்னுடைய

பகடைகளை நீ

வைத்துக் கொள்

இந்தா பிடி

என்னுடைய

பகடைகளை

கைகளில்

வாங்கிக் கொள்

என் அன்பு

மருமகனே!”

 

துரியோதனன் :

“எதற்காக 

உங்களுடைய

பகடைகளை என்னிடம்

கொடுக்கிறீர்கள்

மாமா அவர்களே!”

 

சகுனி :

“நான் என்னுடைய

பகடைகளை

உன்னிடம்

கொடுப்பதற்கு

ஒரு முக்கிமான

காரணம் இருக்கிறது

அது மட்டுமில்லை

ஒரு ரகசியமும்

மறைந்திருக்கிறது “

 

துரியோதனன் :

“என்ன ரகசியம்

மாமா அவர்களே!”

 

சகுனி :

“------------------------”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------14-11-2020

/////////////////////////////////

No comments:

Post a Comment