March 25, 2022

ஜபம்-பதிவு-714 (சாவேயில்லாத சிகண்டி-48)

 ஜபம்-பதிவு-714

(சாவேயில்லாத

சிகண்டி-48)

 

ஒருவரைக் கொல்வது

தவறு என்றால்

மாரணம் செய்து

யாரைக் கொல்ல

வேண்டும் என்பதை

சர்வ மாரணம்

அரச மாரணம்

சத்துரு மாரணம்

சர்வபூத மாரணம்

சர்வஜீவஜெந்து மாரணம்

சர்வவிஷ மாரணம்

சர்வதேவ மாரணம்

சர்வரிஷி மாரணம்

என்ற எட்டு

வகையான

மாரணங்களில்

மாரணத்தைப் பற்றிச்

சொல்லி இருக்க

மாட்டார்கள் அல்லவா

 

ஒருவரைக் கொல்வது

தவறு என்றால்

மாரணம் செய்து

ஒருவரைக்

கொல்வதற்காக

 

"ஓம்ஆம்

றீங் றீங் சிம்

றீங் கிலி றீங்

பிறீங் பிறீங்

பிறீங் சுவாகா"

 

என்று

மந்திரத்தை எழுதி

வைத்திருக்க

மாட்டார்கள் அல்லவா

 

ஒருவரைக் கொல்வது

தவறு என்றால்

மாரணம் செய்து

ஒருவரைக் கொல்வது

எப்படி என்ற

செய்முறையை

எழுதி வைத்திருக்க

மாட்டார்கள் அல்லவா

 

ஒருவரைக் கொல்வது

தவறு என்றால்

ஒருவரைக்

கொல்வதற்காக

எந்த மந்திரத்தைச்

சொல்ல வேண்டும்

எப்படி சக்கரம்

எழுத வேண்டும்

எந்த பொருட்களைப்

பயன்படுத்த வேண்டும்

எந்த திசையில்

அமர வேண்டும்

எந்த முறையில்

செய்ய வேண்டும்

எந்த காலத்தில்

செய்ய வேண்டும்

எந்த சூழ்நிலையில்

செய்ய வேண்டும்

என்பதை சித்தர்கள்

தங்கள் பாடல்களில்

மாரணத்தைப்

பற்றி எழுதி

வைத்திருக்க

மாட்டார்கள் அல்லவா

 

மந்திரத்தைப் பயன்படுத்தி

மாரணத்தின் மூலம்

ஒருவரைக் கொல்வது

எப்படி தவறில்லையோ

அப்படியே

தவம் செய்து

ஒருவரைக்

கொல்வதும் தவறில்லை

 

சைகாவத்யர் :

பீஷ்மரைக்

கொல்வதற்காகவே

மாரணத்தைப் பற்றி

அதிக விஷயங்கள்

தெறிந்து

வைத்திருக்கிறீர்கள்

 

நீங்கள் சொன்ன

முறைகளைப் பயன்படுத்தி

ஒருவரைக்

கொன்று விட முடியுமா

 

அம்பை :

முடியாது

 

சைகாவத்யர் :

ஏன் முடியாது

 

அம்பை :

சூட்சும விஷயங்கள்

தெரிந்திருக்க வேண்டும்

சூட்சும விஷங்கள்

தெரியாமல்

செய்ய முடியாது

 

சைகாவத்யர் :

சூட்சும விஷயங்கள்

யார் சொல்லித் தருவார்

 

அம்பை :

குரு தான்

சொல்லித் தருவார்

 

சைகாவத்யர் :

குருவைத் தவிர

யாரும் சொல்லித்

தரமாட்டார்கள் இல்லையா

 

குரு இல்லாமல்

எந்த ஒரு

விஷயத்தையும்

செய்ய முடியாது

உண்மைதானே

 

அம்பை :

ஆமாம்

உண்மை தான்

 

அதனால் தான்

உங்களிடம் வந்தேன்

கற்றுக்

கொள்வதற்காக வந்தேன்

 

சைகாவத்யர் :

கற்றுக்

கொள்வதற்காக

வந்தேன் என்று

சொல்லாதீர்கள்

 

பீஷ்மரைக் கொல்வது

எப்படி என்பதைத்

தெரிந்து கொள்வதற்காக

வந்திருக்கிறீர்கள்

என்று சொல்லுங்கள்

 

இறைவனை அறிந்து

இறைவனுடன்

இரண்டறக் கலந்து

இறைவனாக

மாற வேண்டும்

என்பதற்காக

தவம் கற்றுக்

கொள்ள

வந்திருக்கிறார்கள்

 

பிறவி சுழற்சியை

நிறுத்த வேண்டும்

என்பதற்காக

தவம் கற்றுக் கொள்ள

வந்திருக்கிறார்கள்

 

உண்மையை

உணர வேண்டும்

என்பதற்காக

தவம் கற்றுக் கொள்ள

வந்திருக்கிறார்கள்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------25-03-2022

-----வெள்ளிக் கிழமை

////////////////////////////////////////

No comments:

Post a Comment