March 25, 2022

ஜபம்-பதிவு-716 (சாவேயில்லாத சிகண்டி-50)

 ஜபம்-பதிவு-716

(சாவேயில்லாத

சிகண்டி-50)

 

சைகாவத்யர் :

சைவ உணவைச்

சாப்பிட்டால் ஆன்மீகத்தில்

உயர் நிலை

அடையலாம் என்றால்

ஏன் சைவ உணவு

சாப்பிடுபவர்கள்

அனைவரும்

ஆன்மீகத்தில்

உயர்நிலை

அடையவில்லை

 

அசைவ உணவைச்

சாப்பிட்டால்

ஆன்மீகத்தில்

உயர்நிலை அடைய

முடியாது என்றால்

அசைவ உணவைச்

சாப்பிட்டவர்கள்

எத்தனையோ பேர்

ஆன்மீகத்தில்

உயர் நிலை அடைந்து

இருக்கிறார்களே

 

அம்பை :

உயிர்களைக்

கொல்லக்கூடாது

என்கிறார்களே

 

சைகாவத்யர் :

உயிர்கள் என்றால்

மனிதர்களின்

கண்களுக்கு தெரிபவை

ஆடு மாடு கோழி

போன்ற விலங்குகள்

மட்டும் தான்

 

மனிதனும் ஒரு

உயிர் தானே

 

ஆடு மாடு கோழி

போன்ற விலங்குகளை

கொல்லக்கூடாது

என்று சொல்பவர்கள்

மனித உயிர்களை

கொல்கிறார்களே

அது பாவம்

இல்லையா

 

உணவிற்காக

விலங்குகளைக்

கொல்வது

பாவம் இல்லை

 

புலி மானைக்

கொல்வது

பாவம் இல்லை

ஏனென்றால் புலி

மானை உணவிற்காகக்

கொல்கிறது

உணவிற்காகக்

கொல்வது

பாவம் இல்லை

 

உணவிற்காகவும்

அத்தியாவசிய

தேவைக்காகவும்

மனிதன்

விலங்குகளைக்

கொல்வது

பாவம் இல்லை

 

அம்பை :

அத்தியாவசியத் தேவை

என்று நீங்கள்

எதைச் சொல்கிறீர்கள்

 

சைகாவத்யர் :

குளிரிலிருந்து தன்னை

பாதுகாத்துக் கொள்ள

விலங்குகளின் தோலுக்காக

விலங்குகளைக்

கொல்வது

பாவம் இல்லை

 

ஓரிடத்திலிருந்து

மற்றொரு இடத்திற்கு

பிரயாணம்

செல்லும் போது

உணவையும்,

நீரையும்

கொண்டு செல்ல

விலங்குகளின்

தோலைப்

பயன்படுத்துவதற்காக

விலங்குகளைக்

கொல்வது

பாவம் இல்லை.

 

அம்பை :

அசைவ உணவு

சாப்பிடுவது உயிரை

அசுத்தப்படுத்தாதா

 

சைகாவத்யர் :

நம்முடைய தவறான

எண்ணங்கள் தான்

நம்முடைய உயிரை

அசுத்தப்படுத்தும்

 

உண்ணும் உணவு

உயிரை

அசுத்தப்படுத்தாது

 

தினமும் குளித்து

உடலை எப்படி

தூய்மையாக

வைத்திருக்கிறோமோ

அவ்வாறு தவங்கள்

செய்து உயிரை

தூய்மையாக வைத்துக்

கொள்ள வேண்டும்

 

நாம் தினமும்

தவம் செய்வதால்

உயிரில் உள்ள

கர்மா என்னும்

அழுக்குகள் நீங்கும்

 

அம்பை :

48 நாட்கள் விரதம்

இருக்கும் போது

அசைவ உணவு

சாப்பிடக்கூடாது

என்கிறார்களே

 

சைகாவத்யர் :

48 நாட்கள் விரதம்

இருக்கும் போது

எந்த உணவையும்

சாப்பிடக்கூடாது

 

பால்

தண்ணீர் மட்டுமே

சாப்பிட்டு தவம்

செய்ய வேண்டும்

 

காலை மாலை

குளிக்க வேண்டும்

 

வெறும் தரையில்

படுக்க வேண்டும்

 

48 நாட்கள் விரதம்

இருந்து தவம்

செய்யும் போது

உடல்

தளர்ச்சி அடையும்

உடல்

தளர்ச்சி

அடையும் போது

பிரபஞ்ச சக்தி

உடலுக்குள் இறங்கும்

 

48 நாட்கள் விரதம்

இருப்பது என்பது

பிரபஞ்ச சக்தி

நம்முடைய

உடலுக்குள்

இறங்குவதற்காகத்

தான்

 

பிரபஞ்ச

சக்தியுடன் தொடர்பு

கொள்வதற்காகத் தான்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------25-03-2022

-----வெள்ளிக் கிழமை

////////////////////////////////////////

No comments:

Post a Comment