June 10, 2020

திருக்குறள்-பதிவு - 1


           திருக்குறள்-பதிவு - 1

“கற்க கசடற
கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”

-------திருக்குறள்
-------திருவள்ளுவர்

“படிப்பதற்குத் தக்க
நூல்களைப்
பழுதில்லாமல்
படிக்க வேண்டும்;
படித்த பின்பு
படித்ததற்குத் தக்கபடி
வாழ வேண்டும்
இது தான் இந்த
திருக்குறளுக்கு
பொதுவாக
சொல்லப்படும் கருத்து”

“இந்த திருக்குறளுக்கு
கீழ்க்கண்டவாறு
விளக்கம் சொல்லலாம்”

“இலக்கியங்கள்
சாஸ்திரங்கள்
வேதங்கள்
இதிகாசங்கள்
பகவத் கீதை
சித்தர் பாடல்கள்
ஆகியவற்றில்
வாழ்க்கையில்
பின்பற்ற வேண்டிய
நீதிகள் சொல்லப்பட்டு
இருக்கிறது “

நீதி – 1 :
“நண்பனுக்காக நாம்
உயிரைக் கொடுக்கலாம் ;
ஆனால் உயிரைக்
கொடுக்கக்கூடிய நண்பர்கள்
நமக்கு கிடைப்பது
தான் கடினம் ; “

“நம்முடைய நண்பன்
ஒருவருக்கு
துயரம் என்றாலோ
கஷ்டம் என்றாலோ
வேதனையில்
வாடுகிறார் என்றாலோ
அந்த வேதனையை நண்பர்
சொன்னாலும்
சொல்லாவிட்டாலும்
அதை கேட்டு விட்டு
சும்மா இருக்காமல்
நாம் ஓடி போய்
உதவி செய்வோம் ;
நம்முடைய வேலை
நம்முடைய குடும்பம்
விடுப்பு நாள்
சனிக்கிழமை
ஞாயிற்றுக் கிழமை
என்றும் பார்க்காமல்
உதவிகள் செய்வோம் ;
ஆனால் நமக்கு ஒரு
துன்பம் என்றால்
அதைத் தெரிந்து கொண்டு
ஓடிப்போய் உதவி
செய்வோம் என்று
நமக்காக உதவி
செய்ய ஒடி வரும்
நண்பர்கள் நமக்கு
கிடைப்பது தான் கடினம் ;”

நீதி – 2 :
“உலகத்திலேயே
மிகப்பெரிய முட்டாள்தனம்
நம்முடைய கஷ்டங்களையும்
நம்முடைய வேதனைகளையும்
நம்முடைய வலிகளையும்
நம்முடைய துன்பங்களையும்
பிறரிடம் சொல்லி
அவர்கள் நம்முடைய
துயரங்களைப்
புரிந்து கொண்டு
உதவி செய்வார்கள்
என்று நினைத்து
கஷ்டங்களைப் புரிந்து
கொள்ளாதவர்களிடம்
சொல்வது தான் ;”

“நமக்கு ஏதேனும்
துன்பம் ஏற்பட்டால்
முதலில் தேடுவது
நமக்கு ஆறுதல்
வார்த்தைகளை
யாராவது சொல்ல
மாட்டார்களா என்று தான் ;
அதற்குப் பிறகு தான்
உதவி செய்வதற்கு
யாரேனும் வருவார்களா
என்று உதவிக்கு
ஆட்களை எதிர்பார்ப்போம்;”

“அதாவது
கண்ணீலிருந்து விழும்
கண்ணீரைத் துடைப்பதற்கு
ஒரு கரம்
முதலில் வேண்டும் ;
பிறகு அந்த கண்ணீருக்கு
காரணமான பிரச்சினையைத்
தீர்க்க ஒருவர்
வேண்டும் ;”

“ஆனால் நம்முடைய
கஷ்டங்களைப் புரிந்து
கொள்ளாதவர்களிடம்
நம்முடைய கஷ்டங்களை
சொல்வதால் ஒரு
பயனும் இல்லை ;
நாம் சொல்லாமல்
இருந்தாலும்
நம்முடைய கஷ்டம் என்ன
என்று தெரிந்தாலும்
உதவி கேட்டு
விடுவார்களோ
என்று அஞ்சி
நம்முடைய பிரச்சினையை
காது கொடுத்து கேட்பது
போல் கேட்டு விட்டு
நம்முடைய
பிரச்சினைக்குள் நுழையாமல்
பிரச்சினைக்குள் தங்களை
ஈடுபடுத்திக் கொள்ளாமல்
ஒதுங்கி சென்று
விடுவார்கள் “

“ஏனென்றால் நாம் நீச்சல்
தெரியாமல் ஓடும் ஆற்று
நீரில் தத்தளித்துக்
கொண்டிருப்பவர்கள் ;
அவர்கள் கரையின்
மேல் நின்று வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ;”

“உயிருக்குப் போராடிக்
கொண்டிருப்பவர்களுடைய
நிலைமை கரையில்
இருந்து வேடிக்கைப்
பார்ப்பவர்களுக்குத் தெரியாது “

“ஆகவே நம்முடைய
துன்பங்களினால்
ஏற்பட்ட வேதனைகளை
அதைப் புரிந்து கொண்டு
உதவி செய்யாதவர்களிடம்
சொல்லி ஒரு பயனும் இல்லை “

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------10-06-2020

/////////////////////////////////////////

No comments:

Post a Comment