November 23, 2020

அறிய வேண்டியவை-166

 

ஜபம்-பதிவு-658

(அறிய வேண்டியவை-166)

 

"இவை அனைத்தும்

பகடை

விளையாட்டானது

தொடங்குவதற்கு

முன்னர்

பீஷ்மர் செய்யும்

செயல்கள் ஆகும் "

 

"நான் கேட்பது

நான் என்னுடைய

கையால் பகடையை

எடுத்து உருட்டத்

தொடங்குவதற்கு

முன்னால்

அதைத் தடுக்க

முன் வருபவர்

யார் என்று

தெரியுமா என்று

தான் கேட்கிறேன்."

 

துரியோதனன் :

"பீஷ்மரைத் தவிர்த்து

குறிப்பிட்டுச்

சொல்ல வேண்டும்

என்றால்

துரோணர் தடுப்பார் ;

கிருபர் தடுப்பார் ;

விதுரர் தடுப்பார் ;

அவர்களோடு

பாண்டவர்கள்

மேல் பாசம்

வைத்திருப்பவர்கள்

அனைவரும்

வந்து தடுப்பார்கள் ".

 

சகுனி :

"நீ சொல்வது

முற்றிலும்

தவறு மருமகனே"

 

"நான் பகடையை

என்னுடைய

கைகளால் எடுத்து

உருட்டத்

தொடங்குவதற்கு

முன்னால்

அதைத் தடுக்கும்

எண்ணத்துடன்

எனக்கு முன்னால்

வந்து நிற்பவர்

விதுரர் மட்டுமே !"

 

"விதுரர் மட்டும்

தான் என் முன்னால்

வந்து நிற்பார்."

 

"வேறு யாரும்

என் முன்னால்

வந்து நிற்க

மாட்டார்கள்"

 

"வேறு யாரும்

தடுக்கும் முயற்சியை

செய்ய மாட்டார்கள்"

 

துரியோதனன்  :

"ஏன் விதுரரை

மட்டும்

சொல்கிறீர்கள்?"

 

"நீங்கள் பகடையை

உருட்டும் போது

பீஷ்மர்

தடுக்கமாட்டாரா?"

 

"துரோணர்

தடுக்க

மாட்டாரா?"

 

"கிருபர் தடுக்க

மாட்டாரா?"

 

சகுனி :

"துரோணரும்

கிருபரும்

நான் பகடை

உருட்டுவதை

தடுக்க

மாட்டார்கள்.

தடுப்பதற்கு

முன்வரவும்

மாட்டார்கள்.

ஏனென்றால்

துரோணருக்கும்

கிருபருக்கும்

நான் பகடை

உருட்டுவதை

தடுக்கும்

அதிகாரம்

கிடையாது,"

 

"ஆனால் என்னை

தடுக்கும் அதிகாரம்

பீஷ்மருக்கும்

விதுரருக்கும்

இருக்கிறது"

 

"பீஷ்மர் நான்

பகடையை

என்னுடைய

கையால் எடுத்து

பகடையை

என்னுடைய

கைகளால் உருட்டத்

தொடங்குவதற்கு

முன்னர் வந்து

தடுக்க மாட்டார் ;

அவர் பகடை

விளையாட்டு

ஆரம்பிக்கும் போது

தான் தடுப்பார் ;

நான் பகடையை

உருட்டும் போது

வந்து தடுக்க

மாட்டார் : "

 

"ஆனால் விதுரர்

மட்டுமே

நான் பகடை

உருட்டுவதற்கு

முன்னர் வந்து

தடுப்பார்

கேள்விகள்

கேட்பார்,

ஏனென்றால்

விதுரர் யோசிக்கும்

அளவிற்கு

பீஷ்மர் யோசிக்க

மாட்டார்"

 

"பகடையை

நான் கையில்

எடுத்து உருட்டுவதற்கு

ஆரம்பிக்கும் போது

அதை தடுப்பதற்காக

என் முன்னால்

வந்து நிற்பவர்

விதுரர்

மட்டும் தான்"

 

"விதுரர்

மட்டும் தான்

நான் பகடை

உருட்ட

ஆரம்பிப்பதற்கு

முன்னர்

வந்து நிற்பார்"

 

துரியோதனன் :

"ஏன் அவ்வாறு

சொல்கிறீர்கள் ?"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////

No comments:

Post a Comment