November 23, 2020

அறிய வேண்டியவை-171

 

ஜபம்-பதிவு-663

(அறிய வேண்டியவை-171)

 

(அஸ்தினாபுரம்

அவையில்

திருதராஷ்டிரன்

தலைமையில்

பாண்டவர்கள்

கௌரவர்கள்

பீஷ்மர், துரோணர்,

விதுரர், கிருபர்,

சகுனி உட்பட

பலர் அமர்ந்து

இருந்தார்கள். 

 

அவை ஆரம்பித்த

பின்னர் பகடை

விளையாட்டை

தொடங்குவதற்கு

முன்னால் பகடை

விளையாட்டை

எப்படி நடத்துவது

எந்த விதத்தில்

நடத்துவது,

எந்த முறையில்

நடத்துவது,

எந்த விதிகளைப்

பின்பற்றி நடத்துவது,

பகடை விளையாட்டை

நடத்துவதற்கு

ஏற்கனவே இருக்கும்

விதிமுறைகள்

போதுமானவையா

அல்லது புதியதாக

ஏதேனும்

விதிமுறைகள்

உருவாக்கப்பட

வேண்டுமா என்ற

முறையில்

பல்வேறு கேள்விகள்

அவையில் எழுப்பப்பட்டு

அந்த கேள்விகளின்

மேல் பல்வேறு

கருத்துக்கள், பேச்சுக்கள்,

கேள்விகள், சந்தேகங்கள்

என்று அவையில்

உள்ளவர்களால்

பல்வேறு

நிலைகளில்

விவாதங்கள்

நடத்தப்பட்டு

விவாதங்களின் முடிவில் 

பகடை விளையாட்டை

நடத்துவதற்குத்

தேவையான

விதிமுறைகளை

அனைவரும்

ஒன்று சேர்ந்து

உருவாக்கி விட்டு,

உருவாக்கப்பட்ட

விதிகளுக்குள் தான்

பகடை விளையாட்டை

விளையாட வேண்டும்,

உருவாக்கப்பட்ட

விதிகளை மீறி

பகடை விளையாட்டை

விளையாடக்கூடாது

அவ்வாறு நடத்தினால்

பகடை

விளையாட்டானது

பாதியில் நிறுத்தப்படும்

என்றும் பகடை

விளையாட்டானது

கண்ணியத்துடன் தான்

நடத்தப்பட வேண்டும்

என்றும்

கட்டுப்பாட்டுடன் தான்

நடத்தப்பட வேண்டும்

என்றும்

வரையறுக்கப்பட்ட

விதிகளுக்குள் தான்

நடத்தப்பட வேண்டும்

என்றும்

அறிவுரை வழங்கிவிட்டு

அதனை அவையில்

உள்ள அனைவராலும்

ஏற்றுக் கொள்ளப்பட்டு

பகடை விளையாட்டை

தொடங்கலாம் என்று

அனுமதி அளிக்கப்பட்டு

விட்டது.”

 

துரியோதனனிடமும்,

கர்ணனிடமும்

சகுனி என்ன

பேசினாரோ

அந்த விஷயங்கள்

அனைத்தும்  

அப்படியே

நடைபெற்றுக்

கொண்டிருந்தது

 

சகுனி பகடையை

கைகளில் எடுத்து

உருட்டத் தொடங்கும்

போது நிறுத்துங்கள்

என்று ஒரு சத்தம்

அந்த அவையை

கிழித்துக் கொண்டு

அந்த அறை முழுவதும்

எதிரொலித்தது.

 

அவையில் உள்ள

அனைவரும் சத்தம்

வந்த திசையையே

நோக்கி பார்த்தனர்

சத்தத்தை

எழுப்பியது யார்

பகடை விளையாட்டை

நிறுத்தச் சொன்னது

யார் என்று அறிவதற்காக

அனைவரும் சத்தம்

வந்த திசையை

நோக்கி தங்கள்

பார்வையைத்

திருப்பினர்.

 

நிறுத்துங்கள் என்று

சொல்லிக் கொண்டே

விதுரர் தன்னுடைய

இருக்கையில்

இருந்து எழுந்து

சகுனியிடம் வந்தார்

 

சகுனி இருக்கும்

இடத்தை நோக்கி

நடந்து வந்தார்.

 

சகுனியின் எதிரே

வந்து நின்றார்

 

சகுனியிடம் பேசத்

தொடங்கினார்.

 

விதுரர் என்ன பேசப்

போகிறார் என்று

அந்த அவையில்

உள்ள அனைவரும்

கவனித்துக்

கொண்டிருந்தனர்

 

துரியோதனனும்,

கர்ணனும் நடக்கும்

நிகழ்வுகள் அனைத்தும்

சகுனி சொன்னது

போலவே நடந்து

கொண்டு இருப்பதை

நேரில் தங்களுடைய

கண்களால் கண்டு

ஆச்சரியத்தால்

நின்று கொண்டிருந்தனர்

 

விதுரர் சகுனியிடம்

பேசத் தொடங்கினார்)

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------23-11-2020

/////////////////////////////////

No comments:

Post a Comment