November 18, 2022

ஜபம்-பதிவு-898 மரணமற்ற அஸ்வத்தாமன்-30 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-898

மரணமற்ற

அஸ்வத்தாமன்-30

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

ஒரு தாய்

தன்னுடைய

குழந்தையை

தன்னுடைய

வயிற்றில்

பத்து மாதம்

சுமந்திருக்கும் போது

குழந்தைக்கு

எந்த ஒரு பாதிப்பும்

ஏற்பட்டு

விடக்கூடாது

என்பதற்காக

கஷ்டங்கள்

பலவற்றை தான்

மட்டுமே அனுபவித்து

உண்ணாமல்

உறங்காமல்

குழந்தையை

பாதுகாத்து

மிகப்பெரிய

வலியைப்

பொறுத்துக் கொண்டு

குழந்தையைப்

பெற்றெடுத்து விட்டு

உடலில்

ஏற்பட்ட வலியால்

கண்களைத்

திறக்க முடியாமல்

கை கால்களை

அசைக்க முடியாமல்

எழுந்திருக்க

முடியாமல்

படுத்த நிலையில்

இருக்கும் போது

அந்தத் தாயின்

முகத்தருகே

அவள் பெற்றெடுத்த

குழந்தையைக்

கொண்டு வந்து

காட்டும் போது

முதன் முதலாக

அந்தக் குழந்தையை

அந்தத் தாய்

பார்க்கும் போது

தன்னுடைய

குழந்தையை

தன்னுடைய

கைகளால்

தூக்க முடியாமல்

தன்னுடைய

கண்களால்

மட்டுமே கண்டு

தன்னுடைய

கண்ணீரால்

தழுவும் போது

அந்தத் தாயின்

மனதில் ஏற்படும்

மகிழ்ச்சி இருக்கிறதே

அந்த மகிழ்ச்சி தான்

உலகத்திலேயே

பெரிய மகிழ்ச்சி

அந்த மகிழ்ச்சியை

விட பெரிய

மகிழ்ச்சி இந்த

உலகத்திலேயே இல்லை

 

கிருபி :

நீங்கள் சொல்வது

உண்மை தான்

 

அந்த மகிழ்ச்சியை

நான் அனுபவித்தேன்

 

அந்த மகிழ்ச்சியை

விட பெரிய மகிழ்ச்சி

இந்த

உலகத்திலேயே

இல்லை என்பது

உண்மை தான்

 

துரோணர் :

இப்போது சொல்

மகன் பிறந்தது

மகிழ்ச்சியா

அல்லது

அந்த இறைவனே

மகனாகப் பிறந்தது

மகிழ்ச்சியா

 

கிருபி :

எனக்கு குழந்தை

பிறந்ததே

மகிழ்ச்சி தான்

 

துரோணர் :

புரிந்து கொண்டாய்

 

கிருபி :

புரியாததை

புரிய வைக்க

நீங்கள்

இருக்கும் போது

புரிந்து கொள்வதில்

எனக்கு என்ன

சிரமம் ஏற்படப்

போகிறது

 

அனைத்தையும்

அறிந்தவர் நீங்கள்

நம்முடைய மகனுக்கு

நீங்கள் தான்

ஒரு நல்ல பெயர்

வைக்க வேண்டும்

 

துரோணர் :

நம்முடைய மகனை

கஷ்டப்பட்டு

பெற்றெடுத்தவள்

நீ தான்

 

நம்முடைய

மகனுக்கு

பெயர் வைக்கும்

உரிமையும்

உனக்குத் தான்

இருக்கிறது

 

கிருபி :

நீங்கள் கொடுத்ததை

நான் ஏற்றுக்

கொண்டதால் தானே

நமக்கு மகனே

பிறந்திருக்கிறான்

 

ஏற்றுக்

கொள்பவர்களை விட

கொடுப்பவர்கள் தானே

உயர்ந்தவர்கள்

நீங்கள்

கொடுக்கவில்லை

என்றால்

எனக்கு மகன்

பிறந்திருக்க

மாட்டானே

 

நீங்கள் தான்

உயர்ந்தவர்

நம்முடைய

மகனுக்கு பெயர்

வைக்கும் உரிமை

உங்களுக்கு

மட்டுமே இருக்கிறது

 

நீங்கள் தான்

பெயர் வைக்க

வேண்டும்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------18-11-2022

------வெள்ளிக் கிழமை

 

/////////////////////////////////////////

No comments:

Post a Comment