November 28, 2022

சூழ்ச்சி முடிவு - பதிவு-1 திருக்குறள்

 சூழ்ச்சி முடிவு

- பதிவு-1

திருக்குறள்

 

சூழ்ச்சி முடிவு

துணிவெய்தல்

அத்துணிவு

தாழ்ச்சியுள்

தங்குதல் தீது

 

திருக்குறள்—671

 

ஆராய்ந்து

எண்ணுவதற்கு

எல்லை துணிவு

கொள்வதே ஆகும்.

அவ்வாறு

கொண்ட துணிவு

காலந் தாழ்த்து

நிற்பது குற்றமாகும்

என்று

இத்திருக்குறளுக்கு

பொதுவாக விளக்கம்

சொல்லப்படுகிறது.

 

சூழ்ச்சி செய்தால்

தான் ஒரு

செயலில் வெற்றி

பெற முடியும்

என்றால்,

சூழ்ச்சி

செய்வதற்கான

சந்தர்ப்பத்திற்காகக்

காத்திருந்து

அந்த சந்தர்ப்பம்

வரும் போது

கால தாமதம்

செய்யாமல் வந்த

சந்தர்ப்பத்தைப்

பயன்படுத்தி

சூழ்ச்சி செய்தால்

வெற்றி பெற

முடியும் என்று

இத்திருக்குறளுக்கு

தெளிவாக

விளக்கம்

சொல்லலாம்.

மாவீரன் என்றால்

தன் நாட்டின்

மீது படை

எடுத்து வந்த

எதிரியை போர்

செய்து புறமுதுகு

காட்டி ஓட

வைப்பவனும்

எதிரிப் படையுடன்

போர் செய்து தன்

நாட்டுக்காக

போரில்

இறப்பவனும் தான்

மாவீரன் என்று

சொல்ல முடியும்

 

அலெக்ஸாண்டர்

நாடு பிடிக்கும்

ஆசையில் பல்வேறு

நாடுகளின் மேல்

படை எடுத்தவன்.

 

மக்களை இரக்கமின்றி

கொன்று குவித்தவன்.

நாட்டில் இரத்த

ஆற்றை அல்ல

கடலையே

ஓட விட்டவன்

நாட்டில் உள்ள

வளங்களை

எல்லாம் அழித்தவன்

நாட்டில் உள்ள

செல்வ வளங்களை

எல்லாம் கொள்ளை

அடித்தவன்

அப்படிப்பட்ட

அலெக்ஸாண்டரை

எப்படி மாவீரன்

என்று

சொல்ல முடியும்

 

கிரேக்கத்தில்

உள்ளவர்கள்

வேண்டுமானாலும்

அலெக்ஸாண்டரை

மாவீரன் என்று

சொல்லிக்

கொள்ளட்டும்

 

கிரேக்கத்தில்

உள்ள வரலாற்று

ஆசிரியர்கள்

வேண்டுமானாலும்

அலெக்ஸாண்டரை

மாவீரன் என்று

எழுதி வைத்துக்

கொள்ளட்டும்

 

அதில் தவறில்லை

அது அவர்களுடைய

விருப்பம்

 

ஆனால், இந்தியாவில்

உள்ள மக்களே

அலெக்ஸாண்டரை

மாவீரன் என்று

சொல்வது தான்

வருத்தப்பட

வேண்டிய

விஷயம்.

 

இது மிகப்பெரிய

தவறு.

 

இந்திய நாட்டின்

மீது படை

எடுத்து வந்து

பல்லாயிரக்கணக்கான

மக்களைக்

கொன்று குவித்த

அலெக்ஸாண்டரை

இந்திய நாட்டு

மக்களே மாவீரன்

என்று சொல்வது

எப்படி சரியாக

இருக்கும்

 

உண்மையிலேயே

மாவீரன் என்ற

சொல்லுக்கு

பொருத்தமானவர்

யார் என்றால்

அது போரஸ் என்ற

புருஷோத்தமன் தான்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------28-11-2022

------திங்கட் கிழமை

 

/////////////////////////////////////////

 

No comments:

Post a Comment