November 28, 2022

சூழ்ச்சி முடிவு - பதிவு-2 திருக்குறள்

 சூழ்ச்சி முடிவு

- பதிவு-2

திருக்குறள்

 

உலகத்தையே தன்

காலடியில் கொண்டு

வர வேண்டும் என்று

இரத்த வெறி பிடித்து

அலைந்து

கொண்டிருந்த

அலெக்ஸாண்டரை

எதிர்த்து நின்று

போராடி

அலெக்ஸாண்டருக்கே

மரணபயத்தைக்

காட்டிய

போரஸ் தான்

மாவீரன்

என்று சொல்லுக்குத்

தகுதி உடையவர்

 

அலெக்ஸாண்டர்

கிரேக்கத்தில்

மாசிடோனியா

பகுதியை ஆண்டவர்

போரஸ் என்ற

புருஷோத்தமன்

இந்தியாவில் பஞ்சாப்

பகுதிகளை ஆண்டவர்

அலெக்ஸாண்டருக்கும்

போரஸ் என்ற

புருஷோத்தமனுக்கும்

கி.மு.326-ஆம் ஆண்டு

ஜீலம் நதிக்கரையில்

ஹைடாஸ்பேஸ்

என்னுமிடத்தில்

போர் நடைபெற்றது

 

போர் என்றால்

அப்படி ஒரு போர்

உக்கிரமான போர்

யாரும் நினைத்து கூட

பார்க்க முடியாத போர்

அலெக்ஸாண்டர் தன்

வாழ்நாளில்

சந்தித்திராத போர்

அலெக்ஸாண்டருக்கு

மரண பயத்தைக்

காட்டிய போர்

அலெக்ஸாண்டர்

மரணத்தின் வாசலை

தொட்டு விட்டு

வந்த போர்

அலெக்ஸாண்டரின்

படை வீரர்கள்

மரண பயத்தால்

அலறித் துடித்த

போர்

 

இந்தப் போரில் தான்

அலெக்ஸாண்டரும்

அவருடைய

படை வீரர்களும்

முதன் முதலாக

யானைப் படையைக்

கண்டு மிரண்டனர் 

யானைப் படையுடன்

போர் செய்வதற்கு

பயந்தனர்

 

போரஸின் படையில்

200 போர் யானைகள்

இருந்தன அவைகள்

சாதாரண யானைகள்

கிடையாது

 

போர்ப் பயிற்சி பெற்ற

யானைகள் ஒரு

யானையைப்

பழக்குவது

அவ்வளவு எளிதான

காரியம் கிடையாது

ஒரு யானையைப்

பழக்குவதற்கு

குறைந்தது

பத்து முதல்

பதினைந்து

ஆண்டுகள் ஆகும்

 

போரஸின் படையில்

இருந்த ஒவ்வொரு

யானைக்கும் ஒரு

பெயர் உண்டு

அந்த யானையின்

பெயரைச் சொல்லியோ

கையை அடித்தோ

விசில் அடித்தோ

என்ன வேலையைச்

செய்யச்

சொல்கிறோமோ

அந்த வேலையை

அப்படியே செய்யும்

வகையில்

பழக்கப்பட்டிருந்தன

அந்த யானைகள்

 

யானைப் படையைத்

தோற்கடிக்கும்

வழி தெரியாத

அலெக்ஸாண்டரும்

அவருடைய

படை வீரர்களும்

போர் செய்யவே

பயந்தனர்

 

தன்னிடம் அடிபணிந்த

தட்ச சீலம் அம்பியிடம்

யானைப் படையைத்

தோற்கடிக்கும் வழியைத்

தெரிந்து கொண்ட

அலெக்ஸாண்டர்

யானையின்

தும்பிக்கையை

வெட்டினான்

 

யானையின் கால்களில்

காயங்களை

ஏற்படுத்தினான்

யானைகளைப்

போரிடாமல்

செய்து அவைகளைக்

கொன்றான்

 

யானைகளை மட்டும்

அல்ல மக்களையும்

கொன்று குவித்தான்

அலெக்ஸாண்டர்

இதனால் ஜீலம் நதி

இரத்த சிவப்பாக

மாறி ஓடியது

 

இருந்தாலும்

அலெக்ஸாண்டர்

போரஸுடன்

நேருக்கு நேராக

நின்று போர்

செய்யவில்லை

மறைந்து மறைந்து

போர் செய்தான்

கோழையைப் போல்

போரஸுக்கு பின்னால்

மறைந்து நின்று

போர் செய்தான்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------28-11-2022

------திங்கட் கிழமை

 

/////////////////////////////////////////

 

No comments:

Post a Comment