November 28, 2022

சூழ்ச்சி முடிவு - பதிவு-4 திருக்குறள்

 சூழ்ச்சி முடிவு

- பதிவு-4

திருக்குறள்

 

நாளை உங்களுக்கும்

என்னுடைய

கணவருக்கும்

இடையே நடக்கும்

போரில் நீங்கள்

என்னுடைய கணவரை

கைது செய்யுங்கள்

 

ஆனால்

கொல்லக்கூடாது

என்னுடைய கணவரைக்

கொல்ல மாட்டேன்

என்ற வாக்குறுதியை

மட்டும் எனக்கு

அளியுங்கள்

அது போதும்

என்றாள்

ரோக்ஸானா

 

நான் எப்போது

உங்களை

என்னுடைய

தங்கையாக ஏற்றுக்

கொண்டேனோ

அப்போதே

உங்கள் கணவரான

அலெக்ஸாண்டர்

எனக்கு

தங்கையின் கணவர்

ஆகி விட்டார்

 

தங்கையின்

கணவரை

எப்படி நான்

கொல்வேன்

 

நாளை நடக்கும்

போரில்

அலெக்ஸாண்டரை

நான் கைது

செய்வேன்

ஆனால் கொல்ல

மாட்டேன் என்ற

வாக்குறுதியை

உங்களுக்கு

அளிக்கிறேன்

என்றார் போரஸ்

 

மறுநாள்

அலெக்ஸாண்டருக்கும்

போரஸுக்கும் இடையே

பயங்கரமான

போர் நடைபெற்றுக்

கொண்டிருந்தது

ஒரு கட்டத்தில்

அலெக்ஸாண்டரின்

குதிரையான

பியூசிபேலஸை

நோக்கி போரஸ்

தனது ஈட்டியை

எறிந்தான்

கீழே விழுந்த

பியூசிபேலஸ்

குதிரையானது

துடி துடித்து

இறந்தது

 

அலெக்ஸாண்டர்

தன்னுடைய

உயிரையே

வைத்திருந்த

அலெக்சாண்டரின்

குதிரையான

பியூசிபேலஸ்

இறந்தது

இந்தப்

போரில் தான்

 

பியூசிபேலஸ்

குதிரையின்

மேல் அமர்ந்து

கொண்டு இருந்த

அலெக்ஸாண்டர்

குதிரையின்

மீதிருந்து

கிழே விழுந்தான்

 

அலெக்ஸாண்டர்

அருகில் வந்த

போரஸ்

அலெக்ஸாண்டரின்

தலையை வெட்டி

கொல்வதற்காக

வாளை

ஓங்கும் போது

தன்னுடைய

மணிக்கட்டுப்

பகுதியில்

கட்டப்பட்டிருந்த

கயிறைக்

கவனித்தான்

 

அலெக்ஸாண்டர்

மனைவி

ரோக்ஸானாவுக்கு

கொடுத்த வாக்குறுதி

நினைவில் வந்ததால்

அலெக்ஸாண்டரைக்

கொல்லாமல்

வாளைக் கீழே

இறக்கினான்

போரஸ்

 

ஏன் ஓங்கிய

வாளை கீழே

இறக்கி விட்டாய்

எதற்காக

தடுமாறுகிறாய்

என்னைக் கொன்று

உன்னுடைய

பகை உணர்ச்சியைத்

தீர்த்துக் கொள்

என்றான்

அலெக்ஸாண்டர்

 

நாங்கள் வாக்கு

கொடுத்து விட்டால்

அதை உயிரைக்

கொடுத்தாவது

நிறைவேற்றுவோம்

கொடுத்த

வாக்கை விட

பெரியதாக

நாங்கள் எதையுமே

நினைப்பதில்லை

எங்களுக்கு

கொடுத்த வாக்கு

தான் முக்கியம்

அதற்காக நாங்கள்

எது

வேண்டுமானாலும்

செய்வோம்

 

நான் உன்னுடைய

மனைவி

ரோக்ஸானாவுக்கு

வாக்கு

கொடுத்திருக்கிறேன்

என்னுடைய

தங்கையாக

ஏற்றுக் கொண்டதால்

வாக்கு

கொடுத்திருக்கிறேன்

உன்னைக் கொல்ல

மாட்டேன்

கைது மட்டுமே

செய்வேன் என்று

வாக்கு

கொடுத்திருக்கிறேன்

கொடுத்த வாக்கை

என்றுமே நாங்கள்

மீறியதில்லை

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------28-11-2022

------திங்கட் கிழமை

 

/////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment