December 04, 2022

சூழ்ச்சி முடிவு - பதிவு-5 திருக்குறள்

சூழ்ச்சி முடிவு

- பதிவு-5

திருக்குறள்

 

அதனால் என்று

சொல்வதற்குள்

அலெக்ஸாண்டரின்

வீரர்கள் போரஸை

சூழ்ந்து கொண்டு

அவரைக்

கைது செய்து

கைதியாக்கி

சிறையில்

அடைத்தனர்.

 

அரசவையில்

சிம்மாசனத்தில்

வீற்றிருந்த

அலெக்ஸாண்டர்

முன் கைது

செய்யப்பட்ட

போரஸை

கைதியாக

அவர் முன்

கொண்டு வந்து

நிறுத்தினர்

 

உன்னை எப்படி

நடத்த வேண்டும்

என்று போரஸைப்

பார்த்து

அலெக்ஸாண்டர்

கேட்டார்

 

என்னை ஒரு

அரசனைப் போல

நடத்த வேண்டும்

என்று பதில்

அளித்தார்

போரஸ்

 

அந்த வார்த்தைக்குப்

பின்னால் ஆயிரம்

அர்த்தங்கள்

மறைந்து இருந்தது

 

உன்னுடைய

மனைவி

ரோக்ஸானாவை

என்னுடைய

தங்கையாக

ஏற்றுக் கொண்டேன்

 

உன்னைக்

கொல்ல மாட்டேன்

கைது மட்டுமே

செய்வேன் என்று

வாக்குறுதி

கொடுத்தேன்

உன்னுடைய

குதிரை

பியூசிபேலஸைக்

கொன்றேன்

குதிரையிலிருந்து

கீழே விழுந்து

மண்ணைக் கவ்விய

உன்னைக்

கொல்லாமல்

விட்டேன்

 

உனக்கு

உயிர் பிச்சை

அளித்தேன்

 

இன்று நீ உயிரோடு

இருப்பதே நான்

உனக்கு போட்ட

பிச்சையினால் தான்

 

இவ்வளவும்

நடப்பதற்குக்

காரணம்

உன்னுடைய

மனைவி

ரோக்ஸானாவை

நான் ஒரு

அரசிக்குரிய

மரியாதையுடன்

நடத்தியதால் தான்

என்ற

அர்த்தங்கள் தான்

போரஸ்

சொன்ன

வார்த்தையில்

அடங்கி இருந்தது

 

என்னை ஒரு

அரசனைப் போல்

நடத்த வேண்டும்

என்று போரஸ்

சொன்ன

வார்தையின்

அர்த்தம்

அலெக்ஸாண்டருக்கும்

அலெக்ஸாண்டரின்

மனைவி

ரோக்ஸானாவுக்கும்

போரஸுக்கும்

மட்டுமே தெரியும்

 

மூன்று பேருக்கு

மட்டுமே தெரிந்த

இந்த விஷயம்

இந்த உலகத்திற்கே

தெரிந்தால்

தன்னுடைய

மானம் மரியாதை

போய் விடும் என்ற

காரணத்தினால் தான்

நீ ஒரு சிறந்த வீரன்

உன்னைப் போன்ற

ஒரு வீரனை

இது வரை நான்

பார்த்ததில்லை

 

உன்னுடைய

நாட்டை திருப்பிக்

கொடுக்கிறேன்

 

இன்று முதல்

நாம் இருவரும்

நண்பர்கள்

என்று சொன்னான்

அலெக்ஸாண்டர்

 

போரஸுடன்

நேர்வழியில் நின்று

போரிட்டால்

வெற்றி பெற

முடியாது

சூழ்ச்சி

செய்து தான்

வெற்றி பெற

முடியும் என்பதைத்

தெரிந்து கொண்ட

அலெக்ஸாண்டர்

தக்க சந்தர்ப்பம்

பார்த்து

தன்னுடைய

மனைவி

ரோக்ஸானாவை

அனுப்பி வைத்து

போரஸிடம்

வாக்குறுதியை

பெற வைத்து

போரில்

போரஸை மூலம்

சூழ்ச்சி செய்து

தோற்கடித்து

வெற்றி பெற்றான்

 

அலெக்ஸாண்டருக்கு

கிடைத்த வெற்றி

சூழ்ச்சியால் கிடைத்தது

நேர்வழியில் கிடைத்தது

கிடையாது

சூழ்ச்சி செய்தால்

தான் ஒரு செயலில்

வெற்றி பெற

முடியும் என்றால்,

சூழ்ச்சி செய்வதற்கான

சந்தர்ப்பத்திற்காகக்

காத்திருந்து

அந்த சந்தர்ப்பம்

வரும் போது

கால தாமதம்

செய்யாமல்

வந்த சந்தர்ப்பத்தைப்

பயன்படுத்தி

சூழ்ச்சி செய்தால்

வெற்றி பெற

முடியும்

 

என்பதைத் தான்

திருவள்ளுவர்

 

சூழ்ச்சி முடிவு

துணிவெய்தல்

அத்துணிவு

தாழ்ச்சியுள்

தங்குதல் தீது

 

என்ற

திருக்குறளின்

மூலம்

தெளிவு

படுத்துகிறார்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------28-11-2022

------திங்கட் கிழமை

 

/////////////////////////////////////////

  

No comments:

Post a Comment