December 04, 2022

ஜபம்-பதிவு-911 மரணமற்ற அஸ்வத்தாமன்-43 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-911

மரணமற்ற

அஸ்வத்தாமன்-43

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

உங்களுக்கு

கிடைத்திருப்பதை

சிபாரிசாக

எடுத்துக்

கொள்ளாமல்

வாய்ப்பாக

எடுத்துக்

கொண்டு

பயன்படுத்திக்

கொண்டால்

உங்களால்

சாதனை

மட்டுமல்ல

சரித்திரமே

படைக்க

முடியும்

 

துரோணர் :

உன்னைப்

போல்

ஒரு பெண்

மனைவியாக

கிடைத்தால்

எந்த ஒரு

ஆணும்

கண்டிப்பாக

சரித்திரம்

படைப்பான்

 

நீ சொன்னவைகளை

நான் கட்டளையாகவே

ஏற்றுக் கொள்கிறேன்

 

இளவரசர்களுக்கு

கல்வி கற்றுக்

கொடுக்க நான்

தயாராகி விட்டேன்

அஸ்தினாபுரம்

செல்வோம்

 

கிருபி :

எப்போது

செல்லலாம்

 

துரோணர் :

இந்தக் கணமே

செல்லப்

போகிறோம்

 

கிருபி :

இந்தக்

கணமே வா

 

துரோணர் :

ஆமாம்

இந்தக்

கணமே தான்

 

கிருபி :

நாம் கொண்டு

செல்வதற்கு

ஏற்ற வகையில்

எதையும் நான்

இன்னும் தயார்

செய்யவில்லையே

 

துரோணர் :

இங்கே என்ன

இருக்கிறது

கொண்டு

செல்வதற்கு

 

செல்வங்கள்

இருக்கிறதா

பொருட்கள்

இருக்கிறதா

 

சமையல் செய்ய

இரண்டு பாத்திரங்கள்

உடுத்திக் கொள்ள

இரண்டு உடைகள்

தானே இருக்கிறது

 

எடுத்துக் கொள்

கிளம்புவோம்

 

இருக்கும்

பொருட்கள்

அனைத்தையும்

எடுத்துக்கொண்டு

துரோணர் கிருபி

அஸ்வத்தாமன்

மூவரும்

வீட்டிற்கு

வெளியே

வந்து நின்றனர்

 

துரோணர் அந்த

வீட்டையே சிறிது

நேரம் வைத்த

கண் வாங்காமல்

பார்த்துக்

கொண்டே

இருந்தார்

 

கிருபி :

ஏன் இந்த

வீட்டையே

பார்த்துக்

கொண்டு

இருக்கிறீர்கள்

 

துரோணர் :

நான் எங்கேயோ

பிறந்தேன்

 

எங்கேயோ

வளர்ந்தேன்

 

எங்கேயோ

கல்வி கற்றேன்

 

எங்கேயோ

வாழ்ந்தேன்

 

இப்போது

எங்கேயோ

செல்கிறேன்

 

மனிதனின்

வாழ்க்கை

நிலை இல்லை

என்பதை

இப்போது

தான் நான்

உணர்கிறேன்

 

அஸ்தினாபுரம்

தான் நான்

வாழும் கடைசி

இடம் என்று

நினைக்கிறேன்

 

கிருபி :

ஏன் இவ்வாறு

நினைக்கிறீர்கள்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------04-12-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

//////////////////////

No comments:

Post a Comment