December 04, 2022

ஜபம்-பதிவு-909 மரணமற்ற அஸ்வத்தாமன்-41 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-909

மரணமற்ற

அஸ்வத்தாமன்-41

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

பரவாயில்லை முன்

எச்சரியாகத் தான்

இருக்கிறாய்

இருந்தாலும்

என்னால்

பாண்டவர்களுக்கும்

கௌரவர்களுக்கும்

கல்வி கற்றுக்

கொடுக்க

முடியுமா

என்று

தெரியவில்லை

 

அந்தத் தகுதி

எனக்கு

இருக்கிறதா

 

கிருபி :

சாஸ்திரங்களை

அக்னிவேஸ்யரிடம்

இருந்து கற்றிருக்கிறீர்கள்

 

அஸ்திர வித்தைகளை

பரசுராமரிடம் இருந்து

கற்றிருக்கிறீர்கள்

 

அஸ்திரம் சாஸ்திரம்

இரண்டையும்

கற்று திறமைப்

படைத்தவராக

இருக்கிறீர்கள்

 

அஸ்தினாபுரத்தின்

இளவரசர்களுக்கு

கல்வி கற்றுக்

கொடுப்பதற்கு

உங்களை விட்டால்

வேறு யாருக்கு

தகுதி இருக்கிறது

 

அஸ்தினாபுரத்தின்

இளவரசர்களுக்கு

குருவாக இருந்து

கல்வி கற்றுக்

கொடுப்பதற்கு

தகுதி வாய்ந்தவர்

நீங்கள் தான்

 

நீங்கள் இந்த

வேலையில்

சேர்ந்து

குருவாக

இருந்து

கல்வி கற்றுக்

கொடுத்தால்

வருங்காலத்தில்

அஸ்தினாபுரத்தின்

அசைக்க முடியாத

ஒரு சக்தியாக

நீங்கள் மாறுவதற்கு

வாய்ப்பு இருக்கிறது

 

பீஷ்மர் விதுரர்

கிருபர் என்ற

வரிசையில்

அவர்களுக்கு

இணையாக

நீங்களும் மக்கள்

மத்தியில்

பேசப்படுவீர்கள்

 

பீஷ்மர் விதுரர்

கிருபர் ஆகியோரை

இந்த உலகம்

எப்படி மதிக்கிறதோ

அப்படியே தான்

உங்களையும்

மதிக்கப் போகிறது

 

துரோணர் என்ற

பெயர்

வருங்காலத்தில்

அனைவரும்

உச்சரிக்கக் கூடிய

ஒரு பெயராகத்

தான் இருக்கப்

போகிறது

 

நீங்கள் இல்லாமல்

எந்த ஒரு விஷயமும்

நடக்காத அளவிற்கு

அஸ்தினாபுரத்தின்

அரசில் நீங்கள்

ஒரு முக்கிய

அங்கமாக

திகழத் தான்

போகிறீர்கள்

 

முக்கிய அரசியல்

முடிவுகளை

உங்களைக்

கேட்டுத் தான்

எடுக்கப்

போகிறார்கள்

 

அஸ்தினாபுரத்தின்

படைகளை

வழி நடத்தக்

கூடியவராகக் கூட

நீங்கள் இருக்கலாம்

 

ஏன் அஸ்தினாபுரத்தின்

தளபதியாகக் கூட

நீ ஆகலாம்

 

துரோணர் :

நீ அதிகமாக

கற்பனை செய்கிறாய்

 

அவ்வளவு தகுதிகள்

எனக்கு இருப்பதாகத்

தெரியவில்லை

 

கிருபி :

நான் கற்பனை

செய்யவில்லை

நடக்கப் போவதைச்

சொல்கிறேன்

 

உங்கள் திறமையை

அறிந்தவள் என்ற

முறையில்

சொல்கிறேன்

 

மனைவியை விட

கணவனின்

திறமையை

அறிந்தவர்

வேறு யார்

இருக்க முடியும்

 

நீங்கள் கண்டிப்பாக

இந்த வேலையை

ஏற்றுக் கொள்ளத்

தான் வேண்டும்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------04-12-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

//////////////////////

 

No comments:

Post a Comment