December 04, 2022

ஜபம்-பதிவு-906 மரணமற்ற அஸ்வத்தாமன்-38 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-906

மரணமற்ற

அஸ்வத்தாமன்-38

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

என் மீது தான்

பாசமாக

இருக்கிறான்

என்று சொல்ல

வருகிறாயா

 

கிருபி :

நான் சொல்ல

வேண்டிய

அவசியமே

இல்லையே

அது தானே

உண்மை

 

துரோணர் :

அது உண்மை

இல்லை

 

கிருபி :

வேறு எதை

உண்மை

என்கிறீர்கள்

நாம்

கஷ்டப்படுவதையா

 

துரோணர் :

நாம்

கஷ்டப்படுவதும்

உண்மை தானே

விரைவில்

நம் கஷ்டம்

தீருவதற்கு

வழி பிறக்கும்

 

கிருபி :

நான் ஒரு

வழி சொல்லவா

 

துரோணர் :

உனக்கு வழி

தெரியுமா

 

கிருபி :

தெரிந்ததால் தான்

சொல்லவா

என்று கேட்கிறேன்

 

துரோணர் :

சொல்

கேட்கிறேன்

 

நல்ல வழியை

யார்

காட்டினாலும்

அந்த வழியில்

செல்ல

வேண்டியது

தானே

 

கிருபி :

என் அண்ணன்

கிருபரிடம்

இருந்து ஒரு

செய்தி

வந்திருக்கிறது

 

துரோணர் :

என்ன செய்தி

 

கிருபி :

அவர்

அஸ்தினாபுரத்தின்

அரசவையில்

உயர்ந்த

பதவியில்

இருக்கிறாராம்

 

துரோணர் :

அஸ்தினாபுரத்தை ஆட்டி

வைப்பவர்கள் பீஷ்மரும்

விதுரரும் தானே

அவர்கள் இருவரும்

சொல்வது தானே

சட்டமாக இருக்கிறது

 

அவர்கள் இருவரையும்

மீறி யாரும் எந்த

ஒரு முடிவையும்

எடுக்க முடியாதே

 

அவர்களை மீறி

அஸ்தினாபுரத்தில்

எந்த ஒரு செயலும்

நடக்க முடியாதே

 

யாரும் எந்த ஒரு

செயலையும் செய்ய

முடியாதே

 

அவர்கள் இருவரும்

வைத்தது தானே

சட்டம்

 

அவர்கள் என்ன

நினைக்கிறார்களோ

அது தானே

அஸ்தினாபுரத்தில்

நடந்து

கொண்டிருக்கிறது

 

கிருபர் எப்படி

அஸ்தினாபுரத்தின்

உயர்ந்த பதவியில்

சேர்ந்தார்

 

கிருபி :

திறமைசாலிகளுக்கு

இணையாக

சரிசமமாக

அவர்களுடன்

இணைந்து

பயணிக்க வேண்டும்

என்றால் நாமும்

திறமைசாலிகளாக

இருந்தால் மட்டும்

தானே முடியும்

 

என் அண்ணன்

திறமைசாலியாக

இருக்கின்ற

காரணத்தினால்

தான்

அஸ்தினாபுரத்தின்

உயர்ந்த பதவியில்

இருக்கிறார்

 

அனைவரும் மதிக்கும்

வகையில் இருக்கிறார்

 

அனைவரும்

பாராட்டும் படி

நடந்து கொள்கிறார்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------04-12-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

//////////////////////

No comments:

Post a Comment