December 04, 2022

ஜபம்-பதிவு-908 மரணமற்ற அஸ்வத்தாமன்-40 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-908

மரணமற்ற

அஸ்வத்தாமன்-40

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

அதே போல்

மாத்ரியும்

அஸ்வினி

இரட்டையர்களுடன்

உடலுறவு

கொண்டு

நகுலனையும்

சகாதேவனையும்

பெற்றுக்

கொண்டாள்

 

குந்திக்குப் பிறந்த

மூன்று மகன்களும்

மாத்ரிக்குப் பிறந்த

இரண்டு மகன்களும்

பாண்டுவுக்குப்

பிறக்கவில்லை

 

இதை நான்

சொல்லவில்லை

அஸ்தினாபுரத்தின்

மக்கள்

சொல்கிறார்கள்

 

குந்திக்குப் பிறந்த

மூன்று மகன்களும்

மாத்ரிக்குப் பிறந்த

இரண்டு மகன்களும்

பாண்டுவுக்குத் தான்

பிறந்தார்கள்

என்பதை

அஸ்தினாபுரம்

ஏற்றுக் கொள்ள

வேண்டும்

என்பதற்காகவும்

இந்த உலகத்தை

நம்ப வைக்க

வேண்டும்

என்பதற்காகவும்

பாண்டுவுக்குப்

பிறந்தவர்கள்

என்று பொருள்படும்

பாண்டவர்கள்

என்ற சொல்லைப்

பயன்படுத்துகிறார்கள்

 

ஆனால்

திருதராஷ்டிரனுக்குப்

பிறந்த நூறு

பிள்ளைகளை

அழைப்பதற்கு

திருதராஷ்டிரர்கள்

என்ற சொல்லைப்

பயன்படுத்துவதில்லை

கௌரவர்கள் என்ற

சொல்லைத் தான்

பயன்படுத்துகிறார்கள்

 

கெளரவர்கள்

என்றால்

கௌரவமாக

பிறந்தவர்கள்

என்று பொருள்

 

காந்தாரி என்பவள்

திருதராஷ்டிரன்

என்ற ஒரே

ஒரு ஆணுடன்

சேர்ந்து தான்

நூறு பிள்ளைகளைப்

பெற்றெடுத்தாள்

என்று பொருள்

 

வேறு எந்த ஒரு

ஆணுடன்

சேரவில்லை

என்று பொருள்

 

கௌரவர்கள்

என்ற வார்த்தை

காந்தாரி என்ற

ஒரு உத்தமிக்குத்

தான்

நூறு பிள்ளைகளும்

பிறந்தார்கள்

என்பதைக்

குறிக்கும் வார்த்தை

ஆனால்,

பாண்டவர்கள்

என்ற வார்த்தை

குந்தி மற்றும்

மாத்ரியை 

இந்த உலகம்

உத்தமியாக

ஏற்றுக் கொள்ள

வேண்டும்

என்பதற்காகத்

திணிக்கப்பட்ட

வார்த்தை

 

பாண்டவர்களுக்கும்

கௌரவர்களுக்கும்

இது தான் வேறுபாடு

 

துரோணர் :

இவ்வளவு

விஷயங்கள்

உனக்கு எப்படி

தெரியும்

 

கிருபி :

நீங்கள் கல்வி

கற்றுக் கொடுக்கப்

போகிறீர்கள்

யாருக்கு கல்வி

கற்றுக் கொடுக்கப்

போகிறோம் என்ற

விஷயங்கள்

உங்களுக்குத்

தெரிந்திருக்க

வேண்டும்

அல்லவா

அதனால் தான்

எனக்குத் தெரிந்த

விஷயங்களை

உங்களுக்குச்

சொன்னேன்

 

வருங்காலத்தில்

இந்த விஷயங்கள்

உங்களுக்குத்

தெரியக் கூடிய

சூழ்நிலை

ஏற்பட்டால்

பாண்டவர்களுக்கும்

கௌரவர்களுக்கும்

உள்ள வேறுபாட்டை

என்னிடம்

சொல்லாமல்

மறைத்து விட்டு

என்னை

அஸ்தினாபுரத்திற்கு

வேலைக்குப் போகச்

சொல்லி இருக்கிறாய்

என்று என்னை

நீங்கள் கேட்டு

விடக் கூடாது

அல்லவா

 

அதற்காகத்

தான்

இப்போதே

சொன்னேன்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------04-12-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

//////////////////////

No comments:

Post a Comment