December 04, 2022

ஜபம்-பதிவு-903 மரணமற்ற அஸ்வத்தாமன்-35 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-903

மரணமற்ற

அஸ்வத்தாமன்-35

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

கிருபி :

யாரை அப்பாவி

என்கிறீர்கள்

 

துரோணர் :

நம் மகனைத்

தான்

 

(துரோணர்

அஸ்வத்தாமனை

தன்னருகே

வரவழைத்து

கேட்கிறார்)

 

நண்பர்கள்

கொடுத்ததை

ஏன் குடித்தாய்

 

அஸ்வத்தாமன் :

பசித்தது

குடித்தேன்

 

துரோணர் :

நீ குடித்தது

என்ன என்று

தெரியுமா

 

அஸ்வத்தாமன் :

பால் என்று

சொன்னார்கள்

அதனால் தான்

குடித்தேன்

 

கிருபி :

தவறு செய்து

விட்டு

வருத்தப்படுகிறானா

பாருங்கள்

 

துரோணர் :

தவறு செய்தது

நம் மகன் அல்ல

 

வருத்தப்பட

வேண்டியது

அவனும் அல்ல

 

கிருபி :

வேறு யார்

 

துரோணர் :

வருத்தப்பட

வேண்டியது

தவறைச் செய்த

அந்தப் பிள்ளைகள்

 

தவறைச்

செய்வதற்குக்

காரணமாக

இருந்த அந்தப்

பிள்ளைகளைப்

பெற்றெடுத்த

பெற்றோர்கள்

 

நம் மகன் ஏன்

வருத்தப்பட

வேண்டும்

 

இந்தக் காலத்தில்

பெற்றோர்கள்

தங்கள்

குழந்தைகளுக்கு

என்ன சொல்லிக்

கொடுத்து வளர்க்க

வேண்டுமோ

அதை சொல்லிக்

கொடுத்து

வளர்ப்பதில்லை

 

நாம் கும்பிடும்

கடவுள் தான்

உண்மையான

கடவுள்

நம் கடவுளைக்

கும்பிடுகிறவர்கள்

தான்

உண்மையான

கடவுளைக்

கும்பிடுகிறவர்கள்

 

நாம் கும்பிடும்

கடவுளைக்

கும்பிடுகிறவர்களுடன்

நட்பு வைத்துக் கொள்

அவர்களுக்கு

மட்டுமே

உதவி செய்

 

மற்ற கடவுளைக்

கும்பிடுகிறவர்கள்

அனைவரும்

பொய்யான

கடவுளைக்

கும்பிடுகிறார்கள்

அவர்களுக்கு

உதவி செய்யாதே

என்று சொல்லி

வளர்க்கின்றனர்

 

நம்முடைய

ஜாதி தான்

உயர்வான ஜாதி

மற்ற ஜாதி

தாழ்ந்த ஜாதி

 

தாழ்ந்த ஜாதி

மக்கள் நமக்கு

அடிமையாக

இருக்க

வேண்டியவர்கள்

 

அவர்கள் நம்முடைய

சொல்லுக்கு கட்டுப்பட்டு

நடக்க

வேண்டியவர்கள்

அவர்களை நமக்கு

சரிசமமாக

நடத்தக்கூடாது

அவர்களுடன்

பழக்கம் வைத்துக்

கொள்ளாதே

என்று சொல்லி

வளர்க்கின்றனர்

 

நாம் பணக்காரர்கள்

பணக்கார்களுடன்

தான் பழக வேண்டும்

பணக்காரர்களுடன்

தான் பழக்கம்

வைத்துக் கொள்ள

வேண்டும்

அவர்களுடன்

தான் நட்பாக

இருக்க வேண்டும்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------04-12-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

//////////////////////

 

 

 

No comments:

Post a Comment