December 04, 2022

ஜபம்-பதிவு-902 மரணமற்ற அஸ்வத்தாமன்-34 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-902

மரணமற்ற

அஸ்வத்தாமன்-34

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் வீட்டின்

உள்ளே நுழைகிறார்.

கிருபி

அஸ்வத்தாமனை

அடித்துக்

கொண்டு

இருக்கிறார்

 

துரோணர் :

நிறுத்து

பிள்ளையைப்

போட்டு ஏன்

இப்படி

அடிக்கிறாய்

 

கிருபி :

அவன் செய்த

காரியத்தைக்

கேட்டால்

நீங்களே அவனை

அடிப்பீர்கள்

 

துரோணர் :

அப்படி என்ன

தவறு செய்து

விட்டான்

 

இப்படி போட்டு

அடித்துக் கொண்டு

இருக்கிறாய்

 

கிருபி :

வெளியே

விளையாடச்

சென்றான்

 

துரோணர் :

அதில் ஒன்றும்

தவறு இருப்பதாகத்

தெரியவில்லையே

 

கிருபி  :

தவறில்லை தான்

அவன் நண்பர்கள்

கொடுத்த பாலை

அல்லவா வாங்கிக்

குடித்திருக்கிறான்

 

துரோணர் :

நண்பர்கள்

கொடுத்ததைத்

தானே

குடித்திருக்கிறான்

 

கிருபி :

அவன் நண்பர்கள்

என்ன பாலைக்

கொடுத்து

அவனைக்

குடிக்கச்

சொல்லி

இருக்கிறார்கள்

பாருங்கள்

 

(கிருபி காட்ட

துரோணர்

பார்க்கிறார்)

 

பால் என்று

சொல்லி

அரிசி மாவு

கலந்த தண்ணீரைக்

கொடுத்து

அவனைக் குடிக்கச்

சொல்லி

இருக்கிறார்கள்

 

இவனும் பால்

என்று நினைத்து

அவர்கள்

கொடுத்ததை

குடித்துக் கொண்டு

இருந்த போது

அவனைச் சுற்றி

நின்று கொண்டு

கை கொட்டி சிரித்து

அவனை ஏளனம்

செய்து ஆட்டம்

போட்டுக் கொண்டு

இருந்தார்கள்

 

அந்த சமயத்தில்

அங்கு சென்ற நான்

நடந்து கொண்டிருந்த

நிகழ்ச்சியைக் கண்டு

அதிர்ச்சி அடைந்தேன்

 

நடந்து

கொண்டிருந்த

கொடுமையை

என்னால் கண்

கொண்டு பார்க்க

முடியவில்லை

 

எனக்கு ஏற்பட்ட

கோபத்தை

அடக்கிக் கொண்டு

அங்கிருந்து நம்

மகனை அழைத்து

வந்து விட்டேன்

 

துரோணர் :

மற்ற பிள்ளைகள்

மேல் இருந்த

கோபத்தை

நம் மகன் மேல்

காட்டி விட்டாய்

போலும்

 

கிருபி :

கோபத்தை யாரிடம்

காட்டுவது என்று

வரையறை

இருக்கிறது

அல்லவா

 

துரோணர் :

அதனால் தான்

அப்பாவி மீது

கோபத்தைக்

காட்டி விட்டாய்

போலும்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------04-12-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

//////////////////////

 

No comments:

Post a Comment