December 04, 2022

ஜபம்-பதிவு-905 மரணமற்ற அஸ்வத்தாமன்-37 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-905

மரணமற்ற

அஸ்வத்தாமன்-37

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

பிள்ளைகளுக்கு

கஷ்டம் என்றால்

என்ன என்பதை

சொல்லிக் கொடுத்து

வளர்க்க வேண்டும்

 

கஷ்டம் என்றால்

என்ன என்பதை

அவர்கள்

தெரிந்து கொள்ளும்படி

வளர்க்க வேண்டும்

 

பெற்றோர்கள்

எவ்வளவு

கஷ்டப்படுகிறார்கள்

என்பதை

பிள்ளைகள்

தெரிந்து கொள்ளும்படி

வளர்க்க வேண்டும்

 

பெற்றோர்கள்

படும் கஷ்டம்

பிள்ளைகள்

உணரும்படி

வளர்க்க வேண்டும்

 

அப்போது தான்

பிள்ளைகளுக்கு

பெற்றோர்கள் மீது

பாசம் இருக்கும்

 

நாம் தான்

கஷ்டப்பட்டோம்

பிள்ளைகள்

கஷ்டப்படக்கூடாது

என்று

பிள்ளைகளுக்கு

கஷ்டம் தெரியாமல்

வளர்த்தால்

பிள்ளைகளுக்கு

பெற்றோர்களின்

கஷ்டம்

தெரியாது

 

பெற்றோர்களின்

கஷ்டம் தெரியாத

பிள்ளைகள்

பெற்றோர்களின்

மீது பாசம்

இல்லாமல்

தான் இருக்கும்

 

அத்தகைய பிள்ளைகள்

ஒழுங்காக படிக்காது

ஒழுங்காக வேலை

தேடாது

ஒழுங்காக வேலை

செய்யாது

வேலை செய்யாமல்

சுற்றிக் கொண்டிருக்கும்

பெற்றோர்கள்

சேர்த்து வைத்ததை

எல்லாம் அழித்துக்

கொண்டிருக்கும்

 

இந்த உலகத்தில்

குற்றம் நடப்பதற்கு

முக்கிய காரணமே

பெற்றோர்கள் தான்

 

பெற்றோர்கள் தங்கள்

பிள்ளைகளுக்கு நல்ல

பழக்க வழக்கங்களை

சொல்லிக் கொடுத்து

வளர்க்காததே காரணம்

 

பெற்றோர்கள் தங்கள்

பிள்ளைகளை எப்படி

வளர்க்க வேண்டுமோ

அப்படி வளர்க்காமல்

எப்படி வளர்க்கக்

கூடாதோ அப்படி

வளர்க்கின்ற

காரணத்தினால் தான்

இந்த உலகத்தில்

குற்றங்கள் பெருகிக்

கொண்டே இருக்கிறது

 

பிள்ளைகள்

பெற்றோர்களை

மதிப்பதில்லை

பிள்ளைகளுக்கு

பெற்றோர்களின்

மதிப்பு

தெரிவதில்லை

 

முதலில் பெற்றோர்கள்

மாற வேண்டும்

அப்போது தான்

பிள்ளைகள் நல்ல

பிள்ளைகளாக

வளருவார்கள்

 

பெற்றோர்கள்

மாறாமல்

பிள்ளைகள் மாற

மாட்டார்கள்

 

கிருபி :

நாம் நம்

பிள்ளையை

நல்ல பிள்ளையாக

கஷ்டத்தில் தானே

வளர்க்கிறோம்

 

கஷ்டம் என்றால்

என்ன என்று

தெரியப்படுத்தித்தானே

வளர்க்கிறோம்

 

நம்முடைய கஷ்டம்

தெரிந்து தானே

அவனும் வளர்கிறான்

 

துரோணர் :

அப்படி வளர்வதால்

தான் அவன்

பிற்காலத்தில் நம்

இருவர் மீதும்

பாசமாக இருப்பான்

 

கிருபி :

அவன் யார் மீது

பாசமாக

இருக்கிறான்

என்பது

உங்களுக்கே

தெரியும்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------04-12-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

//////////////////////

No comments:

Post a Comment