November 02, 2020

அறிய வேண்டியவை-157

 

ஜபம்-பதிவு-649

(அறிய வேண்டியவை-157)

 

கர்ணன் :

“இவர்களை ஏன்

இவ்வாறு

சொல்கிறீர்கள்?”

 

“ஏன் இவ்வளவு

கடினமாக

வார்த்தைகளைப்

பயன்படுத்தி

அவர்களை

இழிவு படுத்தும்

விதத்தில்

பேசுகிறீர்கள்?”

 

“இவர்கள்

நால்வரும்

தான்

அஸ்தினாபுரத்தின்

தூண்கள்”

 

“அஸ்தினாபுரத்தின்

நம்பிக்கை

நட்சத்திரங்கள்”

 

“இந்த

சமுதாயத்தில்

உள்ள

அனைவராலும்

மதிக்கப்படுபவர்கள்”

 

சகுனி ;

“இந்த

சமுதாயத்தால்

மதிக்கப்படுபவர்கள்

என்று சொல்லாதே

கர்ணா !”

 

“இந்த

சமுதாயம்

தன்னை

மதிக்க வேண்டும்

என்பதற்காக

வாழ்பவர்கள்

என்று சொல்”

 

“இந்த சமுதாயம்

தன்னை மதிக்க

வேண்டும் என்று

இரட்டை

வாழ்க்கை

வாழ்ந்து

கொண்டிருக்கின்ற

காரணத்தினால் தான்

அவர்கள்

நால்வரையும்

போலியான

வாழ்க்கை

வாழ்பவர்கள்

என்கிறேன்”

 

“இந்த

சமுதாயத்தில்

எல்லா

இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழ

முடியாதவர்கள்

என்கிறேன்”

 

“இந்த

சமுதாயத்தில்

தன்னுடைய

உணர்வுகளை

மறைத்துக்

கொண்டு

வாழ்பவர்கள்

என்கிறேன்”

 

“இந்த

சமுதாயத்திற்கு

பயந்து கொண்டு

இரட்டை

வாழ்க்கை

வாழ்பவர்கள்

என்கிறேன்”

 

“அதனால் தான்

பீஷ்மர்

துரோணர்

விதுரர்

கிருபர்

ஆகிய

நால்வரையும்

போலியான

வாழ்பவர்கள்

என்கிறேன்”

 

கர்ணன் :

“ஏன் அவ்வாறு

சொல்கிறீர்கள்?”

 

சகுனி :

“மாற்று

பாலினத்தவர்களைப்

பற்றி நான்

இவ்வளவு

விளக்கங்கள்

கொடுத்தும்

இன்னும் நீ

இந்த

நால்வரையும்

புரிந்து

கொள்ளவில்லையா

கர்ணா !”

 

கர்ணன் :

“நீங்கள்

என்ன சொல்ல

வருகிறீர்கள்

என்பதை

என்னால்

புரிந்து கொள்ள

முடியவில்லை”

 

துரியோதனன் :

“என்னாலும்

புரிந்து கொள்ள

முடியவில்லை

மாமா

அவர்களே !”

 

சகுனி :

“சரி நான்

சொல்வதைக்

கேளுங்கள்”

 

(என்று சொல்ல

ஆரம்பித்தார்

சகுனி)

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------02-11-2020

/////////////////////////////////

No comments:

Post a Comment