November 02, 2020

அறிய வேண்டியவை-153

 

ஜபம்-பதிவு-645

(அறிய வேண்டியவை-153)

 

சகுனி :

“இந்த சமுதாயம்

தன்னை நல்லவராக

ஏற்றுக் கொள்ள

வேண்டும் என்பதற்காக

வாழ்பவர்களால்

எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழ முடிவதில்லை.”

 

“அதைப்போல

இந்த சமுதாயம்

தன்னைப் பார்த்து

பயப்பட வேண்டும்

என்றால்

இந்த சமுதாயம்

தன்னை கெட்டவராக

ஏற்றுக் கொள்ள

வேண்டும் என்பதற்காக

வாழ்பவர்களாலும்

எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழ முடிவதில்லை”

 

“ஏனென்றால் இவர்கள்

போலியாக

வாழ்க்கையை

வாழ்பவர்கள்”

 

“போலியாக

வாழ்க்கையை

வாழ்பவர்களால்

எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழ முடியாது”

 

“தன்னுடைய

வாழ்க்கையை

போலியாக

வாழ்பவர்கள்

இந்த சமுதாயம்

தன்னை மனிதராக

ஏற்றுக் கொள்ள

வேண்டும்

என்பதற்காக

வாழ்பவர்கள் இல்லை”

 

“இந்த சமுதாயம்

தன்னை

நல்லவராகவோ

அல்லது

கெட்டவராகவோ

ஏற்றுக் கொள்ள

வேண்டும்

என்பதற்காக

வாழ்பவர்கள்

இவர்கள்”

 

“இந்த சமுதாயம்

தன்னை

இப்படித் தான்

ஏற்றுக் கொள்ள

வேண்டும்

என்பதற்காக

வாழ்பவர்கள்”

 

“இத்தகையவர்களால்

இந்த சமுதாயத்தில்

உண்மையாக

வாழ முடியாது.

எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழ முடியாது

போலியாகத் தான்

வாழ முடியும்”

 

“ஆனால்

தங்களுடைய

வாழ்க்கையை

உண்மையாக

வாழ்பவர்களால்

எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழ முடியும்”

 

“உண்மையாக

வாழ்பவர்கள்

இந்த சமுதாயம்

தன்னை

நல்லவராகவோ

அல்லது

கெட்டவராகவோ

ஏற்றுக் கொள்ள

வேண்டும் என்பதற்காக

வாழ்பவர்கள்

இல்லை

அவர்கள்

இந்த சமுதாயம்

தன்னை மனிதராக

ஏற்றுக் கொள்ள

வேண்டும்

என்பதற்காக

வாழ்பவர்கள்”

 

“தன்னை

இந்த சமுதாயம்

மனிதராக

ஏற்றுக் கொள்ள

வேண்டும்

என்பதற்காக

வாழ்பவர்களால்

மட்டுமே

இந்த சமுதாயத்தில்

உண்மையாக

வாழ முடியும்”

 

“உண்மையாக

வாழ்பவர்களால்

மட்டுமே

இந்த சமுதாயத்தில்

எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழ முடியும்”

 

“அவர்கள் தான்”

 

“இந்த சமுதாயத்தில்

உண்மையாக

வாழ்பவர்கள் தான்”

 

“இந்த சமுதாயத்தில்

உண்மையாக

வாழ்பவர்களுக்கு

எடுத்துக் காட்டாய்

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள் தான்”

 

“இந்த சமுதாயத்தில்

தன்னுடைய

வாழ்க்கையை

போலியாக

வாழாமல்

உண்மையாக

வாழ்பவர்கள் தான்”

 

“இந்த சமுதாயத்தில்

எல்லா இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழ்பவர்கள் தான்”

 

“தன்னுடைய

பாலினத்தை

மாற்றிக் கொண்டு

வாழ்பவர்கள் தான்”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------02-11-2020

/////////////////////////////////

 

No comments:

Post a Comment