January 06, 2022

ஜபம்-பதிவு-675 (சாவேயில்லாத சிகண்டி-9)

 ஜபம்-பதிவு-675

(சாவேயில்லாத

சிகண்டி-9)

 

சத்தியவதி :

மற்ற நாடுகளைப்

போல்

அல்லவே

அஸ்தினாபுரம்

 

காசி நாட்டுடன்

அஸ்தினாபுரம்

இரத்த

சம்பந்தம்

கொண்ட

உறவு முறை

கொண்ட

நாடு ஆயிற்றே

 

சம்பிரதாயப்படி

பார்த்தாலும்

சாஸ்திரப்படி

பார்த்தாலும்

உலக

வழக்கப்படி

பார்த்தாலும்

அஸ்தினாபுரத்திற்கே

முதலில்

அழைப்பிதழ்

அனுப்பப்பட்டு

இருக்க வேண்டும்

 

அஸ்தினாபுரத்திற்குத்

தான்

முதலில்

முதல் மரியாதை

செய்யப்பட்டு

இருக்க

வேண்டும்

 

ஆனால்

செய்யவில்லை

 

பீஷ்மர் :

அஸ்தினாபுரத்தை

அவமதிக்கும்

விதத்தில்

காசி நாட்டு

மன்னன்

நடந்து கொண்டு

இருக்கிறான்

என்று

நினைக்கிறீர்களா

 

சத்தியவதி :

காசி நாட்டு

மன்னனின்

செய்கையை

பார்க்கும் போது

அப்படித் தான்

நினைக்கத்

தோன்றுகிறது

 

பீஷ்மர் :

அஸ்தினாபுரத்தை

அவமதிப்பதால்

உண்டாகும்

பகையின்

உக்கிரத்தை

காசி நாடு

தங்காது என்று

காசி நாட்டு

மன்னனுக்கு

தெரியுமே

 

சத்தியவதி :

தெரிந்திருந்தால்

அவன்

அவ்வாறு

செய்து இருக்க

மாட்டான்

அல்லவா

 

பீஷ்மர் :

தவறு எங்கே

நிகழ்ந்து

இருக்கிறது

என்று

தெரியவில்லை

 

தவறுக்கான

காரணம்

புரியவில்லை

 

தவறை

காசி நாட்டு

மன்னன்

செய்து

இருக்கிறானா

தெரியவில்லை

 

சத்தியவதி :

என்ன

சொல்ல

வருகிறாய்

பீஷ்மா

 

பீஷ்மர் :

பொறுத்திருந்து

பார்ப்போம்

அழைப்பிதழ்

வருகிறதா

என்று

 

சத்தியவதி :

வரவில்லை

எனில்

 

பீஷ்மர் :

அழைப்பிதழ்

அனுப்ப

மறந்து விட்டானா

 

அல்லது

 

அஸ்தினாபுரத்தை

அவமானப்படுத்தும்

வகையில்

நடந்து கொண்டு

இருக்கிறானா

காசி நாட்டு

மன்னன்

என்பதை

அறிய

முற்படலாம்

 

சத்தியவதி :

அறிந்து

 

பீஷ்மர் :

உண்மையை

உணரலாம்

 

சத்தியவதி :

எவ்வளவு

காலத்திற்குள்

 

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------06-01-2022

/////////////////////////////////

No comments:

Post a Comment