January 06, 2022

ஜபம்-பதிவு-677 (சாவேயில்லாத சிகண்டி-11)

 ஜபம்-பதிவு-677

(சாவேயில்லாத

சிகண்டி-11)

 

(காசி நாடு-

காசி நாட்டு

அரண்மனை-

காசி நாட்டு

மன்னன்

அறையில்

அமைச்சர்

நேரில் சந்திக்க

செல்கிறார்)

 

அமைச்சர்:

வணங்குகிறேன்

அரசே

 

காசி நாட்டு

மன்னன் :

வாருங்கள்

அமைச்சரே

 

அமைச்சர்:

விஷயம்

கேள்விப் பட்டேன்

 

காசி நாட்டு

மன்னன் :

என்ன விஷயம்

 

அமைச்சர்:

அழைப்பிதழ்

செல்லவில்லை

என்று

 

காசி நாட்டு

மன்னன் :

யாருக்கு

 

அமைச்சர்:

அஸ்தினாபுரத்திற்கு

 

காசி நாட்டு

மன்னன் :

உண்மை தான்

 

அமைச்சர்:

அப்படி

என்றால்

அழைப்பிதழ்

செல்லவில்லையா

 

காசி நாட்டு

மன்னன் :

ஆமாம்

 

அமைச்சர்:

அழைப்பிதழ்

செல்லவில்லையா

அல்லது

அனுப்பவில்லையா

 

காசி நாட்டு

மன்னன் :

அனுப்பவில்லை

 

அமைச்சர்:

ஏன்

 

காசி நாட்டு

மன்னன் :

நான் தான்

அனுப்ப

வேண்டாம்

என்று சொன்னேன்

 

அமைச்சர்:

அஸ்தினாபுரம்

நட்பு நாடு

கிடையாது

 

இரத்த சம்பந்தம்

கொண்ட  

உறவு நாடு

அல்லவா

 

காசி நாட்டு

மன்னன் :

உறவை

புதுப்பித்துக்

கொள்ள நான்

விரும்பவில்லை

 

அமைச்சர்:

ஆனால்

பகை உருவாக

காரணம்

ஆகி விடுமே

 

காசி நாட்டு

மன்னன் :

திருமணத்திற்கு

யாரை அழைக்க

வேண்டும்

 

யாரை

அழைக்கக் கூடாது

என்று

பெண்களைப்

பெற்றெடுத்த ஒரு

தந்தை முடிவு

எடுக்கக் கூடாதா

 

தந்தைக்கு

உரிமையில்லையா

 

அமைச்சர்:

நீங்கள் ஒரு

குடும்பத்தின்

தந்தையாக

இருந்தால்

பரவாயில்லை

 

நீங்கள் ஒரு

நாட்டின் மன்னர்

 

மன்னர்

பிள்ளைகளின்

திருமணம்

அரியணையுடன்

பிணைக்கப்பட்டது

 

அன்பு என்ற

கயிற்றால்

பல்வேறு நாடுகளுடன்

இணைக்கப் பட்டது

அரசியல் களத்தில்

தான் திருமணம்

என்பதே

நிச்சயிக்கப் படுகிறது

 

இரத்தம்

சம்பந்தப்பட்ட

உறவு நாடாக

இருந்தாலும்

இரத்தம் சம்பந்தம்

இல்லாத

நட்பு நாடாக

இருந்தாலும்

திருமணத்தின்

மூலமே

அரசுகள்

பலப்படுத்தப்

படுகிறது

 

காசி நாட்டு

மன்னன் :

அதனால்

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------06-01-2022

/////////////////////////////////

No comments:

Post a Comment