January 06, 2022

ஜபம்-பதிவு-679 (சாவேயில்லாத சிகண்டி-13)

 ஜபம்-பதிவு-679

(சாவேயில்லாத

சிகண்டி-13)

 

(சத்தியவதியை

சந்திக்க வருகிறார்

பீஷ்மர்.

அறையில்

கிருபாச்சாரியார்

இருக்கிறார்)

 

பீஷ்மர் :

அவமானம்

ஏற்பட்டு விட்டது

 

கிருபாச்சாரியார் :

யாருக்கு

 

பீஷ்மர் :

அஸ்தினாபுரத்திற்கு

 

கிருபாச்சாரியார் :

யாரால் ஏற்பட்டது

 

பீஷ்மர் :

காசி நாடால்

 

கிருபாச்சாரியார் :

யார் ஏற்படுத்தினார்கள்

 

பீஷ்மர் :

காசிநாட்டு மன்னர்

 

கிருபாச்சாரியார் :

எதை வைத்து

சொல்கிறீர்கள்

 

பீஷ்மர் :

சுயம்வரத்திற்கு

அழைப்பிதழ்

அனுப்பாததை

வைத்து

 

கிருபாச்சாரியார் :

யாருடைய

சுயம்வரத்திற்கு

 

பீஷ்மர் :

காசி நாட்டு

மன்னன்

காசிராஜன்

மகள்களின்

சுயம்வரத்திற்கு

 

கிருபாச்சாரியார் :

ஏன்

அனுப்பவில்லை

 

பீஷ்மர் :

அவமதித்ததின்

காரணமான

 

கிருபாச்சாரியார் :

ஏன்

அவமதித்தார்கள்

 

பீஷ்மர் :

பழைய பகை

 

கிருபாச்சாரியார் :

பகை தொடர்கிறதா

 

பீஷ்மர் :

பகையை

அவர்கள் தொடர

விரும்புகிறார்கள்

 

கிருபாச்சாரியார் :

சரியான செய்தியா

 

பீஷ்மர் :

சரியான

செய்தி தான்

 

கிருபாச்சாரியார் :

எப்படி சொல்கிறீர்கள்

 

பீஷ்மர் :

உண்மையானவர்கள்

எனக்கு

நம்பிக்கையுடையவர்களாக

இருக்கின்ற

காரணத்தினால்

உண்மை எது

என்று

என்னால்

தெரிந்து கொள்ள

முடிகிறது

 

கிருபாச்சாரியார் :

இரண்டு

தினங்கள்

பொறுத்திருப்போம்

அவகாசம்

கொடுப்போம்

மனம்

மாறுவதற்கு

வாய்ப்பு

உண்டல்லவா

 

சத்தியவதி :

ஏற்கனவே

இதைப் பற்றி

நானும் பீஷ்மனும்

இரண்டு நாட்கள்

முன்பே

பேசியிருக்கிறோம்

 

அஸ்தினாபுரத்திற்கு

அழைப்பிதழ்

அனுப்பாததைப் பற்றி

 

தேவையான

கால அவகாசம்

கொடுத்தாகி

விட்டது

 

காசி நாட்டு

மன்னன் மனம்

மாறவில்லை

மிகப்பெரிய

தவறு

செய்திருக்கிறான்

 

பீஷ்மர் :

செய்த தவறை

உணர வைப்போம்

 

கிருபாச்சாரியார் :

அதுவும்

சரியான வழியில்

இருக்க வேண்டும்

 

பீஷ்மர் :

தவறான வழியை

நான்

தேர்ந்தெடுப்பதே

இல்லை

 

கிருபாச்சாரியார் :

அஸ்தினாபுரத்திற்கு

என்று தனிப்பட்ட

பாராம்பரியம்

இருக்கிறது

 

மதிப்பு

இருக்கிறது

 

மரியாதை

இருக்கிறது

 

அது கெடாத

வண்ணம்

பார்த்துக்

கொள்ள வேண்டும்

 

பீஷ்மர் :

அஸ்தினாபுரத்திற்கு

ஏற்பட்ட

களங்கத்தை

துடைப்பதற்கு

முயல்கிறேன்

 

களங்கத்தை

ஏற்படுத்துவதற்காக

அல்ல

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------06-01-2022

/////////////////////////////////

No comments:

Post a Comment