August 31, 2018

திருக்குறள்-பதிவு-11


                         திருக்குறள்-பதிவு-11

 “”””இடிப்பாரை இல்லாத
ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங்
கெடும்””””

அதிகாரத்தில் இருப்பவர்கள்
தவறு செய்யும் போது
அதைப்பற்றி
கருத்து சொல்பவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : அதிகாரத்தில்
        இருப்பவர்கள்
        தவறு செய்யும்
        போது
        அதிகாரத்திற்கு
        பயந்து தவறை
        சரி என்று
        சொல்பவர்கள்

இரண்டு : அதிகாரத்தில்
          இருப்பவர்கள்
          தவறு செய்யும்
          போது
          அதிகாரத்திற்கு
          பயப்படாமல்
          தவறை தவறு
          என்று
          சொல்பவர்கள்

ஒரு அலுவலகத்தில் உள்ள
ஒரு உயரதிகாரி
ஒரு திட்டத்தை
தானே தீட்டி
அதை செயல்படுத்த
வேண்டும்
என்று முடிவு செய்து
தங்கள் பணியாளர்களை
அழைத்து
கருத்து கேட்கிறார்.

ஒரு தவறான திட்டத்தை
உயரதிகாரி
கொண்டு வருகிறார்
இந்த தவறான
திட்டத்தால்
பல்வேறு விதமான
கஷ்டங்கள்
பணியாளர்களுக்கு
பணிச்சுமை
வேலைப்பளு
மன அழுத்தம் ஆகியவை
ஏற்பட வாய்ப்பு
உள்ளது என்பது
அனைவருக்கும்
தெரிந்து விடுகிறது

இருப்பினும்,
உயரதிகாரியை
பகைத்துக் கொண்டால்
தங்கள் வேலைக்கு
பாதிப்பு ஏற்படும்
என்பதை
கருத்தில் கொண்டு
உயரதிகாரி தவறு
செய்யும் போது
அந்த தவறை
சுட்டிக் காட்டாமல்
உயரதிகாரி செய்யும்
தவறான செயலை
சரியான செயல் என்று
தலை ஆட்டுபவர்களை,
அதிகாரத்தில் இருப்பவர்கள்
தவறு செய்யும் போது
அதிகாரத்திற்கு பயந்து
தவறை சரி என்று
சொல்பவர்கள் என்றும்
இத்தகையவர்களை
சுயநலமிக்கவர்கள்
என்றும் சொல்லலாம்.

உயரதிகாரி
தவறு செய்யும் போது
அதை உணர்பவர்கள்
அந்த தவறை
சுட்டிக் காட்டினால்
எந்தவிதமான விளைவுகள்
தங்களுக்கு ஏற்படும்
என்பதை உணர்ந்தாலும்
அதற்கு அஞ்சாமல்
உயரதிகாரி தவறு செய்தால்
நான் சுட்டிக் காட்டுவேன்
உண்மையை எடுத்து
உரைப்பேன் என்று
எதற்கும் அஞ்சாமல்
தவறை தவறு என்று
சுட்டிக் காட்டுபவர்களை,
அதிகாரத்தில் இருப்பவர்கள்
தவறு செய்யும் போது
அதிகாரத்திற்கு
பயப்படாமல்
தவறை தவறு என்று
சொல்பவர்கள் என்றும்
இத்தகையவர்களை
சுயநலமற்றவர்கள்
என்றும் சொல்லலாம்

அதிகாரத்தில்
இருப்பவர்கள் தவறு
செய்யும் போது
அதிகாரத்திற்கு பயந்து
தவறை சரி
என்று சொல்பவர்களை
அதாவது
சுயநலமிக்கவர்களை
மன்னன்
அருகில் வைத்துக்
கொண்டு,
அதிகாரத்தில்
இருப்பவர்கள் தவறு
செய்யும் போது
அதிகாரத்திற்கு
பயப்படாமல்
தவறை தவறு
என்று சொல்பவர்களை
அதாவது
சுயநலமற்றவர்களை
மன்னன்
அருகில் வைத்துக்
கொள்ளாமல் இருந்தால்
மன்னனை அழிக்க
அண்டை நாட்டிலிருந்து
படை எடுத்து வர
வேண்டிய அவசியமில்லை;
நாட்டை கைப்பற்ற
சதி வேலைகள்
செய்ய வேண்டிய
அவசியமில்லை;
மன்னனை
வஞ்சகத்தால் வீழ்த்த
வேண்டிய அவசியமில்லை;
துரோகத்தால் சாகடிக்க
வேண்டிய அவசியமில்லை
தவறான
திட்டங்களைத் தீட்டி
மன்னன் தன்னைத் தானே
அழித்துக் கொள்வான்
என்பதைத் தான்

“”””இடிப்பாரை இல்லாத
ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங்
கெடும்””””

என்ற திருக்குறளின்
மூலம் தெரிவிக்கிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  30-08-2018
///////////////////////////////////////////////


No comments:

Post a Comment