July 22, 2020

அறிய வேண்டியவை-பதிவு-112


             ஜபம்-பதிவு-604
        (அறிய வேண்டியவை-112)

பலராமர் :
“ஆனால் பீமன்
கதாயுத
சண்டையின்
விதியை மீறி
இருக்கிறானே
அது
தவறில்லையா?”

கிருஷ்ணன் :
“பீமன் தவறு
செய்யவில்லை
கதாயுதத்தின்
விதிகளை மீறி
அவன் தவறு
எதுவும்
செய்யவில்லை
கதாயுதத்தின்
விதிகளுக்கு
உட்பட்டுத்
தான் பீமன்
துரியோதனனுடைய
தொடையில்
அடித்தான் “

“துரியோதனன்
நிற்கும் போதும்
சுழலும் போதும்
துரியோதனனுடைய
தொடையை
பீமன்
அடிக்கவில்லை
விண்ணிலே
உயர்ந்து
எழுந்த
போது தான்
துரியோதனனுடைய
தொடையில்
பீமன்
அடித்தான்“

“இது கதாயுதச்
சண்டையின்
விதிகளை மீறிய
செயல்
இல்லையே
அண்ணா”
  
பலராமர் :
“ஏதேனும் ஒரு
செயலைச்
செய்து விட்டு
அதற்கு நீ
சொல்லும்
காரணங்களும்
காரணத்தைச்
சொல்லி விட்டு
அதற்கு நீ
கொடுக்கும்
விளக்கங்களும்
என்னால்
ஏற்றுக்
கொள்ள
முடியவில்லை
என்றாலும்
நிராகரிக்கவும்
முடியவில்லை”

“உனக்கு எது
நல்லது என்று
தோன்றுகிறதோ
அந்த
செயலைச்
செய்து
கொண்டிருக்கிறாய்
செயலுக்குரிய
காரணத்தையும்
அதற்குள்ளேயே
வைத்திருக்கிறாய்”

“நீ செய்யும்
எந்த ஒரு
செயலிலும்
காரணம் என்ற
ஒன்று
இருக்கும்
காரணம்
இல்லாமல்
நீ எந்த ஒரு
செயலையும்
செய்வது
இல்லை”

“உனக்கு
உகந்ததை
செய்து
கொண்டிருக்கிறாய்”

“இருந்தாலும்
அந்த கோழை
பீமனை
என்னால்
எக்காலத்திலும்
மன்னிக்கவே
முடியாது
பீமன் என்னுடைய
சீடனாக
இருப்பதற்குரிய
தகுதியை
இழந்து
விட்டான்
துரியோதனன்
மட்டுமே
என்னுடைய
சீடனாக
இருக்க
தகுதி
வாய்ந்தவன்”

“துரியோதனனை
என்னுடைய
சீடன்
என்று
சொல்லிக்
கொள்வதில்
பெருமையடைகிறேன்
பீமனை
என்னுடைய
சீடன்
என்று
சொல்லிக்
கொள்வதற்கு
நான்
வெட்கப்படுகிறேன் “

(என்று சொல்லி
விட்டு தேர் ஏறி
துவாரகாபுரிக்குச்
சென்று விட்டார்
பலராமர்)

(யாராலும் வீழ்த்த
முடியாத
துரியோதனனை
பீமன் வீழ்த்தி
விட்டார் என்று
அனைவரும்
பீமனை
புகழ்ந்தார்கள்
வாழ்த்தினார்கள்)

(துரியோதனன்
தான் செய்த
அதர்மத்தினால்
தான்
அழிந்து
கொண்டிருக்கிறான்
என்று
துரியோதனனை
இகழ்ந்து
கொண்டிருந்தனர்
திட்டினார்கள்
அங்குக்
கூடியிருந்தவர்கள்
இதைக்
கேட்டுக்
கொண்டிருந்தார்
கிருஷ்ணன்)

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 22-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment