July 22, 2020

அறிய வேண்டியவை-பதிவு-111


             ஜபம்-பதிவு-603
        (அறிய வேண்டியவை-111)

கிருஷ்ணன் :
“மைத்ரேய முனிவர்
சொன்ன
அறிவுரைகளை
ஏற்றுக் கொள்ளாமல்
அவரை அவமானப்
படுத்தும் வகையில்
துரியோதனன்
நடந்து கொண்டான்
இதனால்
கோபமுற்ற
மைத்ரேய முனிவர்
துரியோதனனிடம்
நடக்கப் போகும்
மாபெரும் போரில்
பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும்
இடையே நடக்கும்
பெரும் போரில்
துரியோதனா
உன்னுடைய
தொடைகள்
உடைக்கப்பட்டுத்
தான் நீ இறப்பாய்
உன்னுடைய
இறப்பு உன்னுடைய
தொடைகள்
உடைக்கப்பட்டதால்
தான் இருக்கும்
என்று
மைத்ரேய முனிவர்
துரியோதனனுக்கு
சாபம் கொடுத்தார் “

“கௌரவர்கள்
அவையில்
திரௌபதி
அவமானப்
படுத்தப் பட்டபோது
கொதித்தெழுந்த பீமன்
துரியோதனா
உன்னுடைய
தொடையை
உடைத்து
உன்னைக்
கொல்வேன்
என்று பீமன்
சபதம் எடுத்தான் “

“துரியோதனனுடைய
தாயான காந்தாரியும்
தன்னுடைய
மகனுக்கு
இடுப்பிற்குக் கீழ்
தொடைப்பகுதியில்
அவளால்
சக்தியை வழங்க
முடியவில்லை
துரியோதனனுடைய
தொடைப்பகுதி
உடலிலேயே
பலவீனமாக
பகுதியாக
மாறி விட்டது “

“துரியோதனன்
தொடை உடைந்து
சாக வேண்டும்
என்று
மைத்ரேய முனிவர்
துரியோதனனுக்கு
கொடுத்த சாபம்
நிறைவேற வேண்டும்
என்பதற்காக
காலம் பீமனைத்
தேர்ந்தெடுத்து
சபதம் எடுக்க
வைத்தது
அதனால் தான்
பீமன்
துரியோதனனுடைய
தொடையை
உடைப்பேன் என்று
சபதம்
மேற்கொண்டான்”

“துரியோதனனுடைய
தொடை
உடைக்கப்பட்டு
மரணம் நிகழ
வேண்டுமானால்
துரியோதனனுடைய
தொடை
பலவீனமான
பகுதியாக
இருக்க வேண்டும்
என்பதற்காக காலம்
துரியோதனனுடைய
தாயான
காந்தாரியை
துரியோதனனுடைய
தொடைக்கு
தன்னுடைய சக்தியை
அளிக்க முடியாமல்
செய்தது”

“பீமனும் தனது
கதாயுதத்தால்
துரியோதனனுடைய
தொடையை
உடைத்தான்”

“மைத்ரேய முனிவர்
கொடுத்த சாபத்தை
முடிப்பதற்கு காலம்
பலபேரை
பயன்படுத்திக்
கொண்டு
செயல்களைச்
செய்து விட்டு
இறுதியாக
துரியோதனனுடைய
தொடையை
உடைக்க
பீமனைப்
பயன்படுத்திக்
கொண்டது
பீமனும்
துரியோதனனுடைய
தொடையை
உடைத்தான்
இந்த நீண்ட
நிகழ்வில் பீமன்
ஒரு சிறு கருவி
மட்டும் தான் “

“துரியோதனன்
விதைத்த
பாவத்தின்
விளைவை
இப்போது
அனுபவித்துக்
கொண்டிருக்கிறான்”

“பாவத்தை
செய்து விட்டு
செய்த
பாவத்திற்குரிய
விளைவை
அனுபவிக்காமல்
யாரும் தப்பிக்க
முடியாது
செய்த
பாவத்திற்குரிய
விளைவை
அனுபவித்துத் தான்
ஆக வேண்டும்”

“துரியோதனன்
செய்த
பாவத்திற்கான
விளைவானது
பீமன்
மூலமாக
வெளிப்பட்டு
இருக்கிறது
பீமன் தவறு
எதுவும்
செய்யவில்லை”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 22-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment