July 22, 2020

அறிய வேண்டியவை-பதிவு-113


             ஜபம்-பதிவு-605
       (அறிய வேண்டியவை-113)

கிருஷ்ணன்  :
“ஏற்கனவே
காயங்களால்
வேதனைப் பட்டுக்
கொண்டிருக்கும்
துரியோதனனை
வார்த்தைகளால்
காயப்படுத்தாதீர்கள்”

“காதாயுதத்தால்
காயம் பட்டு
கிடக்கும்
துரியோதனனுடைய
கதை முடியப்
போகிறது
துரியோதனன்
தள்னுடைய
இறுதி
அத்தியாயத்தை
நெருங்கிக்
கொண்டிருக்கிறான்
மரணம்
துரியோதனனை
நெருங்கிக்
கொண்டிருக்கிறது”

“செய்த வினை
செய்தவனை
சும்மா விடாது
என்பதற்கேற்ப
துரியோதனன்
செய்த தீவினை
துரியோதனனை
சுட்டெரித்து
விட்டது என்பது
துரியோதனனின்
வாழ்வில்
உண்மையாகி
விட்டது “

“அதர்மம்
அழிந்து  தர்மம்
நிலைநாட்டப்படப்
போகிறது
தர்மம்
அரசாளப்
போகிறது”

(தொடையில்
காயம்பட்டு
தரையில்
படுத்துக்
கொண்டிருந்த
துரியோதனன்
கிருஷ்ணனுடைய
பேச்சைக்
கேட்டு விட்டு
கிருஷ்ணனிடம்
பேசத்
தொடங்கினான்)

துரியோதனன் :
“கிருஷ்ணா
தர்மத்தை நிலை
நாட்டப்
போகிறேன் என்று
சொல்லிக்
கொண்டு
நீ செய்த
செயல்கள்
அனைத்தும்
அதர்மச்
செயல்கள் தான்
அதர்மச்
செயலைப் புரிந்து
கொண்டு நீ
தர்மத்தைப்
பற்றிப் பேசுகிறாய்”

“இந்த உலகமும்
நீ செய்த
அதர்மச் செயலை
தர்மம் என்று
நினைத்துக்
கொண்டு
உன்னை
புகழ்கிறது”

“தர்மத்தின்படி
இந்த
குருஷேத்திரப் போர்
நடைபெற்று
இருந்தால்
நாங்கள் தான்
வெற்றி பெற்று
இருப்போம்
கௌரவர்கள்
தான் வெற்றி
பெற்று
இருப்பார்கள்
தர்மத்தைக்
கடைபிடிக்காமல்
அதர்மத்தை
பின்பற்றி நீ
செய்த
செயல்களால்
தான் நாங்கள்
தோற்றோம்”

“சிகண்டியை
பீஷ்மர் முன்னால்
நிறுத்தி வைத்து
அதன் மூலம்
பீஷ்மருடைய
ஆயுதங்களைக்
கீழே போட
வைத்து
அதன் மூலம்
பீஷ்மரை
நிராயுதபாணியாக
நிற்க வைத்து
உலகத்திலேயே
சிறந்த
வில்லாளி
என்று
தன்னையே
புகழ்ந்து
கொள்ளும் அந்த
கோழைப்பயல்
அர்ஜுனனை
சிகண்டிக்கு
பின்னால்
ஒளிந்து கொண்டு
பாணங்களை
விடச் செய்து
அர்ஜுனனை
அதர்மச்
செயலைப்
புரியச் செய்து
பீஷ்மரை
காயத்துடன்
படுக்க
வைத்திருக்கிறாய்”

“தர்மர் தர்மத்தை
மட்டும் தான்
பேசுவார்
தர்மம் தவறி
பேச மாட்டார்
என்று
தர்மரை
தர்மவான்
என்று
இந்த உலகம்
புகழ்ந்து கொண்டு
இருக்கும்
விஷயத்தை
உனக்கு
சாதகமாகப்
பயன்படுத்திக்
கொண்டு
தர்மரை வைத்து
துரோணரிடம்
உங்களுடைய
மகன்
அஸ்வத்தாமன்
இறந்தான்
என்று பேச
வைத்து
துரோணருடைய
ஆயுதங்களை
எல்லாம் கீழே
போட வைத்து
துரோணரை
நிராயுதபாணியாக
இருக்க வைத்து
திருஷ்டத்யும்னனை
அதர்மச் செயல்
புரியச் செய்து
துரோணரை
வீழ்த்தினாய் “

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 22-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment