February 11, 2017

2.இயேசு கிறிஸ்து-அகத்தியர்-கேளப்பா-பதிவு-(2)-79-1

2.இயேசு கிறிஸ்து-அகத்தியர்-கேளப்பா -பதிவு-(2)-79-1

         """"பதிவு எழுபத்துஒன்பதை விரித்துச் சொல்ல
         ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

அகத்தியர்:

""""கேளப்பா பதிதானும் பசுபாசமறியும்
கெணிதமுடன் பசுதானும் பதிதனையுமறியும்
   வாளப்பா பசுவறியும் பாசமதைத்தானும்
           மகத்தான பாசமது பசுவையறியாது
   ஆளப்பா பாசமது பசுவதனைக்காண
           அரகரா குருவருளா லரியவேணும்
   சூளப்பா யிதுதனையு மறியாதாராகில்
           சுளிவாகப் பசுபாசங் கூடும்பாரே


கூடியொன்றாய் விளைவதுவு மழிவதுவுமாகும்
குறிப்புடனே பசுவந்து மேவிநன்றாய்
நாடியதோ ரிச்சையிலே புகுதப்பண்ணி
நலமில்லா பிறப்பிறப்புக் கிடமதாகும்
தேடியபசு பாசத்துடன் கூடாதே
                                சிறந்தபசு பாசமுருத் தரிக்குமோதான்       
சூடியே பதிவந்து புகுந்தவாரும்
        சொற்பசுவும் மாசமுரு வானவாரும்

வாரான பக்குவங்கள் பூரணமதாக
வருந்துறைக்க வேணுமென்றால்             
                    அடியைக்கொண்டேன்
சீரான பக்குவங்க ளொன்றுமில்லை
சிறந்தபதி பரமாகும் பசுவதுவுமுயிராம்
பேரான பாசமது தேகமதுவாகும்
பெலமானபசுவதுவும் பதியில்மிகச் சேர்ந்தால்
வீரான தேகமேன்ற பாசமதுக்குருதி
மெய்யாக நின்றுதவம் மேன்மைபெறக்காணே. """""


                                                         --------அகத்தியர்
                                                       --------அகத்தியர் பரிபூரணம்-1200

ஒப்பீடு என்பது சமுதாயத்தில்
சர்வ சாதாரணமாக நடைபெறும் ஒரு விஷயமாகும்
ஒப்பீடு இன்றி எந்த ஒன்றையும் நாம்
தெளிவாக உணர்ந்து கொள்வது கிடையாது
ஒப்பீடு செய்தே சமுதாயம்
ஒன்றை உணர்ந்து கொள்ள
முயற்சி செய்து வருகிறது
ஒப்பீடு இல்லாமல் தனிப்பட்ட ஒன்றின் தன்மையை
அதனால் தெரிந்து கொள்ள முடியாது.
ஒப்பீடு இல்லாமல் எந்த ஒன்றையும்
அதனால் தெரிந்து கொள்ள முடிவதில்லை.

ஒன்றைப் பற்றி சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்
அதனுடன் தொடர்புடைய மற்றொன்றை
தொடர்பு படுத்தியே சமுதாயம் தெரிந்து கொள்கிறது
ஒப்பீடு இல்லாமல் சமுதாயத்தால் ஒன்றைப் பற்றி தெரிந்து
கொள்ள முடிவதில்லை.

ஒப்பீடு செய்தே அனைத்தையும் தெரிந்து
கொள்ள முயற்சி செய்த காரணத்தால்
சமுதாயம் ஒப்பீடு இல்லாமல்
தனிப்பட்ட நிலையில் ஒன்றைப் பற்றி
தனிப்பட்ட நிலையில்
தெரிந்து கொள்ள
சமுதாயத்தால் முடிவதில்லை.

சமுதாயம்
ஒன்றைப் பற்றி
தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்,
ஒன்றின் தன்மையைப் பற்றி
அறிந்து கொள்ள வேண்டுமென்றால்,
அதனுடன் தொடர்புடைய
மற்றொற்றை தொடர்பு படுத்தி,
ஒப்பீடு செய்து,
உயர்ந்தது எது
தாழ்ந்தது எது என்று முடிவு செய்து,
அதில் உயர்ந்தது எதுவோ
அதைத் தான் சிறந்தது - என்று
முடிவு செய்து,
தனக்கு தேவைப்படுவது
இது தான் என்று முடிவு செய்து
தனக்கு உகந்தது
இது தான் என்று முடிவு செய்து
அதனைத் தேர்ந்து எடுக்கிறது.

உயர்திணை என்று எடுத்துக் கொண்டாலும்,
அஃறிணை என்று எடுத்துக் கொண்டாலும்,
ஒன்றின் தன்மையைப் பற்றி
தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்,
ஒப்பீடைப் பயன்படுத்தி
உயர்ந்தது, தாழ்ந்தது என்று
பேதம் பிரித்துப் பார்த்து
சிறந்ததை தேர்வு செய்கிறோம்.

இவ்வாறு நாம் எடுக்கும் முடிவானது
எதைப் பொறுத்து இருக்கும் என்றால்
எண்ணத்தை பூர்த்தி செய்வதாக இருந்தால்
தேவையை நிறைவு செய்வதாக இருந்தால் - மட்டுமே
நாம் நம்முடைய தேவையை
நமக்கு தேவைப்படும் ஒன்றை
நாம் விரும்பிய ஒன்றை
நமக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஒன்றை
நாம் விருப்பப்பட்ட ஒன்றை
உயர்ந்தது, தாழ்ந்தது என்று
பிரித்து பார்த்து
பேதம் பிரித்து பார்த்து
இறுதியில் முடிவு செய்து
சிறந்தது என்று முடிவு செய்த பிறகு
நமக்கு தேவையானதை தேர்வு செய்கிறோம்.
நாம் செய்வது இதைத்தான்
நமக்கு ஒன்று தேவைப்படுகிறது
அது உயர்திணையாகவோ
அல்லது அஃறிணையாகவோ இருந்தால்,
அதனுடன் தொடர்புடைய
ஒன்றை எடுத்துக் கொண்டு
அதை மற்றொன்றுடன் ஒப்பிட்டு,
அது உயர்ந்ததா அல்லது
தாழ்ந்ததா - என்று முடிவு செய்து
அது தன் எண்ணத்தை பூர்த்தி செய்வதாக இருந்தால்,
அது தன் தேவையை நிறைவு செய்வதாக இருந்தால்,
அது சிறந்தது என்று முடிவு செய்து
அதை தேர்ந்தெடுக்கிறோம்.

சமுதாயம் தனக்கு தேவைப்படும் ஒன்றை
அதனுடன் தொடர்புடைய ஒன்றுடன்
தொடர்பு படுத்தித் தான்
ஒப்பீடு செய்து தான்
தனக்கு தேவையான ஒன்றை தேர்வு செய்கிறதே தவிர
தனிப்பட்ட நிலையில் அதனால் தேர்ந்து எடுக்க முடியவில்லை.

ஒப்பீடு செய்தே பழக்கப்பட்ட மனதால்
ஒப்பீடு இல்லாமல் தனக்கு தேவையான
ஒன்றை சமுதாயத்தால் தேர்வு
செய்ய முடியவில்லை.

உயர்திணை ஒப்பீடு
ஒருவன் திருமணம் செய்ய
ஒரு பெண்ணை பெண் பார்க்கிறான்
பெண்ணைப் பார்த்து விட்டு
அந்தப் பெண்ணின்
குணநலன்கள்,
சொந்தங்கள்,
சொத்துக்கள்,
வேலை,
ஆகியவற்றைப் பற்றி
சிந்தனை செய்கிறான்.
அவனுடைய சிந்தனையில்
பல்வேறு விதமான
எண்ணங்கள் தோன்றுகின்றன.
பெண் அழகாக இருக்கிறாள்;
வசதியாக இருக்கிறாள்;
அன்பு நிறைந்தவளாக இருக்கிறாள்;
கருணை மனம் கொண்டவளாக இருக்கிறாள்;
இரக்கத்தில் ஊறியவளாக இருக்கிறாள்;
நல்ல சொந்தங்கள் நிறைந்தவளாக இருக்கிறாள்;
இவளை தேர்வு செய்யலாமா வேண்டாமா என்று
முடிவு செய்வதற்கு முன்
பலமுறை சிந்தனை செய்கிறான்;
குழப்பத்தில் ஆழ்கிறான்;
மனக்குழப்பத்தில் மாட்டிக் கொள்கிறான்.

இந்த குழப்பம் தெளிவடைய வேண்டுமானால்
அதனுடன் தொடர்புடைய வேறொன்று
அவனுக்கு தேவைப்படுகிறது
உயர்திணையாக இருப்பதால்
உயர்திணை அவனுக்கு தேவைப்படுகிறது.

முதலில் பார்த்த ஒரு பெண்ணுடன்
தற்போது பார்த்த பெண்ணை
ஒப்பீடு செய்து பார்க்கிறான்
முதலில் பார்த்த பெண் அழகாக இருக்கிறாள்
ஆனால் சொத்து இல்லை;
இரண்டாவதாக பார்த்த பெண்ணுக்கு
அழகும் இருக்கிறது
சொத்தும் இருக்கிறது;

முதலில் பார்த்த பெண்ணுக்கு
சொந்த பந்தங்களின் ஆதரவு இல்லை;
ஆனால் இரண்டாவது பார்த்த பெண்ணுக்கு
சொந்த பந்தங்களின் ஆதரவு இருக்கிறது;
முதலில் பார்த்த பெண் வேலை செய்யவில்லை;
ஆனால் இரண்டாவது பார்த்த பெண் வேலை செய்கிறாள்;

முதலில் பார்த்த பெண்ணுக்கு
அழகும் இருக்கிறது,
யோசிக்கும் திறனும் இருக்கிறது;
ஆனால் இரண்டாவது பார்த்த பெண்ணுக்கு
அழகும் இருக்கிறது,
யோசிக்கும் திறனும் இருக்கிறது,
இவைகளை செயல்படுத்தும் அறிவும் இருக்கிறது;
என்பதை பல்வேறு நிலைகளில்
பல்வேறு தன்மைகளை,
பல்வேறு இயல்புகளை,
பல்வேறு பட்டவைகளை,
ஒப்பீடு செய்து பார்த்து,
முதலில் பார்த்த பெண்ணை
இரண்டாவது பார்த்த பெண்ணுடன்
ஒப்பீடு செய்து பார்த்து.
உயர்ந்தது எது,
தாழ்ந்தது எது என்று
முடிவு செய்கிறான்.

அவன் எடுக்கும் முடிவு
அவனைப் பொறுத்துத் தான்
சரியே தவிர,
அதுவே சரி என்று சொல்ல முடியாது
ஏனென்றால்,
அவன் தனக்கு என்று
ஒரு எண்ணத்தை உருவாக்கி வைத்திருக்கிறான்;
தனக்கு என்று
ஒரு தேவையை உருவாக்கி வைத்திருக்கிறான்;
அதை நிறைவு செய்வது எதுவோ,
அதுவே உயர்ந்தது என்றும்
மற்றது தாழ்ந்தது என்றும்
முடிவு செய்கிறான்.

மனிதன் எதை உயர்ந்தது
என்று முடிவு செய்கிறானோ
அதை சிறந்தது என்று
நினைத்துக் கொள்கிறான்.

மனிதன் ஒன்றை தேர்வு தேர்வு செய்ய,
உயர்திணையில் ஒன்றை தேர்வு செய்ய,
அதனுடன் தொடர்புடைய வேறு
ஒரு உயர்திணையை ஒப்பீடு செய்து
அதில் உயர்ந்தது எது,
தாழ்ந்தது எது,
என்று பேதம் பிரித்து பார்த்து
எது தன் எண்ணத்தை பூர்த்தி செய்கிறதோ,
எது தன் தேவையை நிறைவு செய்கிறதோ,
அது சிறந்தது
என்று முடிவு செய்து
அதை மனிதன் தேர்வு செய்கிறான்.

ஒப்பீடு இல்லாமல் மனிதனால்
ஒன்றை தேர்வு செய்யமுடியவில்லை
சுயமாக சிந்தித்து ஒன்றை
மனிதனால் தேர்வு செய்ய முடியவில்லை.

அஃறினை ஒப்பீடு
ஒருவன் ஒரு வீட்டை
வாங்க வேண்டும் என்று நினைக்கிறான்.
அதற்காக ஒரு வீட்டைப் பார்க்கிறான்.
வீடு அழகாக இருக்கிறது;
தன்னால் விலை கொடுத்து
வாங்கக் கூடிய நிலையில் தான்
அந்த வீடு இருக்கிறது;
அந்த வீடு வசதியாக இருக்கிறது;
வாகனம் நிறுத்துவதற்கு வசதிகள் இருக்கிறது;
வெளியே செல்ல பேருந்து வசதிகள் இருக்கிறது;
ரெயில் வசதிகள் இருக்கிறது;
கடை வீட்டிற்கு அருகில் இருக்கிறது;
அக்கம் பக்கத்தில் மக்கள் இருப்பதால்
பாதுகாப்பாக இருக்கிறது;
படிக்கும் அறை நன்றாக இருக்கிறது;
படுக்கும் அறை அருமையாக இருக்கிறது;
சமையல் அறை அற்புதமாக இருக்கிறது;
கழிவறை காற்றோட்ட வசிதியுடன் இருக்கிறது;
பூஜை அறை அமைதி தவழும் விதத்தில் இருக்கிறது;
காற்றோட்ட வசதி அருமையாக இருக்கிறது;
சன்னல்கள் காற்றை அற்புதமாக உள்ளே
அனுப்பும் வகையில் இருக்கிறது;
மொத்தத்தில் வீடு நாம்
எதிர்பார்த்த விதத்தில் வசதியாக இருக்கிறது;
என்று பார்க்கிறோம்
இது நமக்கு ஏற்றது என்று
முடிவு செய்கிறோம்.

ஆனால் அந்த முடிவு இறுதியானது என்று
நாம் முடிவு     செய்வதில்லை,
இரண்டாவதாக ஒரு வீட்டைப் பார்க்கிறோம்
அதாவது இரண்டாவதாக
வேறு ஒரு வீட்டை பார்க்கிறோம்.
நாம் இரண்டாவதாக பார்த்த வீடு
முதலாவதாக பார்த்த வீட்டை விட
பல்வேறு விதமான
நன்மைகளைத் தரக்கூடியதாக இருக்கிறது
அதாவது இரண்டாவதாக பார்த்த வீடு
முதலாவதாக பார்த்த வீடு நிறைவு செய்த
நன்மைகள் எல்லாவற்றையும்
இரண்டாவது வீடு நிறைவு செய்கிறது.

அதற்காக முதலாவது பார்த்த வீடு
நன்றாக இல்லை என்று பொருள் இல்லை
முதலாவது பார்த்த வீடு நன்றாக இருக்கிறது.
ஆனாலும்,
இரண்டாவது பார்த்த வீடு
நம் எண்ணத்தை பூர்த்தி செய்ததோடு மட்டுமல்லாமல்
நாம் என்ன எதிர்பார்த்தோமோ,
நாம் என்ன கற்பனை செய்து வைத்திருந்தோமோ,
நாம் என்ன கனவு கண்டிருந்தோமோ,
அப்படியே இருந்த காரணத்தினால் தான்
இரண்டாவது பார்த்த வீடு
நன்றாக இருக்கிறது என்று சொல்கிறோமே அல்லாமல்
இரண்டாவது வீடு சிறந்தது என்றோ
முதலாவது வீடு சிறந்தது இல்லை என்றோ
அர்த்தம் இல்லை.

முதலாவது வீடு சிறந்தது தான்;
இரண்டாவது வீடும் சிறந்தது தான்;
இரண்டுமே சிறந்தது தான்;
ஆனால் முதலில் பார்த்த வீட்டை
இரண்டாவதாக பார்த்த
வீட்டுடன் ஒப்பிட்டு,
முதலாவது வீட்டை விட
இரண்டாவது வீடு
தன் எண்ணத்தை பூர்த்தி
செய்வதாக இருப்பதாலும்,
இரண்டாவது வீடு
தன் தேவையை நிறைவு
செய்வதாக  இருப்பதாலும்,
இரண்டையும் ஒப்பீடு செய்து
இரண்டாவது வீடு உயர்ந்தது,
முதலாவது வீடு தாழ்ந்தது - என்று
முடிவு செய்து
இரண்டாவது வீடே சிறந்தது என்று முடிவு செய்து
ஒப்பீடு செய்து
இரண்டாவது வீட்டை தேர்வு செய்கிறான்.


ஒரு வீட்டை தேர்வு செய்ய வேண்டுமென்றாலும்
அதாவது அஃறினைப் பொருளை
தேர்வு செய்வதாக இருந்தாலும்
ஒரு வீட்டை அதனுடன் தொடர்புடைய வேறு
ஒரு வீட்டுடன் தொடர்பு படுத்தி
உயர்ந்தது எது
தாழ்ந்தது எது என்று
முடிவு செய்து.
தன் எண்ணத்தை எது பூர்த்தி செய்கிறதோ,
தன் தேவையை எது நிறைவு செய்கிறதோ,
அதை சிறந்தது என்று முடிவு செய்து
தனக்கு தேவைப்படும் ஒன்றை
தேர்வு செய்கிறான்.

மனிதன் ஒப்பீடு செய்து ஒன்றை தேர்வு செய்கின்ற
காரணத்தினால் அது தான் உயர்ந்தது என்றும்
மற்றது தாழ்ந்தது என்றும் சொல்ல முடியாது.

அவனுக்கு தேவைப்படும் ஒன்றை - அதாவது
அவனது எண்ணத்தை எது பூர்த்தி செய்கிறதோ,
அவனது தேவையை எது நிறைவு செய்கிறதோ,
அதைத் தான் சிறந்தது என்று தேர்வு செய்கிறான்.
இதற்கு அவனுக்கு ஒப்பீடு தேவைப்படுகிறது
ஒப்பீடு இல்லாமல் மனிதால் ஒன்றை
தேர்வு செய்ய முடியவில்லை.

இதற்குக் காரணம்
அவன் சிற்றின்பத்திற்கும், பேரின்பத்திற்கும்
உள்ள வேறுபாட்டை
உணர்ந்து கொள்ளாததினால் தான்.

சிற்றின்பத்திற்கும், பேரின்பத்திற்கும்
உள்ள வேறுபாட்டை
யார் ஒருவர் உணர்ந்து கொள்கிறாரோ
அவரால் மட்டுமே
ஒப்பீடு இல்லாமல்
ஒன்றின் தன்மையைப் பற்றி
உணர்ந்து கொள்ள முடியும்.

அதற்கு நம்மைச் சுற்றி நடக்கும்
நிகழ்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்;
வார்த்தைகளின் அர்த்தங்களைத்
தெரிந்து கொள்ள வேண்டும்;
பழமொழிகளில் உள்ள
ஆழமான அர்த்தங்களைத்
தெரிந்து கொள்ள வேண்டும்;
அவ்வாறு தெரிந்து கொள்பவர்களால் மட்டுமே
சிற்றின்பத்திற்கும்பேரின்பத்திற்கும்
உள்ள வேறுபாட்டை
உணர்ந்து கொள்ள முடியும்.

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா"

இதற்கு பொதுவாக சொல்லப்படும் கருத்து,
சிறிய வயதில் நாம் குனிந்து, நெளிந்து, வளைந்து,
அதாவது உடலை வளைத்து, நெளித்து வேலை செய்து
உடலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் தான்
வயதான காலத்தில்
உடம்பு  நல்ல நிலையில் இருக்கும்.
வேலை செய்வதற்கும்,
நோய் இல்லாமல் வாழ்வதற்கும்,
ஏதுவாக இருக்கும் - என்பது
பொதுவாக சொல்லப்படும் கருத்து.

இதற்கு அர்த்தம் கீழ்கண்டவாறும் சொல்லலாம்
இங்கே ஐந்து என்று சொல்லப்படுவது
பஞ்ச பூதங்கள் ஆகும்.
வளைதல் என்றால்
பின்னோக்கி செல்லுதல்
என்று பொருள்.

பஞ்ச பூதங்கள் எவை என்றும்,
அவை எங்கிருந்து வந்தது என்றும்,
அவை எங்கிருந்து தோன்றியது என்றும்,
அவை எங்கிருந்து உற்பத்தியானது என்றும்,
அதனுடைய மூலம் எது என்றும்,
அது தோன்றுவதற்கு காரணமாக
இருந்தது எது என்றும்,
அது எதிலிருந்து தோன்றியது என்றும்,
அறிய வேண்டும்.

அவ்வாறு அறிவதன் மூலம் தான்
ஆதி மூலம் எது என்றும்,
பரம்பொருள் எது என்றும்,
சுத்த வெளி எது என்றும்,
வெட்ட வெளி எது என்றும்,
பிரம்மம் எது என்றும்,
கடவுள் எது என்றும்,
எல்லாவற்றிற்கும் அடிப்படை எது என்றும்,
எல்லாவற்றையும் படைத்தது எது என்றும்,
எலலாவற்றையும் காத்து வருவது எது என்றும்,
எல்லாவற்றையும் அழித்து வருவது எது என்றும்,
எது எல்லாவற்றையும் பாதுகாத்து
வழிநடத்தி கட்டி
காப்பாற்றி வருகிறது என்றும்,
அறிய முடியும்.

பஞ்ச பூதங்களைப் பற்றி தெரியாதவர்களுக்கு,
ஆதி மூலம் எது என்று கண்டு பிடிக்க முடியாது;
பரம் பொரு எது என்று உணர முடியாது;
உண்மை எது என்று அறிய முடியாது;
மூலத்தை உணர்ந்து கொள்ள முடியாது;
ஆரம்பம் எது என்றும்,
முடிவு எது என்றும்,
உணர்ந்து கொள்ள முடியாது
அனைத்துக்கும் காரணம் எது
என்று அறிய முடியாது.

பஞ்ச பூதங்களைப் பற்றி தெரியாதவர்களால்
உண்மையை உணர்ந்து கொள்ள முடியாது
உண்மையை இறுதி வரை
உணர்ந்து கொள்ள முடியாது.

இரண்டு வேறுபட்ட உருவங்ளைக் கொண்ட
இரண்டு களிமண் உருவ சிலைகளை
எடுத்துக் கொள்வோம்.
இரண்டின் மூலம் எது என்று
கண்டுபிடிக்க வேண்டுமானால்,
அதன் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்;
அதாவது படிப்படியாக பின்னோக்கி செல்ல வேண்டும்;
எவ்வளவு தொலைவு நம்மால்
முடிந்த அளவு பின்னோக்கி செல்கிறோமோ,
எவ்வளவு தொலைவு
நம் அறிவுக்கு எட்டிய அளவு
பின்னோக்கி செல்கிறோமோ,
அந்த அளவிற்குத் தான்
நாம் அதன் மூலத்தை கண்டு பிடிக்க முடியும்.
பின்னோக்கி செல்ல வேண்டும்
மனத்தை பின்னோக்கி செலுத்த வேண்டும்
பின்னோக்கி செலுத்துவதன் மூலமே
நாம் ஒரு பொருளின்
ஆதி மூலத்தைக் கண்டு பிடிக்க முடியும்.

நமக்கு பின்னோக்கி செல்லக் கூடிய தகுதி
நமக்கு இல்லை என்றால்,
பின்னோக்கி சென்று நம்மால்
கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்,
நம்மால் எந்த பொருளின்
ஆதி மூலத்தைக் கூட கண்டுபிடிக்க முடியாது.
ஒரு பொருளின் ஆதி மூலத்தைக்
கண்டு பிடிக்க வேண்டுமானால்,
நம்மால் பின்னோக்கி செல்லக் கூடிய
தகுதி இருக்க வேண்டும்.
பின்னோக்கி செல்லக் கூடிய
தகுதி நமக்கு இல்லை என்றால்,
நம்மால் ஆதி மூலத்தைக் கண்டுபிடிக்க இயலாது.

இரண்டு களிமண் உருவங்களையும்
நீர் விட்டு குழைத்தால்
களிமண் வந்து விடும்
இரண்டுமே களிமண்ணால் ஆனது - என்று
தெரிந்து விடும்
இரண்டும் இரு வேறுபட்ட உருவங்கள் என்றாலும்
அந்த இரண்டும் களிமண்ணிலிருந்து வந்தது என்று
தெரிந்து கொள்ளலாம்
அப்படியே பின்னோக்கி சென்றால்
களிமண், மண், அணு என்று
பின்னோக்கி சென்றோமேயாகில்
அதன் மூலம் பரம்பொருள்
என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

அதைப்போல பஞ்சபூதங்கள் என்று
சொல்லப்படக் கூடிய
நிலம், நீர், நெருப்பு , காற்று , விண்- என்ற
ஐந்தின் மூலத்தை கண்டு பிடிக்க வேண்டுமானால்
பின்னோக்கி செல்ல வேண்டும்.

பஞ்சபூதங்கள் சிவம், சக்தி - என்ற
இரண்டின் கூட்டினால் வந்தது;
சக்தி, சிவத்திலிருந்து வந்தது
சிவம் ஆதிமூலம்.
பின்னால் இருந்து முன்னோக்கி சென்றோம்.

இப்போது முன்னால் இருந்து
பின்னோக்கி சென்றால்
முதல் நிலை சிவம்,
சிவத்திலிருந்து பிரிந்தது சக்தி,
சிவமும் சக்தியும் சேர்ந்தது
பஞ்ச பூதங்கள்.
இந்த பஞ்சபூதங்களிலிருந்து தான்
இந்த பிரபஞ்சம் மட்டுமல்லாது
உயிரினங்களும்
இந்த பஞ்ச பூதத்திலிருந்து தான் தோன்றியது
என்று தெரிந்து கொள்ளலாம்.
எனவே, பஞ்ச பூதங்களின் மூலம்
பரம்பொருள், சுத்த வெளி, வெட்ட வெளி,
பஞ்ச பூதங்களின் மூலம் வெட்டவெளி.

பஞ்ச பூதங்களின் பின்னால் சென்று
பஞ்ச பூதங்களின் ஆதி மூலம் எது - என்று
கண்டு பிடிக்க முடியாதவர்களால்,
எந்த ஒன்றையும் வைத்து
ஆதிமூலத்தைக் கண்டு பிடிக்க முடியாது
என்று பொருள்.

அதாவது ஐந்தில் வளையாதது
பஞ்சபூதங்களின் பின்னோக்கி சென்று
ஆதிமூலத்தைக்
கண்டுபிடிக்க முடியாதவர்களால்
ஐம்பதில் வளையுமா
அதாவது ஐம்பது பொருட்களை வைத்து
ஆராய்ச்சி செய்தாலும்,
முயற்சி செய்தாலும்,
எந்த ஒன்றையும் வைத்து
ஆதிமூலத்தைக் கண்டு பிடிக்க
முடியாது என்று பொருள்.

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா"
என்பதற்கு பொருள்
பஞ்ச பூதங்களின்
பின்னோக்கி சென்றால் தான்
ஆதிமூலத்தைக் கண்டுபிடிக்க முடியும்
பஞ்சபூதங்களின் பின்னோக்கி சென்று
ஆதி மூலத்தைக் கண்டு பிடிக்க முடியாதவர்களால்
வேறு எந்த ஒன்றையும் வைத்து
ஆதி மூலத்தைக் கண்டு பிடிக்க முடியாது என்று பொருள்.


"தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்"

சிறிய வயது முதல் நாம் எந்த
பழக்கத்தை பின்பற்றுகிறோமோ
அந்த பழக்கம் நாம் சாகும் வரை
நம்மைப் பின்தொடர்ந்து வரும்.

சிறிய வயதிலேயே
தீய பழக்கத்திற்கு அடிமையானால்
சாகும் வரை
தீய பழக்கத்திற்கு அடிமையாக வேண்டியது தான்;
அதனால் நல்ல பழக்க வழக்கங்களை
சிறிய வயது முதல் பின்பற்றி
நல்லவர்களாக வாழ வேண்டும் - என்று
சொல்லப்படுகிறது.
இதனை கீழ்க்கண்டவாறு கூட அர்த்தம் சொல்லலாம்.


பிறந்த குழந்தையை
நாம் தொட்டிலில் போடுகிறோம்
தொட்டிலில் இருக்கும் குழந்தைக்கு
ஐந்து பழக்க வழக்கங்கள் தான் இருக்கிறது
ஒன்று - கண்ணை திறந்து பார்க்கிறது;
இரண்டு - கண்ணை மூடி தூங்குகிறது;
மூன்று - உணவு உண்கிறது;
நான்கு - சிறு நீர் கழிக்கிறது;
ஐந்து - மலம் கழிக்கிறது.

இந்த ஐந்து பழக்கங்கள்
இந்த முக்கியமான
ஐந்து பழக்க வழக்கங்கள் தான்
குழந்தை செய்கிறது
இது தான் தொட்டில் பழக்கம்.

மனிதன் படிப்படியாக வளர்ந்து
வாழ்ந்து மடியும் வரை,
இந்த ஐந்து பழக்க வழக்கங்களைத் தான்
அவன் பின்பற்றுகிறான்.
உலகில் உள்ள
அனைத்து மனிதர்களும்,
இந்த ஐந்து பழக்கத்திற்குத் தான் அடிமை,
இது தான் தொட்டிற் பழக்கம்
சுடுகாடு மட்டும்.

ஒரு குழந்தை பிறக்கிறது என்றால்
அது கர்மவினையினால் பிறக்கிறது
கர்ம வினை இல்லை என்றால்
எந்த குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்காது
கர்ம வினையினால் பிறந்த குழந்தை
கர்ம வினையினை கழிக்க முடியவில்லை என்றால்
அந்த குழந்தை கர்ம வினையினை தீர்ப்பதற்காக
மீண்டும் குழந்தையாக பிறக்கிறது.

நாம் பிறந்துவிட்டால்
இந்த ஐந்து பழக்கங்களும்
இறக்கும் வரை நம் கூடவே இருக்கும்.
நாம் இறந்த பிறகு
மறுபடியும் ஒரு பிறப்பு உண்டு.
மீண்டும் குழந்தையாக பிறப்போம்;
மீண்டும் கர்மவினையினால்
குழந்தையாக பிறப்போம்;
இந்த ஐந்து பழக்கங்களும்
சுடுகாடு வரை வரும்.
இந்த ஐந்து பழக்கங்களும்
பிறவி பிறவியாக தொடரும்;
ஜென்மம் ஜென்மமாக தொடரும்;
நம்மை பின்தொடர்ந்து
வந்து கொண்டே இருக்கும்.

இவ்வாறு
இந்த ஐந்து பழக்கங்களும்
நம்மை  பின் தொடராமல்
இருக்க வேண்டுமானால்,
ஜென்ம ஜென்மமாக
நம்மை பின் தொடராமல்
இருக்க வேண்டுமானால்,
பிறவி பிறவியாக
நம்மை பின் தொடராமல்
இருக்க வேண்டுமானால்,
நாம் சாகாமல் இருக்க வேண்டும்.
நாம் சாகாமல் இருந்தால் மட்டுமே
மீண்டும் பிறக்காமல் இருக்க முடியும்.
நாம் மீண்டும் பிறக்காமல்
இருக்க வேண்டுமானால்
நாம் சாகாமல் இருக்க வேண்டும்.
ஆனால் உலகத்தில் பிறந்த அனைவரும்
ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும்.

நம் முன்னோர்கள் அறிவாளிகள்
கடவுளிடம் இறக்காமல் இருக்க வேண்டும் என்று
வரம் கேட்டால்,
வரம் கிடைக்காது.
என்பதை உணர்ந்து இருந்தார்கள்.

இறக்காமல் இருக்கும் வரத்தை அளிக்கும்
அதிகாரம் யாருக்கும் கிடையாது,
அதனால் புத்திசாலித் தனமாக கேட்டனர்.
நான் பிறக்காமல் இருக்க வேண்டும் என்று
இறைவனிடம் வரம் கேட்டால் வரம் கிடைக்கும்.
அதாவது பிறக்காமல் இருக்க வரம் கிடைக்கும்.
இது தான் சாமர்த்தியம்.
ஒருவன் பிறக்காமல் இருக்க வேண்டும் என்றால்,
அவன் சாகாமல் இருக்க வேண்டும்.
ஒருவன் சாகாமல் இருந்தால் மட்டுமே
அவனால் பிறக்க முடியாது
அவன் செத்தால் மீண்டும் பிறப்பான்.

அவன் மீண்டும் பிறக்காமல்
முக்தி அடைய வேண்டும்
முக்தி அடைந்து விட்டால்
அவனால் மீண்டும் பிறக்க முடியாது.
முக்தி அடையும் ஆன்மா மீண்டும் பிறக்காது
முக்தி அடைந்த மனிதன் மீண்டும் பிறக்க மாட்டான்.

அதனால் தான் நம் முன்னோர்கள்
இறவா வரம் வேண்டும் என்று கேட்டால் கிடைக்காது
என்ற காரணத்தினால் தான்
பிறவா வரம் வேண்டும் என்று கேட்டனர்;
பிறவா வரம் என்று கேட்டு விட்டால்,
பிறவா வரம் கேட்டு பெற்று விட்டால்,
பிறவா வரம் நமக்கு கிடைத்து விட்டால்,
முக்தி அடைந்து விடலாம்
என்ற  காரணத்தினாலேயே,
பிறவா வரம் கேட்டனர்.
ஆன்மீகத்தில் உச்ச நிலையில் இருந்தவர்கள்
உயர்ந்த நிலையில் இருந்தவர்கள்.

தொட்டிலில் ஆரம்பித்த
இந்த ஐந்து பழக்கங்களும்,
சுடுகாடு வரை நம்மை பின் தொடராமல்
இருக்க வேண்டும் என்றால்,
பிறவி பிறவியாக நம்மை பின் தொடராமல்
இருக்க வேண்டும் என்றால்,
ஜென்மம், ஜென்மமாக நம்மை பின் தொடராமல்
இருக்க வேண்டும் என்றால்,
நாம் முக்தி அடைய வேண்டும்.
நாம் முக்தி அடைந்து விட்டால்,
தொட்டில் பழக்கம்,
சுடுகாடு வரை வராது.
சுடுகாடு தாண்டி,
அடுத்த பிறவி வரை தொடராது;
அடுத்த ஜென்மம் வரை தொடராது;
கர்ம வினையில்,
நாம் மீண்டும் பிறக்க மாட்டோம்.

தொட்டிற் பழக்கம் சுடுகாடு வரை வராமல்
தடுக்க வேண்டும் என்றால்,
நாம் தவங்கள் இயற்றி,
கர்ம வினையினை கழித்து,
பிறவிகளை எரித்து,
ஜென்மங்களை பொசுக்கி,
முக்தி அடைய வேண்டும்.
அவ்வாறு நாம் செய்யவில்லை என்றால்,
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் இல்லாமல்,
பிறவி பிறவியாக
ஜென்மம் ஜென்மமாக தொடரும்.
தொட்டிற் பழக்கத்தை நிறுத்தி,
நாம் முக்தி அடைந்து விட்டால்,
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் வராது.
பிறவி, பிறவியாக தொடராது
ஜென்மம், ஜென்மமாக
நம்மை கர்ம வினைகள் பாதிக்காது.
எனவே, தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் வராமல்
நாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால்,
நாம் முக்தி அடைய வேண்டும்.
ழிழிழி


"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்"

அரிசியில் கலந்துள்ள உமியை
காற்று இருக்கும் போது
காற்று அடிக்கும் போது
காற்று அடிக்கும் திசையைப் பார்த்து
முரத்தில் போட்டு
காற்று அடிக்கும் திசையை நோக்கி தூற்றினால்
உமி வெளியேறும்
காற்று இல்லாமல் அரிசியில் கலந்துள்ள
உமியை விலக்க முடியாது என்று பொருள் கூறுவர்.

இதற்கு கீழ்க்கண்டவாறு கருத்து தெரிவிக்கலாம்

இதனை எளிமையாகக் கூற வேண்டுமானால்
உடலில் சுவாசக்காற்று இருக்கும்போதே,
அதாவது உடலில் உயிர் இருக்கும்போதே,
உயிரில் பதிந்துள்ள கர்மவினையைக் கழித்து
முக்தி அடைய வேண்டும் என்று பொருள்.

மனிதன் முக்தி அடைய
நான்கு நிலைகளைக் கடக்க வேண்டும்;
இந்த நான்கு நிலைகளும்
தெரிந்து இருக்க வேண்டும்;
இந்த நான்கு நான்கு நிலைகளும்
தெரிந்தவர்களால் தான் முக்தி அடைய முடியும்;
இந்த நான்கு நிலைகளும்
ஆன்மீகத்தில் உயர்ந்த நிலை
அடைந்தவர்களால் தான் உணர முடியும்;
ஆன்மீகத்தில் உயர்ந்த நிலை அடைந்தவர்களால் தான்
இந்த நான்கு நிலைகளின் மறைபொருள் ரகசியம் தெரியும்;
ஆன்மீகத்தில் உயர்ந்த நிலை அடையவில்லை எனில்
இந்த நான்கு நிலைகளைப் பற்றித் தெரியாது;
நான்கு நிலைகள் என்றால் என்ன என்று தெரியாது;
நான்கு நிலைகளின் மறைபொருள் ரகசியம் தெரியாது;
நான்கு நிலைகளில் அடங்கியுள்ள
மறைபொருள் விளக்கம் தெரியாது;
நான்கு நிலைகளின் உயர் தன்மை தெரியாது;
நான்கு நிலைகளின் பிரம்ம ரகசியம் தெரியாது;
நான்கு நிலைகளின் விளக்கங்கள் தெரியாது;
நான்கு நிலைகளை அடையும் வழிகள் தெரியாது;
நாக்கு நிலைகளை அடைந்தால் என்ன பலன் என்று தெரியாது;

நான்கு நிலைகள்
ஒன்று - ஞானம்
இரண்டு - சமாதி
மூன்று - ஜீவ சமாதி
நான்கு - முக்தி

1.ஞானம்
நம் உடலில் கடவுள் எந்த இடத்தில் இருக்கிறார்
கடவுளை அடையக்கூடிய வழி என்ன
எந்த முறையைப் பின்பற்றி
கடவுளை அடையலாம்- என்பதை
யார் ஒருவர் தெரிந்து வைத்துக் கொண்டு
அதை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறாரோ
அவர் ஞானம் அடைந்தவர் என்று சொல்லலாம்.

2.சமாதி
நம் உடலில் கடவுள் இருக்கும் இடத்தில்
அதாவது,
நம் உடலில் பரமாத்மா இருக்கும் இடத்தில்
ஜீவாத்மாவை கொண்டு இணைப்பதன் மூலம்
சமாதி கிடைக்கும்.

சமம்+ஆதி = சமாதி
ஆதி நிலைக்குச் சமமாக மனிதன் உயர்தல்
அதாவது மனிதன் கடவுள் நிலைக்குச்
சமமாக உயர்தல்.
சமாதி என்பது மனிதன்
ஜீவாத்மாவை பரமாத்மாவுடன்
இணைப்பதன் மூலம் சமாதி அடைவது
சமாதி என்பது போய் தொட்டு தொட்டு வருவது.

3.ஜீவ சமாதி
ஜீவ சமாதி என்றால் உடலில்
உயிர் வைத்துக் கொண்டு
மனதை இறைவனுடன் சேர்த்து விடுவது
ஜீவ சமாதியில் பல்வேறு நிலைகள் இருந்தாலும்
ஆன்மீகத்தில் உயர் நிலை அடைந்தவர்கள்
பூமிக்குள் சென்று சமாதி அடைகின்றனர்
சமாதி நிலையிலிருந்து நேரடியாக முக்தி அடையலாம்
அல்லது
சமாதி, ஜீவ சமாதி கடந்து முக்தி அடையலாம்.


4.முக்தி
உடலில் உள்ள உயிரில் பதிந்துள்ள
கர்ம வினைகளைக் கழித்து
பிறவிகளை அறுத்து
ஜென்மங்களைக் கழித்து
உடலைக் கழித்து
உயிரைக் கழித்து
முக்தி அடைய வேண்டும்


சிலர் சமாதி நிலையிலேயே
கர்ம வினைகள் அனைத்தையும் கழித்து
முக்தி அடைவர்;
சிலர் ஜீவ சமாதி நிலை சென்று
கர்ம வினைகளைக் கழித்து
முக்தி அடைவர்;
பெருபாலானர்கள்
ஜீவ சமாதி சென்று
கர்ம வினைகளைக் கழித்து
முக்தி அடைகின்றனர்.
ஜீவசமாதி செல்லாமலே ஒருவர்
முக்தி அடையலாம்.

ஒருவன் முக்தி அடையவேண்டுமென்றால்
இந்த நான்கு நிலைகளைக் கடந்து தான்
முக்தி அடைய முடியும் என்பதைத்
தெரிந்து கொள்ள வேண்டும்.

யாராக இருந்தாலும்
இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்து
கர்ம வினைகளைக் கழித்தால் மட்டுமே
முக்தி அடைய முடியும்.

காற்றுள்ள போதே என்றால்,
உடலில் உயிர் இருக்கும் போதே
என்று பொருள்.
தூற்றிக் கொள் என்றால்,
கர்ம வினைகளைக் கழித்து
முக்தி அடைந்து கொள்
என்று பொருள்.

தூற்றுதல் என்றால்
உயிரில் பதிந்துள்ள கர்மவினைகளைக் கழித்தல்
உயிரில் பதிந்துள்ள கர்ம வினைகளைக் கழிக்க
வேண்டும் என்றால்,
அதற்கேற்ற பயிற்சி எது என்று உணர்ந்து,
அந்த பயிற்சி முறையைத் தெரிந்து கொண்டு,
அந்த பயிற்சி முறையைப் பின்பற்றி,
அந்த பயிற்சி முறையைப் பயன்படுத்தி,
கர்ம வினைகளைக் கழிக்க வேண்டும் என்று பொருள்.

கர்ம வினைகளைக் கழிக்கக் கூடிய
பயிற்சி எது என்று உணர்ந்து,
அந்த பயிற்சி முறையைப் பயன்படுத்தி,
உயிரில் பதிந்துள்ள
கர்ம வினைகளைக் கழிக்க வேண்டும்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
என்றால்
உடம்பில் உயிர் இருக்கும் போதே
உயிரில் பதிந்துள்ள கர்ம வினைகளைக் கழித்து
முக்தி அடைய வேண்டும் என்று பொருள்;
உடம்பில் உயிர் இல்லை என்றால்.
கர்ம வினைகளைக் கழிக்கவும் முடியாது;
முக்தி அடையவும் முடியாது;
என்று பொருள்.


"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை"

கழுதை பொதி சுமக்கும்
எந்தப் பொருளை அதன் முதுகில் வைத்தாலும் சுமக்கும்;
மணல் பொதியை வைத்தால் சுமக்கும்;
அரிசி பொதியை வைத்தால் சுமக்கும்;
கூழாங்கற்களை வைத்தால் சுமக்கும்;
வைரக்கற்களை வைத்தால் சுமக்கும்;
எதை வைத்தாலும் சுமக்கும்;
இது தான் சுமப்பேன் என்று
கழுதை ஒரு போதும் அடம் பிடிக்காது.

கழுதை மேல்
எந்த பொதியை வைத்தாலும் சுமக்கும்;
கழுதைக்கு உயர்ந்த பொருள்
தாழ்ந்த பொருள்
என்ற பேதம் தெரியாது.

உயர்ந்தது; தாழ்ந்தது;
தரம் உயர்ந்தது; தரம் தாழ்ந்தது;
விலை உயர்ந்தது; விலை தாழ்ந்தது;
என்ற பேதம் தெரியாது.

கழுதையின் மேல் கூழாங்கற்கள்
நிரப்பப்பட்ட பொதியை வைத்தாலும் சுமக்கும்;
வைரக்கற்கள் நிரப்பப்பட்ட
பொதியை வைத்தாலும் சுமக்கும்;
கழுதைக்கு பேதம் தெரியாது.

கழுதை உயர்ந்தது தாழ்ந்தது என்ற
பேதம் பிரித்து பார்ப்பதில்லை.
கழுதைக்கு அனைத்தும் ஒன்று¢தான்.
ஏனென்றால் கழுதைக்கு
நல்லது எது; கெட்டது எது;
உயர்ந்தது எது; தாழ்ந்தது எது
என்று தெரியாது.

அதைப்போல மனிதர்களில்
எது உயர்ந்தது; எது தாழ்ந்தது;
எது அழியாதது; எது அழியக்கூடியது;
எது நிலையானது; எது நிலையற்றது - என்ற
பேதங்கள் பல பேருக்கு தெரிவதில்லை.

சிற்றின்பத்திற்கும்பேரின்பத்திற்கும்
வேறுபாடு தெரியாமல்,
அழியக்கூடிய சிற்றின்பத்தில் மூழ்கி,
குடும்பம் என்னும் சேற்றில் சிக்கி,
உறவுகள் என்னும் மழையில் நனைந்து,
பாசம் எனும் மாயவலையில் மாட்டிக் கொண்டு,
பிறவி பல எடுத்து,
ஜென்மங்கள் பல அடைந்து,
துயரப்பட வேண்டி இருக்கிறது.

உண்மை எது; பொய் எது; - என்று
உணர்ந்து கொள்ள முடிந்தவர்களால் மட்டுமே
சிற்றின்பத்திற்கும் , பேரின்பத்திற்கும்
வேறுபாடு கண்டு பிடிக்க முடியும்.

அப்பொழுது தான்
அழியக் கூடியது எது அழியாதது எது
என்று தெரியும்.
ஆன்மீகத்தில் உயர்ந்த நிலை அடைந்தால் மட்டுமே
நிரந்தரமானது எது, நிரந்தரமற்றது எது - என்று
கண்டு பிடிக்க முடியும்.

அத்தகையவர்களால் மட்டுமே
கடவுள் நம் உடலில் எங்கே இருக்கிறார்,
கடவுளை அடையக் கூடிய வழி என்ன,
கடவுளை எந்த பொருளைக் கொண்டு
அடைய முடியும் - என்ற
விஷயங்களைத் தெரிந்துகொண்டு,
அந்த முறைகளைக் கையாண்டு,
கடவுளுடன் இணைப்பு ஏற்படுத்தும் போது
நம் உடலில் இருந்து
கற்பூர வாசனை எழும்பும்.

இதிலிருந்து நாம் ஒன்றை தெரிந்து கொள்ளலாம்
ஆன்மீகத்தில் ஒரு நிலையை அடைந்து விட்டவர்களுக்கே,
ஆன்மீகத்தில் உயர் நிலையை அடைந்து விட்டவர்களுக்கே,
ஆன்மீகத்தில் உண்மையை உணர்ந்தவர்களுக்கே,
ஆன்மீகத்தில் மறைபொருள் ரகசியம் அறிந்தவர்களுக்கே,
கடவுளுடன் பிணைப்பு ஏற்படுத்தியவர்களுக்கே,
உடலில் இருந்து கற்பூர வாசனை வரும்.
கடவுளுடன் இணைப்பை ஏற்படுத்தாதவர்களுக்கு
கற்பூர வாசனை வராது.

அழியக்கூடியது எது; அழியாதது எது என்று உணர்ந்து.
அழியாத இறைவனுடன்
பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கே
உடலில் இருந்து கற்பூர வாசனை வரும்.

அழியக்கூடியதுஎது அழியாதது எது என்று
உணராமல் இருப்பவர்களுக்கு.
அதாவது கழுதையைப் போல
எது உயர்ந்தது, எது தாழ்ந்தது,
என்ற பேதம் பிரித்து
பார்க்கத் தெரியாதவர்களுக்கு
கற்பூர வாசனை தெரியாது.

அவர்களைச் சுற்றி எழாது
என்று பொருள்.

சில வார்த்தைகளின் அர்த்தம்
புரிந்து கொள்ள முடியாத காரணத்தினால்
நம்மால் பல விஷங்களை புரிந்து
கொள்ள முடிவதில்லை.

                                                                                                                                 

 ---------இதன் தொடர்ச்சி                                                                         2. இயேசு கிறிஸ்து-அகத்தியர்-                                                                                                                         கேளப்பா -பதிவு-(2)-79-2
----- ------பார்க்கவும்,







                                                                                                                                                                

1 comment: