February 11, 2017

2.இயேசுகிறிஸ்து- அகத்தியர்-கேளப்பா-பதிவு-(2)-79-2

     2.இயேசு கிறிஸ்து-அகத்தியர்-கேளப்பா-பதிவு-(2)-79-2)

             """"பதிவு எழுபத்துஒன்பதை விரித்துச் சொல்ல
                  ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""


அகத்தியர்:

ஒப்பீடு என்பது சில சிமயங்களில் தேவைப்படும்
சில சமயங்களில் தேவைப்படாது
சில சமயங்களில் பயன்படுத்தலாம்
சில சமயங்களில் பயன்படுத்தக் கூடாது
எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும்
என்பது தான் முக்கியம்.

அகத்தியர் பதி, பசு, பாசம் என்பதை
பற்றி தன் பாடலில் கூறியுள்ளார்.
அதை வேறொன்றுடன் ஒப்பிட்டு
பார்த்தால் தான்
நாம்  பதி, பசு, பாசத்தின் அர்த்தத்தை
புரிந்து கொள்ள முடியும்.

பதி பசு பாசத்தை இந்த மூன்று பாடல்களில்
தெளிவாக கூறியுள்ள அகத்தியர்
பதி, பசு, பாசம் என்றால் என்ன என்பதை
தன்னுடைய மூன்றாவது பாடலில் தான் கூறியுள்ளார்.

பதி என்றால் என்ன?
பசு என்றால் என்ன?
பாசம் என்றால் என்ன?
என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
இந்த விவரங்களை நாம் தெரிந்து கொள்ளவில்லையெனில்
நம்மால் இந்த பாடல்களில் உள்ள அர்த்தங்களை
நம்மால் தெரிந்து கொள்ள முடியாது.

மூன்று பாடல்களில்
முதலில் இருந்து படித்தால்
இந்த பாடல்களில் உள்ள அர்த்தங்களை
நாம் தெரிந்து கொள்ள முடியாது.
முதலில் நாம் இந்த மூன்று பாடல்களில்
மூன்றாவது பாடலில் உள்ள வார்த்தைகளில் உள்ள
அர்த்தங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் இருந்து
நாம் பாடல்களை படித்தால்
நாம் வார்த்தைகளின் அர்த்தங்களை
தெரிந்து கொள்ள முடியாது.

எனவே முதலில் நாம்
பதி என்றால் என்ன?
பசு என்றால் என்ன?
பாசம் என்றால் என்ன?
என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.

இதனை இரண்டு அல்லது
மூன்று நிலைகளுடன் ஒப்பிட்டு
அர்த்தங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

பதி என்றால் இறைவனைக் குறிக்கும்;
பசு என்றால் உயிரைக் குறிக்கும்;
பாசம் என்றால் உடலைக் குறிக்கும்;

நம் உடல் என்று எடுத்துக் கொண்டால்,
தூல உடல் பாசத்தைக் குறிக்கும்,
சூக்கும உடல் பசுவைக் குறிக்கும்,
காரண உடல் பதியைக் குறிக்கும்,
இதை மனதில் கொண்டு
மேற்கொண்டு படித்தால் தான்
நமக்கு இந்த மூன்று பாடல்களில் உள்ள
அர்த்தங்கள் புரியும்.

இறைவனுக்கு உயிர் தெரியும்,
இறைவனுக்கு உடல் தெரியும்;
உயிருக்கு இறைவனைத் தெரியும்,
உயிருக்கு உடலைத் தெரியும்;
உடலுக்கு உயிரைத் தெரியாது.

உடல் உயிரை அறிய வேண்டுமானால் குருவருள் வேண்டும்
அப்படி அறிந்தால் உடலில் உயிர் இருப்பதை
உணர்ந்து கொள்ளலாம்.

உடலில் உயிர் இணைந்து இருக்கும் வரை
பிறப்பு. இறப்பு என்பது
இருந்து கொண்டே இருக்கும்.
உயிர் கர்மவினை கழியும் வரைக்கும்
உயிர் ஒரு உடலில் இருக்கும்.
உயிர் பிறப்பெடுக்க உடலை நாடும்.
உடலில் உயிர் வந்து இணைந்து
உடல் பிறக்கும்.

உயிரானது தனது கர்ம வினைகளைக்
கழித்தால் மட்டுமே,
உயிர் பிறப்பெடுக்க உடலைத் தேடாது;
அது வரைக்கும்.
உயிர் பிறப்பெடுக்க உடலை நாடும்;
கர்ம வினை கழிந்து விட்டால்,
உயிர் உடலை நாடாது;
உயிர் மீண்டும் பிறப்பெடுக்காது;
உயிர் கர்ம வினைகளைக் கழித்து
தூய்மை பெற்று விட்டால்,
மீண்டும் பிறப்பெடுக்காது.

கர்ம வினைகள் கழிய வேண்டுமானால்
உயிர் இறைவனுடன் இணைய வேண்டும்.
உயிர் இறைவனுடன் இணைவதற்கான
தகுதியைப் பெற்று விட்டால்,
இறைவனுடன் இணைவதற்கான
நிலையைப் பெற்று விட்டால்,
இறைவனுடன் இணைவதற்கான
உயர்வைப் பெற்று விட்டால்,
இறைவனுடன் இணைவதற்கான
தகுதியைப் பெற்று விட்டால்,
உயிர் கர்ம வினைகளைக் கழித்து விடும்.

கர்ம வினைகளை
நாம் பயிற்சியின் மூலம் கழிக்கும் போது
அதற்குரிய விளைவுகளை
அனுபவித்து ஆக வேண்டும்;
ஆனால் இறைவனிடம் இணைந்து
கர்ம வினைகளைக் கழிக்கும் போது
அதற்குரிய விளைவுகளை
அனுபவிக்க வேண்டியதில்லை;
ஆனால் அவ்வாறு இறைவனுடன் இணைந்து,
கர்ம வினைகளை
கழிப்பது என்பது தான்,
இயலாத காரியம்;
கடினமான காரியம்;
முடியாத காரியம்;
நடைமுறைக்கு சாத்தியமில்லாத காரியம்.

இந்த செயலைச் செய்ய முடியாத
காரணத்தினால் தான்,
நாம் பயிற்சியின் மூலம்
கர்ம வினைகளைக் கழிக்கிறோம்.
கர்ம வினைகளைக் கழித்த
ஆன்மா தூய்மையடைகிறது.
அதுவே இறைவனுடன் கலப்பதற்கான
தகுதியைப் பெறுகிறது என்கிறார்.

இதனை வேறு ஒன்றுடன் ஒப்பிட்டும்
விளக்கலாம்.
ஒப்பிடுவது சரியான ஒன்றுடன் இருந்தால் மட்டுமே
நம்முடைய ஒப்பீடு சரி;
இல்லையென்றால் ஒப்பீடு தவறு;

தவறான ஒன்றுடன் ஒப்பிட்டால்,
எந்த ஒன்றை நாம் அறிய விரும்புகிறோமோ
அந்த ஒன்றை
நாம் அறிய முடியாமலேயே போய் விடுகிறது.
ஒப்பீடு சரியான விதத்தில் இருந்தால் மட்டுமே,
நாம் எந்த ஒன்றை
தெரிந்து கொள்ள விரும்புகிறோமோ,
அந்த ஒன்றை தெரிந்து கொள்ள முடியும்.
ஒப்பீடு தவறாக இருந்தால்
நாம் எந்த ஒன்றையும்
சரியாக உணர்ந்து கொள்ள முடியாது.

ஒன்றை விளக்குவதற்காக 
நாம் ஒப்பீட்டைப் பயன்படுத்தலாம்;
ஒன்றை விட இது உயர்ந்தது;
ஒன்றை விட இது தாழ்ந்தது; - என்று
சொல்வதற்கு மட்டுமே
நாம் ஒப்பீட்டைப் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.

கோயிலை எடுத்துக் கொள்வோம்
கோபுர வாசல் கடந்து உட்புறம் செல்கிறோம்
பலிபீடம் இருக்கிறது;
நந்தி இருக்கிறது;
இறைவன் இருக்கிறான்;

இறைவன் - பதி
நந்தி - பசு அதாவது உயிர்
பலிபீடம் - உடல்
என்ற நிலையில்
கோயிலில் சிற்பங்கள் வடிவமைத்து
வைக்கப்பட்டு இருக்கிறது.

ஒன்று        - கர்ப்பகிரகத்தில் இறைவன் சிலை இருக்கும்;
இரண்டு   - நந்தியானது கர்ப்பகிரகத்தில் இருக்கக்கூடிய
                          இறைவன் சிலையைப் பார்த்த மாதிரி இருக்கும்;
மூன்று     -  நந்தியின் பின்புறம் பலிபீடம் இருக்கும்;

நாம் நம் பந்த பாசங்களை
பலிபீடத்தில் அறுத்து போட்டு விட்டு முன்னே சென்றால்
உயிர் இறைவனுடன் இணையும் என்பதை குறிப்பதே
இந்த சிற்பங்களின் வரிசையான வடிவமைப்பு.

நாம் எப்போதும் இந்த மூன்றை மட்டுமே பார்க்கிறோம்;
அதை மட்டுமே ஒப்பீட்டு பேசுகிறோம்;
மூன்றை மட்டுமே ஒப்பீட்டு
பெரும்பாலும் எழுதப்பட்டிருக்கிறது;
இந்த மூன்று மட்டுமே
ஒன்றுடன்  ஒன்று தொடர்பு உடையது
என்று நாமே ஒரு முடிவு எடுத்துக் கொள்கிறோம்;
நான்காவது ஒன்று உள்ளது என்பதை
நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம்;
நான்காவதாக ஒன்று உள்ளது என்பதை
நாம் அறியாமல் விட்டு விடுகிறோம்;

மொத்தத்தில் நான்கு சிற்பங்கள்
ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையது.
நான்கு சிற்பங்களின் தொடர்பு
தெரிந்தால் மட்டுமே,
கோயிலில் உள்ள சிற்பங்களின்
அர்த்தம் தெரியும்;
உண்மைகள் புரியும்;
நம் முன்னோர்கள் எவ்வளவு
பெரிய அறிவாளிகள் என்பது தெரியும்;
எவ்வளவு பெரிய மறைபொருள் ரகசியத்தை
இவ்வளவு எளிமையாக சிற்பங்களில்
செதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது தெரியும்;
மக்கள் அனைவரும் உண்மையை
உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக
உண்மையை எவ்வளவு எளிமையாக
சிற்பங்களில் வடிவமைத்திருக்கிறார்கள் என்பது தெரியும்;
அறியாதவர்கள் அறிய வேண்டும் என்பதற்காக
தாங்கள் அறிந்த உண்மையை எளிமைப் படுத்தி
சிற்பங்களில் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியும்;
உண்மையை அறிய முடியாதவர்களுக்கும்,
உண்மையை அறிய முயற்சி செய்பவர்களுக்கும்,
உண்மையை அறிய துடிப்பவர்களுக்கும்,
உண்மையை நோக்கி பயணிப்பவர்களுக்கும்,
உண்மை தெரிய வேண்டும் என்பதற்காக,
தாங்கள் கடினப்பட்டு அறிந்த உண்மையை
எந்தவித பிரதிபலனும் பார்க்காமல்,
எளிமையாக நான்கு சிலைகளில் வடிவமைத்திருக்கிறார்கள்
என்பது தெரியும்;
உண்மை இப்படித்தான் இருக்கும் என்பதற்கு
இந்த நான்கு சிற்பங்கள் தான் சாட்சி;
உண்மை நம் உடலில் இப்படித்தான் இருக்கிறது
என்பதற்கு இந்த நான்கு சிற்பங்கள் தான் சாட்சி;
உண்மையை இந்த நிலையில் தான்
அடைய முடியும் என்பதற்கு
இந்த நான்கு சிற்பங்கள் தான் சாட்சி;

அந்த நான்கு நிலைகள் என்பது
ஒன்று         -  கர்ப்ப கிரகத்தில் உள்ள கடவுள் சிலை
இரண்டு    -  கர்ப்ப கிரகத்தில் இருக்கும்
                           கடவுள் சிலையை நோக்கி இருக்கும் நந்தி சிலை
மூன்று      -  நந்தி சிலை பின்னால் இருக்கும் பலிபீடம்
நான்கு      -  கொடிமரம்
இந்த நான்கும் தான் ஒன்று ஒன்றுடன் தொடர்புடையது.

இந்த நான்குக்கும் உள்ள ஒற்றுமையை
உணர்ந்து கொண்டால் உண்மை விளங்கும்.
இதில் இன்னொன்றும் சொல்லப்படுகிறது
பலிபீடத்தின் பின்புறம்
இருக்கும் கொடி மரமானது
நம் உடலில் உள்ள
சிறுநீர் கழிக்கும் உறுப்புடன் சம்பந்தப்படுத்தி
பெரும்பாலான நூல்களில்
பெரும்பாலானவர்களால் சொல்லப்பட்டிருக்கும்.
அது தவறு,
அது தவறான ஒப்பீடு,
உண்மையை  உணராதவர்கள்
அதனை தவறாக ஒப்பீட்டு விட்டனர்.
அந்த தவறான ஒப்பீட்டை
உண்மை என்று நம்பினால்,
தவறான ஆன்மீக பாதையில் சென்று,
தவறான ஆன்மீக நிலைக்கு,
தவறான ஒரு சிந்தனைக்கு,
தவறான ஒரு முயற்சிக்கு,
வழி வகுத்து விடும் 
எனவேகொடி மரம்
நம் உடலில்
எந்த உறுப்புடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதை
நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கொடி மரம்
நம் சிரசில் உள்ளது
கொடி மரம் நம் சிரசில் உள்ளது என்றால்
பதி, பசு, பாசமும் சிரசில் தானே  இருக்கும்.
கொடி மரம் எது என்று உணர்ந்து,
கொடி மரத்தை உபயோகப்படுத்தி,
கொடி மரத்தை பயன்படுத்தி,
கொடி மரத்தை பின்பற்றி,
கொடி மரத்தின் வழி சென்று,
கொடி மரத்தை கடந்து சென்றோமேயாகில்,
உயிரானது பாசத்தை அறுத்து,
கர்ம வினைகளைக் கழித்து,
இறைவனுடன் சேரும்.

அதாவது கொடிமரத்தில்
அதாவது ஜீவாத்மா
கொடிமரத்தின் வழியாக சென்று
பரமாத்மாவுடன் கலக்கிறது என்பதைக் குறிப்பதே
கொடிமரம், பலிபீடம், நந்தி, இறைவன்
சிற்பங்கள் ஆகியவை ஆகும்.

நம் உடலில் உள்ள
இந்த அமைப்புகளை நம்மால்
எளிதில் உணர்ந்து கொள்ள முடியாது.
உண்மையை உணர்ந்த உயர்ந்தவர்களால் மட்டுமே
இதனை சொல்லமுடியும்.
இதனை சொன்னால்
நம் மக்களுக்கு புரியாது  - என்ற
காரணத்தினால் தான்
கோயிலில் இதனை உருவகப்படுத்தி வைத்தனர்.
இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக
கோயிலில்  கற்களால் சிற்பங்களாக செதுக்கி வைத்தனர்.
நான்கும் ஒன்றுடன் ஒன்று
மிகவும் தொடர்வுடையது.
இந்த நான்கை நாம் உணர்ந்து கொண்டாலே
இறைவனுடன் இணைவதற்கு
வழி ஏற்படுத்திக் கொடுத்தது போல் இருக்கும்.

கர்ப்பகிரகத்தில் இருக்கும் இறைவன் சிலை,
கர்ப்பகிரகத்தில் இருக்கும் இறைவன் சிலையை
நோக்கி இருக்கும் நந்தி சிலை,
நந்தி சிலைக்கு பின்னால் இருக்கும் பலிபீடம்,
பலிபீடத்திற்கு பின்னால் இருக்கும் கொடிமரம்,
இந்த நான்குக்கும் உள்ள தொடர்பை நாம்
உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த நான்குக்கும் உள்ள தொடர்பை
நாம் உணர்ந்து கொண்டால்,
நமக்கு ஞானம் கிடைக்கும்;
சமாதி கிடைக்கும்;
முக்தி கிடைக்கும்;


இந்த நான்கும்
நம் உடலில் உள்ளதை உணர்ந்து
நம் முன்னோர்கள்
உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள்
உண்மையை உணர்ந்த சித்தர்கள்
உண்மையை உணர்ந்த உயர்ந்தவர்கள்
உண்மையை உணர்ந்து உயர் நிலை அடைந்தவர்கள்
இந்த நான்கும்,
நம் உடலில் எந்த இடங்களில் இருக்கிறது,
எந்த நிலையில் இருக்கிறது,
இந்த நான்கையும் எப்படி நாம் புரிந்து கொள்வது,
இநத் நான்கையும் எப்படி நாம் அறிந்து கொள்வது,
இந்த நான்கையும் எப்படி நாம் தெரிந்து கொள்வது,
என்பதை அறிந்து முயற்சி செய்து,
புரிந்தனர் தெரிந்தனர்.

இந்த நான்கையும் உணர்ந்து
உயர் நிலை அடைந்த உண்மையை உணர்ந்தவர்கள்,
இதனை வார்த்தைகளில் சொன்னால்
சாதாரண மக்களுக்கு புரியாது
அவர்களுக்கு புரிய வைக்க முடியாது என்ற காரணத்தினால்,
கோயில்களில் இந்த நான்கையும்
நம் உடலில் எந்த நிலையில் இருக்கிறதோ
அதே நிலையில் வடிவமைத்து
வைத்திருக்கின்றனர்.

நம் சிரசில் நம் உள்ளுக்குள்
மறைமுகமாக ரகசியமாக
மறைத்து வைக்கப்பட்டிருப்பதை வெளிப்படையாக
சிற்பங்களாக செதுக்கி வைத்திருக்கின்றனர்.
நம் உள்ளுக்குள் இருப்பதை வெளியில்
வெளிப்படையாக வைத்திருக்கின்றனர்
வெளியில் வைக்கப்பட்டிருப்பதை
வெளியில் உள்ளவாறு வணங்கி செல்பவர்களால்
உள்ளுக்குள் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியாது.
வெளியில் உள்ளது
நம் உள்ளுக்குள் உள்ளது என்பதை உணர  வேண்டும்.
அவ்வாறு உணர்பவர்களால் மட்டுமே வெளியில் உள்ளது
உள்ளுக்குள் உள்ள ஒன்றை விளக்க இருக்கிறது;
உள்ளுக்குள் உள்ள ஒன்றை அடையும் வழி சொல்கிறது;
உள்ளுக்குள் உள்ள ஒன்றை
அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது;
என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

வெளியில் உள்ளது நம் உள்ளுக்குள்
எப்படி இருக்கிறது;
எந்த நிலையில் இருக்கிறது;
எவ்வாறு இருக்கிறது;
எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்றும்
வெளியில் உள்ளது
எதை உணர்த்த இருக்கிறது;
எதை வலியுறுத்த இருக்கிறது;
எதை உணர்த்த இருக்கிறது;
எதை சொல்ல வருகிறது;
என்பதை உணர்ந்து
அதை பின்பற்றி
உள்ளுக்குள் சென்று உண்மையை அறிய வேண்டும்.

அப்படி அடைந்தால் மட்டுமே,
நாம் ஆன்மீகத்தில் உயர்நிலை அடைய முடியும்.
இல்லையென்றால்,
வெளியில் உள்ளவைகளை வணங்கியே
நம் காலம் ஓடிவிடும்.
ஆன்மீகத்தின் மிக உயர்ந்த நிலைகளை
நாம் அடைய முடியாது.

ஆன்மீகத்தில் நாம் உயர்ந்த நிலைகளை
அடைய வேண்டுமானால்,
நம்மைச் சுற்றி உள்ளவைகளையும்,
நம்மைச் சுற்றி இருப்பவைகளையும்,
அறிய முயற்சி செய்து
ஆராய்ந்து பார்த்து,
நம்மைச் சுற்றி இருப்பவைகள்
எவற்றை உணர்த்துகின்றன என்பதையும்,
நம்மைச் சுற்றி இருப்பவைகள்
எவற்றை விளக்க இருக்கின்றன என்பதையும்,
நம்மைச் சுற்றி இருப்பவைகள்
எவற்றை உணர்த்த வருகின்றன என்பதையும்
உணர்ந்து,
மனம் தெளிந்து,
அதனை உள்ளுக்குள் பயன்படுத்தினால்
நாம் ஆன்மீகத்தில் உயர் நிலை அடையலாம்.
இல்லையென்றால்,
நம்மால் ஆன்மீகத்தில்
உயர் நிலை அடைய முடியாது.

உள்ளே உள்ள நான்கு நிலைகளை
மக்கள் உணர்ந்து புரிந்து பயன்படுத்தி
ஆன்மீகத்தில் உயர் நிலை அடைய வேண்டும்
என்ற காரணத்திற்காக,
கர்ப்பகிரகம், நந்தி, பலிபீடம், கொடிமரம்
ஆகிய நான்கு நிலைகளை வெளியில்
உண்மையை உணர்ந்து நம் முன்னோர்கள்
ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.

உண்மையை உணராத நாம்
உண்மையை உணர வேண்டுமானால்
வெளியில் உள்ள
இந்த நான்கு நிலைகளை
அதாவது
கர்ப்பகிரகம், நந்தி, பலிபீடம், கொடிமரம்
ஆகியவற்றை
உள்ளே எந்த உறுப்புகளாக உள்ளன என்று உணர்ந்து
அவைகளை பயன்படுத்தி
உண்மையை உணர வேண்டும்.
அப்போது தான் நாம் ஆன்மீகத்தில்
உயர்நிலை அடைய முடியும்,
என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒப்பீடு என்பது தவறாக போகுமேயானால்
நாம் எந்த ஒன்றையும்
சரியாக அறிந்து உண்மையை
உணர்ந்து கொள்ள முடியாது.
உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டுமானால்,
உண்மையை உணர்ந்தவர்களால்,
ஒப்பீடு செய்யப்பட்டு வைக்கப்பட்டவைகளை அறிந்து,
அந்த ஒப்பீடுகளை உணர்ந்து,
அநத ஒப்பீடுகளை கண்டறிந்து,
அதனை பின்பற்றி,
உண்மையை உணர்ந்தால்,
நாம் எந்த ஒன்றினுடைய
உண்மையைத் தன்மையையும்
நாம் உணர்ந்து கொள்ளலாம்.

உண்மையை உணராதவர்களால்
சொல்லப்படும் ஒப்பீடுகள்
உண்மையா பொய்யா - என்று
உணர்ந்து கொள்ள முடியவில்லையெனில்
தவறான ஒப்பீடுகளை
உண்மையான ஒப்பீடு - என்று
நினைத்து பின்பற்றி
நாம் உண்மையை உணராமலேயே போய்விடுவோம்
நாம் உணர்ந்தது தான் உண்மை - என்று
நாம் மகிழ்ச்சி கொள்வோம் - ஆனால்
நாம் கடைசி வரை உண்மையை உணராமல்
பொய்யின்வழி சென்று
உண்மையை உணராமலேயே போய் விடுவோம்.

ஆகவே ஒப்பீடு என்பது
உண்மையான ஒப்பீடா என்பதை உணர வேண்டும்.
இந்த ஒப்பீடு உண்மையை
உணர்ந்தவர்களால் சொல்லப்பட்டதா,
உண்மையை உணர்ந்தவர்களால்
உண்மையாக சொல்லப்பட்டதா,
உண்மையை உணர்ந்தவர்கள்
மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் - என்ற
நினைப்பில் சொல்லப்பட்டதா,
என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்
ஒப்பீடு உண்மையை உணர்ந்தவர்களால்
உண்மையை
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்
உண்மையை அறிந்து
உண்மையைப் பின்பற்றி
உண்மையை அறிந்து
உயர் நிலை அடைய வேண்டும் - என்ற
உயரிய நோக்கத்தில் சொல்லப்பட்டாதா,
என்பதை உணர்ந்து பின்பற்றி
உயர்வடைய வேண்டும்.
இல்லையென்றால் தவறான வழி சென்று
ஆன்மீகத்தில் தவறான பாதைக்கு சென்று
உயர்நிலை அடைய முடியாத நிலை
அடைந்து விடுவோம்.

எனவே, உண்மையை உணர்ந்து
உண்மையை பின்பற்றி உயர்நிலை
அடைடவோம் என்கிறார்
அகத்தியர்.


இயேசு கிறிஸ்து - அகத்தியர்:

மனித வாழ்க்கைக்கு
தேவையுள்ளது எது என்று
உணர்ந்து உண்மையை
உண்மையாக உரைக்க வந்தால்
இச்சமுதாயம்
உண்மையை உரைக்க வந்தவர்களை
அழிக்க வகை பார்க்கும்
என்கிறது பைபிள்.

எந்த ஒன்றையும்
உண்மையுள்ள ஒன்றுடன்
ஒப்பிட்டால் மட்டுமே
உண்மையுள்ள ஒன்றை தேர்ந்தெடுத்து
உண்மைவழி செல்ல சென்றால் மட்டுமே
உண்மையாக வாழ முடியும்
இல்லையென்றால் பொய்யின்வழி சென்று
அழிந்து போகத்தான் முடியும்
என்கிறார் அகத்தியர்.


""""போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்

          போற்றினேன் பதிவுஎழுபத்துஒன்பதுந் தான்முற்றே""""





1 comment:

  1. Super explanation about god an temple than hw to jeevaathma joint to parathuma good explanation Ji than we are more expecting about spiritual thank you

    ReplyDelete