August 05, 2020

அறிய வேண்டியவை-பதிவு-138

ஜபம்-பதிவு-630

(அறிய வேண்டியவை-138)

 

"நீங்கள்

கெட்டவர்கள்

என்ற பெயரை

எடுத்து விட்ட

காரணத்தினால்

பீஷ்மரும் விதுரனும்

உனக்கு எதிராகவும்

நீ ஆட்சியில்

அமரக் கூடாது

என்பதற்காகவும்

இந்த உலத்தில்

உள்ள சிலரும்

உனக்கு

எதிராக

செயல்பட்டுக்

கொண்டிருக்கிறார்கள்"

 

"பீஷ்மரையும்

விதுரனையும்

எதிர்த்துக் கொண்டு

என்னால் ஆட்சியில்

இருக்க முடியாது

நான் ஆட்சியில்

இருப்பதே இவர்கள்

இருவருடைய

தயவினால் தான்

இவர்கள் இருவரும்

நினைத்தால் என்னால்

ஆட்சிக் கட்டிலில்

இருக்கவே முடியாது"

 

"பீஷ்மரையும்

விதுரனையும்

வைத்துத் தான்

அஸ்தினாபுரத்தின்

ஆட்சியே

இயங்கிக்

கொண்டிருக்கிறது

நான் அரசன் என்ற

முறையில் தான்

இருக்கிறேன்

அனைவரும்

என்னைப்

பார்த்து பயந்து

அடிமையாக

இருக்கிறார்கள்

ஆனால்

நான் பார்த்து

பயந்து அடிமையாக

இருப்பது அவர்கள்

இருவருக்கும்

மட்டும் தான்"

 

"மக்களோடு மக்களாக

இருக்கின்ற

காரணத்தினாலும்

மக்கள் மத்தியிலும்

மன்னர்களே மதித்து

போற்றும் அளவிற்கு

செல்வாக்கு

பெற்றிருக்கின்ற

காரணத்தினாலும்

மன்னர்கள்

மத்தியிலும் அரசியல்

வட்டாரத்திலும்

அவர்கள்

இருவருக்கும்

அளவற்ற செல்வாக்கு

உண்டு என்ற

காரணத்தினாலும்

யாரையும் பார்த்து

பயப்படாத நான்

அவர்கள் இருவரையும்

பார்த்து பயப்படுகிறேன்"

 

"அவர்கள் சொல்வதை

கேட்டு

செயல்படுத்துவதற்கு

இது தான் காரணம்"

 

"நீயும் அவர்கள்

இருவரையும் பகைத்துக்

கொள்ளாமல் இருக்கக்

கற்றுக் கொள்

அவர்களிடம் பணிந்து

நடக்கக் கற்றுக் கொள்"

 

"அவர்களுடைய

பேச்சைக்

கேட்டு நடக்கக்

கற்றுக் கொள்"

 

"அவர்களிடம்

மரியாதையாக

இருக்கக்

கற்றுக் கொள்"

 

"அவர்களிடம்

கோபப்படாமல்

இருக்கக்

கற்றுக் கொள்"

 

"அவர்கள்

இருவருடைய

தயவும் எனக்கு

மட்டுமல்ல உனக்கும்

தான் தேவைப்படும்"

 

"ஆகவே அவர்கள்

இருவரையும்

பகைத்துக்

கொள்ளாதே"

 

"இப்போது

செய்வதற்கு

ஒன்றும் இல்லை "

 

"பாண்டவர்களை

சந்தித்துப்பேசி

அவர்களை

அழைத்து வர

வேண்டும் என்று

பீஷ்மரும் விதுரனும்

முடிவு செய்து

அவர்களை

அழைத்து

வருவதற்கான

ஏற்பாடுகளைச்

செய்து

இருக்கிறார்கள்

அதனை என்னால்

தடுக்க

முடியவில்லை

அதனால்

அவர்களுடைய

செயலுக்கு நானும்

ஒப்புதல்

அளித்து

விட்டேன்"

 

"அவர்களை வரவேற்க

தயாராகி விட்டேன்

 

"நீயும்

பாண்டவர்களை

வரவேற்க

தயாராக இரு"

 

"அப்போது தான்

நாம் என்ன

நினைக்கிறோமோ

அதை நடத்துவதற்கு

நம்முடைய முதல்

அடியை எடுத்து

வைத்தாற்போல்

இருக்கும் "

 

"துரியோதனா நான்

சொன்னவைகளை

நன்றாக

யோசித்துப் பார்

பாண்டவர்களை

வரவேற்பதற்கு

தயாராக இரு"

 

துரியோதனன் :

"பாண்டவர்களை

அஸ்தினாபுரத்திற்கு

அழைத்து வரும்

திட்டத்தை தடுத்து

நிறுத்த முடியாதா?"

 

திருதராஷ்டிரன் :

"தடுத்து நிறுத்த

முடியாது

இந்த திட்டத்தை

செயல்படுத்தித்

தான் ஆக வேண்டும்"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

----------- 05-08-2020

/////////////////////////////////


No comments:

Post a Comment