August 05, 2020

அறிய வேண்டியவை-பதிவு-136

ஜபம்-பதிவு-628

(அறிய வேண்டியவை-136)

 

"பாண்டவர்களைக்

கொல்வதற்காக

திட்டத்தை தீட்டி

ரகசியமாக

செயல்படுத்தியது

நீங்கள் தான்

என்று இந்த

நாட்டில் உள்ள

மக்கள் அனைவரும்

அறிந்து கொள்ளாமல்

இருக்க வேண்டும்

என்ற

காரணத்திற்காகவும் ;

 

"நீ செய்த தவறினால்

குற்றவாளியாக

அனைவரும்

மாட்டிக்

கொள்ளக் கூடாது

என்ற

காரணத்திற்காகவும்;

 

"திருதராஷ்டிரன்

துரியோதனன்

சகுனி ஆகிய

மூவரும் தான்

பாண்டவர்களைக்

கொல்ல

சதித்திட்டத்தை

தீட்டி

செயல்படுத்தியது

என்று இந்த

நாட்டில் உள்ள

மக்கள் அனைவரும்

சொல்லாமல்

இருக்க வேண்டும்

என்ற

காரணத்திற்காகவும்;

 

"நாளை இந்த

உலகம் நம்மை
குற்றவாளி

என்று குற்றம்

சொல்லக்கூடாது

என்ற

காரணத்திற்காகவும் ;

தான்

அஸ்தினாபுரத்திற்கு

பாண்டவர்களை

அழைத்து வருவதற்கு

ரகசியமாக

விதுரனை

அனுப்பி வைத்தேன் "

 

துரியோதனன்

"விதுரரை அனுப்பி

வைப்பதற்கு முன்

என்னுடைய

மனதில் உள்ளதையும்

கேட்டு தெரிந்து

கொண்டு இருக்கலாம்

அல்லவா"

 

திருதராஷ்டிரன் :

"உன்னுடைய மனதில்

உள்ளதை

நான் மட்டுமல்ல

பீஷ்மரும் விதுரரும்

அறிந்து

வைத்திருக்கின்ற

காரணத்தினால் தான்

பாண்டவர்களை

அஸ்தினாபுரத்திற்கு

அழைத்து

வருவதற்கு

விதுரனை அனுப்பி

வைக்கும் திட்டம்

ரகசியமாக

செயல்படுத்தப்பட்டது"

 

துரியோதனன் :

"நீங்கள் ஏன் அந்த

திட்டத்தை

தடுக்கவில்லை"

 

திருதராஷ்டிரன் :

"தடுக்க முடியாத

நிலையில்

நான் இருந்தேன்"

 

துரியோதனன் :

"உங்களை

தடுத்தது எது?"

 

திருதராஷ்டிரன் :

"பீஷ்மரின் அதிகாரம்

நிறைந்த வார்த்தைகள்

விதுரனின் சாதுர்யம்

நிறைந்த

ஆலோசனைகள்"

 

துரியோதனன் :

"அவைகளை உங்களால்

புறக்கணிக்க முடியாதா?"

 

திருதராஷ்டிரன் :

"புறக்கணிக்க முடியாது"

 

துரியோதனன் :

"ஏன் முடியாது?"

 

திருதராஷ்டிரன் :

"இருவரும் தான்

அஸ்தினாபுரத்தின்

ஆணிவேர்கள்

அவர்களை

புறக்கணிக்கவும்

முடியாது

விலக்கி

வைக்கவும் முடியாது"

 

துரியோதனன் :

"அதற்காக அவர்கள்

சொல்வதை எல்லாம்

கேட்டு விட்டு அதை

செயல்படுத்த

வேண்டுமா?"

 

திருதராஷ்டிரன் :

"எல்லா நேரங்களிலும்

செயல்படுத்த

வேண்டிய அவசியம்

கிடையாது

ஒரு சில நேரங்களில்

அவர்கள் இருவரும்

சொல்வதைத் தான்

கேட்டு நடக்க

வேண்டும்"

 

"இப்போது அந்த

அவசியம்

ஏற்பட்டிருக்கிறது

அதனால் அவர்கள்

இருவரும் சொன்ன

சொல்லைக் கேட்டு

பாண்டவர்களை

அழைத்து வருவதற்கு

விதுரனை அனுப்பி

வைத்திருக்கிறேன்"

 

துரியோதனன் :

"தாங்கள் செய்த

செயல் தங்களுக்கே

சரியெனப் படுகிறதா?"

 

திருதராஷ்டிரன் :

"சரியெனப் பட்டதால்

தான் செய்தேன்

துரியோதனா"

 

"ஒன்றைத் தெரிந்து

கொள் மகனே

இந்த உலகத்தில்

நல்லவன்

என்று பெயர்

எடுப்பது கஷ்டம்

நல்லவன் என்று

பெயரை எடுத்து

விட்டால்

நல்லவன்

எந்த கெட்ட

விஷயத்தை

செய்தாலும்

அதை இந்த உலகம்

பெரிய விஷயமாக

எடுத்துக் கொள்ளாது

நல்லவன் என்ற

பெயரில் அவர்கள்

செய்த கெட்ட

செயல்கள்

அனைத்தும்

மறைந்து விடும்"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

----------- 05-08-2020

/////////////////////////////////


No comments:

Post a Comment