August 05, 2020

அறிய வேண்டியவை-பதிவு-135

                 ஜபம்-பதிவு-627

         (அறிய வேண்டியவை-135)

 

(பாண்டவர்களை

அஸ்தினாபுரத்திற்கு

அழைத்து

வருவதற்காக

ரகசியமாக

விதுரரை

அனுப்பி

வைத்திருக்கிறார்கள்

என்பதைக்

கேள்வி பட்ட

துரியோதனன்

தனக்குக் கூட

சொல்லாமல்

தன்னைக் கூட

கலந்து

ஆலோசிக்காமல்

பாண்டவர்களை

அழைத்து

வருவதற்காக

விதுரரை

ரகசியமாக அனுப்பி

வைத்ததற்கு

என்ன காரணம்

என்பதை

அறிந்து கொள்ள

முடியாமல்

தவித்துக்

கொண்டிருந்த

துரியோதனனுக்கு

சகுனியின்

வார்த்தைகள்

ஒரு வழியைக்

காட்டியது

 

பாண்டவர்களை

அஸ்தினாபுரத்திற்குள்

வர விடாமல்

தடுத்து

நிறுத்துவதற்கு

எத்தகைய

செயல்களைச்

செய்வதென்று

தெரியாமல்

தவித்துக்

கொண்டிருந்த

துரியோதனனுக்கு

சகுனியின்

வார்த்தைகள் ஒரு

வழியைக் காட்டியது

 

போராக

இருந்தாலும் சரி

சதித் திட்டமாக

இருந்தாலும் சரி

இரண்டில் எந்த

ஒன்றை

செயல் படுத்தினாலும்

இப்போது

பலனளிக்காது

என்பதை உணர்ந்து

கொண்டதால் என்ன

செய்வதென்று

தெரியாமல்

தவித்துக்

கொண்டிருந்த

துரியோதனனுக்கு

சகுனியின்

வார்த்தைகள் ஒரு

வழியைக் காட்டியது

 

தன்னுடைய மாமா

சகுனி சொன்னபடி

தன்னுடைய

தந்தையான

திருதராஷ்டிரனைச்

சந்திப்பதே

சரியான

வழி என்று

முடிவெடுத்து

தன்னுடைய

தந்தையைக்

காணச் சென்றான்

துரியோதனன்)

 

துரியோதனன்:

"வணங்குகிறேன்

தந்தையே!"

 

திருதராஷ்டிரன் :

"நலமுடன்

வாழ்க மகனே!"

 

(ஆசிர்வதிக்கிறார்)

 

துரியோதனன் :

"தந்தையே நான்

எதற்காக தங்களை

சந்திக்க வந்திருக்கிறேன்

என்றால்………………………………?"

 

திருதராஷ்டிரன் :

"நீ எதைப் பற்றி

கேட்க

வந்திருக்கிறாய்

என்பதை நான்

நன்றாக

அறிவேன் மகனே

என்னுடைய

மகனின்

உள்ளத்தில்

என்ன இருக்கிறது

என்பது

ஒரு தந்தையான

எனக்குத்

தெரியாதா?"

 

துரியோதனன் :

"என் உள்ளத்தில்

உள்ளதை நீங்கள்

தெரிந்து

வைத்திருந்தால்

என்னிடம் கூட

கேட்காமல்

பாண்டவர்களை

அழைத்து

வருவதற்கு

விதுரரை

ரகசியமாக

அனுப்பி

வைத்திருக்க

மாட்டீர்கள்"

 

திருதராஷ்டிரன்

"வாரணாவதத்தில்

பாண்டவர்கள்

தங்கி இருந்த

அரக்கு

மாளிகையை

எரித்து

பாண்டவர்களை

கொல்வதற்காக

நீங்கள் தீட்டிய

திட்டத்தை

செயல்படுத்துவதற்கு

முன்

என்னை

கேட்டிருந்தால்

நான் வேண்டாம்

என்று

சொல்லியிருப்பேன்"

 

"என்னிடம் கூட

கேட்காமல்

ரகசியமாக

நீங்கள் தீட்டி

செயல்படுத்திய

திட்டம்

வெற்றி

அடைந்திருந்தால்

நான்

கவலைப்பட்டு

இருக்க மாட்டேன்"

 

"ஆனால்

என்ன ஆனது

நீங்கள் தீட்டி

செயல்படுத்திய

சதித்திட்டம்

தோல்வியில்

முடிந்து இருக்கிறது

பாண்டவர்கள்

இப்போது உயிரோடு

இருக்கிறார்கள்"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

----------- 05-08-2020

/////////////////////////////////


No comments:

Post a Comment