August 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-134


               ஜபம்-பதிவு-626
         (அறிய வேண்டியவை-134)

“நான்
போட்ட
திட்டம்
தோல்வி
அடைந்தால்
எத்தகைய
விளைவுகள்
ஏற்படும்
என்பதை
அறிந்து
வைத்திருப்பன்
நான்
அதனால்
தான்
நாம்
மாட்டிக்
கொள்ளாமல்
இருக்க
வேண்டுமானால்
என்ன
செய்ய
வேண்டும்
என்று
யோசிக்காமலா
திட்டங்களை
தீட்டி
செயல்படுத்தி
இருப்பேன்”

“இப்போதும்
நாம்
மாட்டிக்
கொள்ள
மாட்டோம்”

“நான்
போட்ட
சதித்திட்டம்
தோல்வி
அடைந்தாலும்
இப்போதும்
நாம்
மாட்டிக்
கொள்ள
மாட்டோம்”

துரியோதனன் :
“எப்படி மாமா
அவர்களே”

சகுனி :
“அதற்குத்
தேவையான
ஏற்பாடுகளை
நான்
ஏற்கனவே
செய்யத்
தொடங்கி
விட்டேன் “

துரியோதனன் :
“எதைத்
தொடங்கி
இருக்கிறீர்கள்
மாமா
அவர்களே”

சகுனி :
“அதைத்
தெரிந்து
கொள்வதற்கு
முன்
உன்
தந்தையிடம்
சென்று
சில
கேள்விக்கான
பதிலைக்
கேட்டுத்
தெரிந்து
கொண்டு வா”

துரியோதனன் :
“எதைத்
தெரிந்து
கொண்டு
வர
வேண்டும்
மாமா
அவர்களே”

சகுனி :
“துருபதனுடைய
நாட்டில்
இருக்கும்
பாண்டவர்களை
அஸ்தினாபுரத்திற்கு
அழைத்து
வருவதற்கு
விதுரனை
ரகசியமாக
அனுப்பி
வைத்ததற்கான
காரணம்
என்ன என்று
தெரிந்து
கொண்டு வா”

“நமக்குக்
கூட
தெரியாமல்
நம்மிடம்
கூட
சொல்லாமல்
நம்மிடம்
கூட
கலந்து
ஆலோசிக்காமல்
பாண்டவர்களை
அஸ்தினாபுரம்
அழைத்து
வருவதற்கு
ரகசியமாக
விதுரனை
அனுப்பி
வைத்ததற்கான
காரணம்
என்ன
என்று
தெரிந்து
கொண்டு
வா
மருமகனே”

துரியோதனன் :
“சரி
மாமா
அவர்களே
நான்
என்
தந்தையிடம்
பேசி
விட்டு
வருகிறேன்”

(என்று
சொல்லி
விட்டு
துரியோதனனும்
கர்ணனும்
அந்த
அறையை
விட்டு
வெளியேறினர்)

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 02-08-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment