August 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-122


              ஜபம்-பதிவு-614
       (அறிய வேண்டியவை-122)

“இந்த
சதித்திட்டத்தை
தீட்டி
செயல்படுத்தியது
நாம் நால்வரும்
தான் என்று
இந்நேரம்
இந்த உலகம்
புரிந்து கொள்ள
ஆரம்பித்திருக்கும் “

“இப்போது
அனைவருக்கும்
கெட்ட பெயர்
ஏற்படப் போகிறது “

“ஏற்கனவே
சந்தேகத்தின்
பார்வையில்
இருக்கும் நாம்
இப்போது
சந்தேகத்திற்கு
இடம் இல்லாமல்
நாம் தான்
செய்தோம்
என்பதை
அனைவரும்
ஏற்றுக்
கொள்வார்கள்”

“இப்போது
அனைவரும்
மாட்டப்
போகிறோம் “

“நீங்கள் போட்ட
சதித்திட்டத்தால்
என்னுடைய
வீரம் கூட
களங்கப்படப்
போகிறது
வீரமற்றவன்
கர்ணன்
கோழையைப்
போல
பாண்டவர்களைக்
கொல்ல
நடந்த சதியில்
துணையாக
இருந்தான் என்று
இந்த உலகம்
என்னை
இகழப் போகிறது”

“என்னுடைய
வீரத்தை
இகழப்
போகிறார்கள்
என்னுடைய புகழை
களங்கப்படுத்தப்
போகிறார்கள் “

“துரியோதனா
வீரத்தில்
சிறந்தவன் நீ
கதாயுதச்
சண்டையில்
உன்னை
இந்த உலகத்தில்
உள்ள ஒருவராலும்
வீழ்த்த முடியாது”

“அப்படிப்பட்ட நீயும்
நான் சொல்வதை
கேட்கவில்லை
உன்னுடைய
மாமா சொன்னார்
என்பதற்காக
சதித்திட்டத்தை
ஆதரித்து
சதித்திட்டத்திற்கு
ஒத்துழைத்தாய் “

“அந்த சதித்திட்டத்தை
எதிர்த்த என் மேல்
கோபப்பட்டாய் “

“உன்னுடைய
மாமாவுடன்
சேர்ந்து நீயும்
சதித்திட்டத்திற்கு
உடந்தையாக
இருந்தாய் “

“நான் சதித்திட்டம்
வேண்டாம் என்றேன் “

“போர் செய்து
பாண்டவர்களை
அழிக்கலாம்
என்று சொன்னேன் “

“என்னுடைய
வார்த்தைகளைக்
கேட்காமல்
செயல்பட்டீர்கள்

இப்போது என்ன
நடந்தது என்று
பார்த்தாயா
துரியோதனா “

“பாண்டவர்களை
அழிப்பதற்கு
சதித்திட்டங்கள்
எதுவும் உதவாது “

“சதித்திட்டங்களைப்
பற்றி யோசிக்கவும்
கூடாது “

“சதித் திட்டங்களை
தீட்டி செயல்படுத்தவும்
கூடாது “

“பாண்டவர்களை
அழிக்கப்பதற்கு
ஒரே வழி போர்
செய்வது தான் “

“போர் ஒன்றே
பாண்டவர்களை
அழிப்பதற்கான
ஒரே வழி”

சகுனி :
“எதிரிகளை
அழிப்பதற்கு
போர் செய்வது
ஒன்று தான் வழி
என்று நினைத்து
விட்டாயா கர்ணா “

“எதிரிகளை
அழிப்பதற்கு போர்
ஒன்று தான்
வழி என்றால்
இந்த
உலகத்தில்
உள்ள
மனிதர்கள்
யாரும்
உயிரோடு
இருக்க
மாட்டார்கள்”

“ஏனென்றால்
இந்த உலகத்தில்
உள்ள
ஒவ்வொருவரும்
மற்றவர் மேல்
பகை கொண்டு தான்
இருக்கிறார்கள்
ஆனால்
வெளியில்
நட்புடன் இருப்பது
போல் நடித்துக்
கொண்டிருக்கிறார்கள்”

“காலத்திற்காகக்
காத்துக்
கொண்டிருக்கிறார்கள்
காலம் கனிந்து
வரும் போது
ஒருவரையொருவர்
தங்களுக்குள்
அடித்துக் கொண்டு
உயிரை விட்டு
விடுவார்கள்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 02-08-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment