August 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-133


             ஜபம்-பதிவு-625
       (அறிய வேண்டியவை-133)

சகுனி :
“எப்படி மாட்டிக்
கொள்வோம்”

துரியோதனன் :
“புரோசனன்
மாட்டிக் கொண்டால்
நம்மை காட்டிக்
கொடுத்து விடுவான்”

சகுனி :
“புரோசனன் நம்மை
காட்டிக் கொடுத்து
விட்டால்”

துரியோதனன் :
“சதி வேலை
செய்தது நாம்
தான் என்பது
தெரிந்து விடும்
நாம் குற்றவாளியாகி
விடுவோம்”

சகுனி :
“குற்றவாளியாகி
விட்டால்”

துரியோதனன் :
“நம்மை தண்டிப்பார்கள்”

சகுனி :
“நம்மை தண்டிக்காமல்
இருப்பதற்கு என்ன
செய்ய வேண்டும்
மருமகனே”

துரியோதனன் :
“அது தான் எனக்குத்
தெரியவில்லை
மாமா அவர்களே”

சகுனி
“அதை எப்படி
தீர்ப்பது என்பதைப்
பற்றித் தான்
யோசித்துக்
கொண்டிருந்தேன்
இதனைப் புரிந்து
கொள்ளாமல் தான்
உன்னுடைய
நண்பன்
கர்ணன் என்னை
இகழ்ந்து கொண்டே
இருந்தான்
வார்த்தைகளால்
என்னை தாக்கிக்
கொண்டே
இருந்தான்”

“நீயும் அதை
கேட்டுக் கொண்டு
தானே இருந்தாய்
உன் நண்பன்
பேசிக் கொண்டு
இருந்த போது
நீ அமைதியாகத்
தானே இருந்தாய்”

துரியோதனன் :
“என்னுடைய நண்பன்
ஏதேனும் தவறாக
சொல்லி இருந்தால்
என்னுடைய நண்பன்
கர்ணன் சார்பாக
நான் உங்களிடம்
மன்னிப்பு கேட்டுக்
கொள்கிறேன்
மாமா அவர்களே “

“என்னுடைய
சார்பாக
கர்ணனை
மன்னித்து விடுங்கள் “

“அடுத்து நாம் என்ன
செய்ய வேண்டும்
என்று சொல்லுங்கள்”

சகுனி :
“வேரைப் பிடுங்க
வேண்டும் மருமகனே”

துரியோதனன் :
“வேரைப் பிடுங்க
வேண்டுமா “

சகுனி :
“ஆமாம் வேரைப்
பிடுங்க வேண்டும்
மருமகனே”

“ஒரு மரத்திற்கு
அடித்தளமாக இருப்பது
வேர் மட்டுமே”

“வேர் மட்டுமே
மொத்த மரத்தையும்
தாங்கிக் கொண்டு
இருக்கிறது”

“வேரை
அழித்து விட்டால்
மொத்த மரத்தையும்
அழித்து விடலாம்”

“அதைப்போல இந்த
விஷயத்தின்
அடித்தளத்தை
அழித்து விட்டால்
நாம் தப்பித்து
விடலாம்”

துரியோதனன் :
“தாங்கள் அடித்தளம்
என்று எதைக்
குறிப்பிடுகிறீர்கள்”

சகுனி :
“புரோசனனைத் தான்
குறிப்பிடுகிறேன்”

துரியோதனன் :
“புரோசனைனை
என்ன செய்யப்
போகிறீர்கள்”

சகுனி :
“புரோசனனை என்ன
செய்யப்போகிறேன்
என்று பொறுத்திருந்து
பாரு மருமகனே”

துரியோதனன் :
“புருசோனனை நாம்
கண்டு பிடிப்பதற்கு
முன்னால்
அஸ்தினாபுரத்தின்
வீரர்கள்
கண்டு பிடித்து
விட்டால்
நாம் மாட்டிக்
கொள்வோமே
மாமா அவர்களே”

சகுனி :
“இந்த திட்டத்தை
தீட்டியவன் நான்
இந்த திட்டத்தை
செயல்
படுத்தியவன் நான்
வெற்றி பெற்றால்
என்ன நிலை
ஏற்படும்
அதற்கு என்ன
செய்ய வேண்டும்
தோல்வி ஏற்பட்டால்
என்ன நிலை
ஏற்படும்
அதற்கு என்ன
செய்ய வேண்டும்
என்று இரண்டு
நிலைகளையும்
ஆராய்ந்து
பார்த்துத் தான்
திட்டத்தைத் தீட்டி
நான் செயல்படுத்தி
இருக்கிறேன்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 02-08-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment