August 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-130

             ஜபம்-பதிவு-622
       (அறிய வேண்டியவை-130)

“தீட்டும் திட்டங்களை
செயல்படுத்திக்
கொண்டே
இருப்பேன்
தீட்டி
செயல்படுத்திய
திட்டங்கள்
தோல்வியில்
முடிந்தாலும்
என்னுடைய
முயற்சியை
நிறுத்தவே
மாட்டேன்
தொடர்ந்து
திட்டங்களைத்
தீட்டிக் கொண்டு
செயல்படுத்திக்
கொண்டு தான்
இருப்பேன்”

“கர்ணா நீ
சொல்வது
போல் அது
சதித்திட்டமாகவும்
இருக்கலாம்
அல்லது
நான் சொல்வது
போல் அது
ராஜ நீதியாகக்
கூட இருக்கலாம்”

கர்ணன் :
“அதனால் தான்
நான்
சதித்திட்டங்கள்
வேண்டாம்
என்கிறேன்
பாண்டவர்களுடன்
போர் செய்வோம்
என்கிறேன்”

“பாண்டவர்களை
போரில் தான்
கொல்ல வேண்டும்
என்கிறேன்”

“வீரர்களை
வீரத்துடன் தான்
கொல்ல வேண்டும்
என்கிறேன்”

“நான் ஒரு
போர் வீரனாக
இருப்பதால் தான்
எதிரிகளை
போரிட்டுத்
தான் கொல்ல
வேண்டும் என்று
சொல்கிறேன்
நீங்களும் ஒரு
போர் வீரனாக
இருந்திருந்தால்
நீங்களும்
போரிட்டுத் தான்
எதிரிகளைக்
கொல்ல
வேண்டும் என்று
சிந்தித்திருப்பீர்கள்”

சகுனி :
“நான் ஒரு
போர் வீரனா
இல்லையா
எனக்கு
சண்டையிடத்
தெரியுமா
தெரியாதா
என்று தானே
கேட்க வருகிறாய்”

கர்ணன் :
“நீங்கள் செய்யும்
செயல்களைப்
பார்த்தால்
நீங்கள் ஒரு
போர் வீரனா
என்பதில்
எனக்கு சந்தேகம்
ஏற்படத் தான்
செய்கிறது “

சகுனி :
“நான் ஒரு போர்
வீரனா என
சந்தேகப்படுகிறாய்”

“ஆனால் நீ ஒரு
போர் வீரன் என்று
உன்னை நீயே
சொல்லிக்
கொள்கிறாய்”

“நான் ஒரு
போர் வீரனாக
இருக்கிறேன்
என்று சொல்லிக்
கொள்கிறாயே
நீ ஒரு போர்
வீரனாக இருந்து
கொண்டு என்ன
செய்ய வேண்டும்
என்று நினைத்துக்
கொண்டிருக்கிறாய்”

கர்ணன் :
“பாண்டவர்கள்
அனைவரையும்
போரிட்டு
அழித்து விட்டு
துரியோதனன்
இந்த நாட்டை
அரசாட்சி
செய்யும்படி
செய்ய
வேண்டும் என்று
நினைத்துக்
கொண்டிருக்கிறேன்”

சகுனி :
“நானும் அதையே
தான் செய்து
கொண்டிருக்கிறேன்”

கர்ணன் :
“ஆனால்
நீங்கள் அதை
சதி வேலையின்
மூலமாக
அல்லவா செய்து
கொண்டிருக்கிறீர்கள்
ஒரு போர் வீரனாக
இருந்து கொண்டு
இந்த காரியத்தை
செய்யவில்லையே”

“ஒரு போர்
வீரனால் மட்டுமே
எதிரிகளிடமிருந்து
நாட்டை
பாதுகாக்க
முடியும்
ஒரு போர்
வீரனால் மட்டுமே
எதிரிகளிடமிருந்து
நாட்டை
காப்பாற்ற
முடியும்”

சகுனி :
“நான் ஒரு
போர் வீரன்
நான் ஒரு
போர் வீரன்
என்று தொடர்ந்து
சொல்லிக்
கொண்டிருக்காதே
கர்ணா”

“போர் வீரர்கள்
தான் நாட்டைக்
காப்பாற்றுகிறார்கள்
போர் வீரர்கள்
தான் நாட்டைக்
காப்பாற்றுகிறார்கள்
என்று தொடர்ந்து
கத்திக்
கொண்டிருக்காதே
கர்ணா”

“போர் வீரர்கள்
மட்டும் தான்
நாட்டைக்
காப்பாற்றுகிறார்களா
வேறு யாரும்
நாட்டை
காப்பாற்றவில்லையா”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 02-08-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment