August 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-129


                ஜபம்-பதிவு-621
          (அறிய வேண்டியவை-129)

கர்ணன்  :
“உங்களை எப்படி
கிருஷ்ணனுடன்
இணைத்து
பேசுகிறீர்கள்
நீங்களும்
கிருஷ்ணனும்
எப்படி
ஒன்றாவீர்கள்”

சகுனி :
“துரியோதனனுக்கு
மாமா இந்த சகுனி
அதைப்போல்
யுதிஷ்டிரனுக்கு
மாமா அந்த
வாசுதேவ
கிருஷ்ணன்
திருதராஷ்டிரனுக்கு
இழைக்கப்பட்ட
அநீதி
திருதராஷ்டிரனுடைய
மகனான
துரியோதனனுக்கும்
இழைக்கப்படக்கூடாது
என்று நான்
போராடுகிறேன்”

“திருதராஷ்டிரனுக்கு
தடுக்கப்பட்ட
அரசாளும் உரிமை
துரியோதனனுக்கும்
தடுக்கப்படக்கூடாது
துரியோதனனுக்கு
கிடைக்க
வேண்டும்
என்பதற்காக நான்
போராடுகிறேன்”

“பாண்டுவிற்குக்
கிடைத்த
அரசாட்சி
செய்யும் உரிமை
பாண்டுவின்
மகனான
யுதிஷ்டிரனுக்கும்
கிடைக்க
வேண்டும் என்று
கிருஷ்ணன்
போராடுகிறார்”

“துரியோதனனுக்குக்
கிடைக்க
வேண்டிய
உரிமைகளுங்காக
நான்
போராடுகிறேன்
யுதிஷ்டிரனுக்கு
அரசாட்சி
கிடைக்க வேண்டும்
என்று கிருஷ்ணன்
போராடுகிறார்”

“துரியோதனனை
அரியணையில்
அமர்த்துவதற்காக
நான்
திட்டங்களைத்
தீட்டுகிறேன்
யுதிஷ்டிரனை
அரியணையில்
ஏற்றுவதற்காக
கிருஷ்ணன்
திட்டங்களைத்
தீட்டுகிறார்”

“நான் செய்வதைத்
தான் கிருஷ்ணன்
செய்கிறார்
கிருஷ்ணன்
செய்வதைத்
தான் நான்
செய்கிறேன்
இந்த உலகம்
நான் செய்வதை
சதித்திட்டம்
என்கிறது
ஆனால்
இந்த உலகம்
கிருஷ்ணன்
செய்வதை
கடவுளின் லீலை
என்கிறது “

“இந்த உலகம்
நான் செய்வதை
அதர்மச் செயல்
என்கிறது
ஆனால் நான்
செய்வதைத் தான்
கிருஷ்ணனும்
செய்கிறார்
இந்த உலகம்
கிருஷ்ணன்
தர்மச் செயல்
புரிகிறார்
என்கிறது “

“நான் செய்வதைத்
தான்
கிருஷ்ணனும்
செய்கிறார்
என்னை திட்டும்
உலகம் ஏன்
கிருஷ்ணனை
திட்டுவதில்லை”

“இந்த உலகம்
ஒருவரை
நல்லவர்
என்று சொல்லி
விட்டால்
அந்த நல்லவர்
எந்த கெடுதல்கள்
செய்தாலும்
அவைகளை
இந்த உலகம்
கெடுதல்களாகப்
பார்க்காது
ஆனால் இந்த
உலகம் ஒருவரை
கெட்டவன் என்று
சொல்லி விட்டால்
அவர் எவ்வளவு
நல்லது
செய்தாலும்
அந்த
நல்லவைகளை
நல்லவைகளாகப்
பார்க்காது”

“இது தான்
என்னுடைய
செயல்களிலும்
நடைபெற்று
இருக்கிறது”

“என்னை
சதி வேலை
செய்பவன் என்று
சொல்லும்
இந்த உலகம்
கிருஷ்ணனை
சதி வேலை
செய்பவன் என்று
சொல்வதில்லை”

“இதிலிருந்து
தெரியவில்லையா
இந்த உலகம்
தனக்கு
தேவைப்படுபவர்களை
உயர்ந்த நிலையில்
வைத்து
அழகு பார்க்கும்
தனக்கு
தேவைப்படாதவர்களை
தாழ்ந்த நிலையில்
வைத்து இழிவு
படுத்தும் என்று “

“இந்த உலகம்
என்னை திட்டுகிறது
என்பதற்காக
நான் தீட்டும்
திட்டங்களை
நிறுத்தி விட
மாட்டேன்
துரியோதனனை
அரியணையில்
ஏற்றுவதற்காக
எத்தனை
திட்டங்களை
வேண்டுமானாலும்
தொடர்ந்து
தீட்டிக் கொண்டே
இருப்பேன்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 02-08-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment