August 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-123


                ஜபம்-பதிவு-615
          (அறிய வேண்டியவை-123)

“இந்த உலகத்தில்
உள்ள ஒவ்வொருவரும்
ஒருவருக்கொருவர்
அன்பாகவும்
இல்லை
உண்மையாகவும்
இல்லை
பகையை மனதில்
வைத்துக் கொண்டு
அன்பு காட்டுவது
போல் நடித்துக்
கொண்டிருக்கின்றனர்”

“பிறருடன் பகையை
வளர்த்துக் கொள்ள
யாரும் விரும்பவில்லை “

“பிறருடன் இருக்கும்
பகையை
வெளிக்காட்டினால்
நம்மால் இந்த
உலகத்தில்
வாழ முடியாது
இந்த உலகத்தில்
உள்ளவர்கள்
யாரும்
வாழ விட
மாட்டார்கள்
என்பதை
உணர்ந்த
காரணத்தினால்
தான் - இந்த
உலகத்தில் உள்ள
ஒவ்வொருவரும்
பகையை மனதில்
வைத்துக்
கொண்டு
பிறரிடம்
அன்பு காட்டுவது
போல் நடித்துக்
கொண்டிருக்கின்றனர் “

“இந்த உலகத்தில்
வாழும்
மனிதர்கள்
அனைவருடைய
மனதிலும்
பிறரை
அழிக்க வேண்டும்
என்ற எண்ணமே
மேலோங்கி
இருக்கிறது “

“இதனால் தான்
எதிரியை
அழிப்பதற்கு
போர் செய்ய
வேண்டும்
என்று யார்
சொன்னாலும்
சொன்ன
உடனேயே
மக்கள் எதைப்
பற்றியும்
யோசிக்காமல்
பின்னால்
ஏற்படக்கூடிய
விளைவுகள்
எதைப் பற்றியும்
யோசிக்காமல்
போர் செய்ய
வேண்டும்
போர் செய்ய
வேண்டும்
என்று
கதறிக் கொண்டு
இருக்கின்றனர்”

“மற்றவர்கள் மேல்
பகை உணர்ச்சி
மனதில்
இருக்கின்ற
காரணத்தினால்
தான் போர்
என்றவுடன்
மக்கள்
அனைவரும்
போரை
ஆதரிக்கின்றனர்”

“மற்றவர்கள் மேல்
பகை உணர்ச்சி
மனதில்
இல்லை என்றால்
போர்
என்றவுடன்
மக்கள்
அனைவரும்
போரை
ஆதரிக்க மாட்டார்கள்”

“இந்த
உலகத்தில் உள்ள
ஒவ்வொருவருடைய
உள்ளத்திலும்
பகை
உணர்ச்சி குடி
கொண்டிருக்கிறது
ஒருவரையொருவர்
அழிப்பதற்கு
காலம்
பார்த்துக் கொண்டு
இருக்கின்றனர்”

“தங்களால்
முடிந்த அளவு
சதிகள் செய்து
பிறரை
அழிப்பதற்கு
முயற்சி செய்து
கொண்டு தான்
இருக்கிறார்கள்”

“பிறரை
அழிப்பதற்கு
யாரும் போரை
பயன்படுத்துவதில்லை
சதித்திட்டங்களைத்
தான் பயன்படுத்தி
வருகின்றனர்”

“எதிரிகளை
அழிப்பதற்கு
போர் ஒன்று
மட்டுமே வழி
கிடையாது
சதித்திட்டமும்
ஒரு வழி தான்
என்பதைத்
தெரிந்து கொள்
கர்ணா”

“போர் செய்ய
வேண்டும்
போர் செய்ய
வேண்டும் என்று
சொல்லிக் கொண்டு
இருக்கிறாயே
கர்ணா போர்
செய்வதை
எளிதானது என்று
நினைத்து
விட்டாயா”

“போர் செய்வதற்கு
முன்பு போரைத்
தொடங்க வேண்டும்
போரைத்
தொடங்குவதற்கென்று
சில விதிமுறைகள்
இருக்கின்றன
என்பதாவது
உனக்கு தெரியுமா
கர்ணா “

“நம்முடைய
பலத்தை
முதலில் நாம்
ஆராய்ந்து கணக்கில்
எடுத்துக் கொள்ள
வேண்டும் “

“அதனைத் தொடர்ந்து
எதிரியின் பலத்தை
ஆராய்ந்து கணக்கில்
எடுத்துக் கொள்ள
வேண்டும் “

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 02-08-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment