August 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-125


                ஜபம்-பதிவு-617
           (அறிய வேண்டியவை-125)

“நீ நினைத்தவுடன்
எல்லாம் போர்
செய்வதற்கு
போர் ஒன்றும்
எளிமையானதல்ல
என்பதைத் தெரிந்து
கொள் கர்ணா”

“போரில் இத்தனை
சிரமங்கள் இருக்கிறது
என்ற காரணத்தினால்
தான் நான் போரைத்
தேர்ந்தெடுப்பதில்லை “

“அதை நான்
கடைசி
ஆயுதமாகத் தான்
வைத்திருக்கிறேன்”

“போரினால்
ஏற்படக்கூடிய
இழப்புகளை
கணக்கில்
எடுத்துக்
கொண்டு தான்
நான்
சதித்திட்டங்களைத்
தீட்டுகிறேன் “

“நமக்கு
சேதங்கள் ஏதும்
ஏற்படாமல்
இருக்க
வேண்டும்
என்பதற்காகத் தான்
சதித்திட்டங்களை
தீட்டி
அதனை
நடைமுறைப்படுத்திக்
கொண்டிருக்கிறேன்”

கர்ணன் :
“ஆனால் நீங்கள்
செய்யும்
சதித் திட்டங்கள்
எல்லாம்
தோல்வியில்
தானே
முடிந்திருக்கிறது”

சகுனி :
“எதைத் தோல்வி
என்கிறாய்”

கர்ணன் :
“பீமன்
சின்னவனாக
இருக்கும் போது
அவனைக்
கொல்வதற்காக
விஷத்தைக்
கொடுத்தீர்கள்
ஆனால் என்ன
ஆயிற்று அவன்
சாகவா செய்தான்
நாகலோகம்
சென்றான் 
நூறு யானை
பலத்தோடு
திரும்பி வந்தான் “

“அவன் முன்பை
விட இன்னும்
பலசாலியாகத்
திரும்பி வந்தான் “

“இளவரசன் பட்டம்
யுதிஷ்டிரனுக்கு
கிடைக்கக் கூடாது
யுதிஷ்டிரன்
இளவரசனாகக்
கூடாது என்று
பல்வேறு
சதிவேலைகள்
செய்தீர்கள்
ஆனால் என்ன
ஆயிற்று
யுதிஷ்டிரன்
இப்போது
அஸ்தினாபுரத்தின்
இளவரசனாக
இருக்கிறான் “

“வாரணாவதத்தில்
அரக்கு மாளிகையில்
தங்கி இருந்த
பாண்டவர்களை
எரித்துக் கொல்ல
சதித்திட்டம்
தீட்டினீர்கள்
பாண்டவர்கள்
இறந்து
விடுவார்கள்
என்று நீங்கள்
நினைத்தீர்கள் “

“ஆனால் இப்போது
என்ன நடந்தது
பாண்டவர்கள்
யாரும் சாகவில்லை
அவர்கள் தப்பி
விட்டார்கள்
அவர்கள்
இப்போது
உயிரோடு
இருக்கிறார்கள்
நலமுடன்
இருக்கிறார்கள்
துருபனுடைய
நாட்டில்
இருக்கிறார்கள்
அது மட்டுமல்ல
துருபதனுடைய
மகளான
திரௌபதியையும்
திருமணம்
செய்து கொண்டு
இருக்கிறார்கள் “

“துருபதன் என்ற
மாபெரும்
மன்னனுடைய
ஆதரவையும்
பெற்று பலம்
வாய்ந்தவர்களாக
இருக்கிறார்கள்”

“நீங்கள் போடும்
சதித்திட்டங்கள்
அனைத்தும்
தோல்வியில்
தானே முடிந்து
இருக்கிறது
அப்புறம் ஏன்
சதித்திட்டம்
தீட்டுவதையே
யோசித்துக்
கொண்டிருக்கிறீர்கள் “

“அதனால் தான்
நான் சஷத்திரிய
தர்மத்துடன்
போர் செய்ய
வேண்டும் என்று
சொல்கிறேன்
ஆனால் நீங்கள்
அதைப் பற்றி
யோசிக்காமல்
சதித்திட்டம் தீட்டி
பாண்டவர்களை
அழிக்க முயற்சி
செய்து
கொண்டிருக்கிறீர்கள்”

சகுனி  :
“நான் போட்ட
சதித்திட்டங்கள்
தோல்வி
அடைந்து
விட்டது
என்பதற்காக
எந்த ஒரு
சதித்திட்டத்தையும்
நான் தீட்டாமல்
இருக்க முடியுமா”

“தீட்டிய
சதித்திட்டத்தை
செயல்படுத்தாமல்
தான் இருக்க
முடியுமா”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 02-08-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment