August 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-127


              ஜபம்-பதிவு-619
        (அறிய வேண்டியவை-127)

“ஒரு நாடு
தன்னுடைய
நாட்டிற்கு
எதிரியாக
இருக்கும் நாட்டை
அழிக்க வேண்டும்
என்பதற்காக
எதிரி நாட்டில்
உள்ள மக்களைக்
கொலை செய்தால்
கொலை
செய்தவன் தவறு
செய்யவில்லை
என்று
சொன்னால்
அதற்குப் பெயர்
ராஜ நீதி”

“ஒரு மன்னன்
தன்னுடைய
நாட்டுக்காகவும்
நாட்டு மக்களைக்
காப்பாற்றுவதற்காகவும்
எத்தகைய
அநியாயங்களை
வேண்டுமானாலும்
செய்யலாம்
எத்தகைய
அக்கிரமங்களை
வேண்டுமானாலும்
செய்யலாம்
எத்தகைய
சதிகளை
வேண்டுமானாலும்
செய்யலாம்
நாட்டையும்
நாட்டு மக்களையும்
காப்பாற்றுவதற்காக
என்ன
வேண்டுமானாலும்
செய்யலாம்
எதை
வேண்டுமானாலும்
செய்யலாம்
எத்தகைய
செயலை
வேண்டுமானாலும்
செய்யலாம்
யாரை
வேண்டுமானாலும்
கொல்லலாம் 
எதை
வேண்டுமானாலும்
அழிக்கலாம்”

“அரசனது வெற்றியும்
அரசனுடைய
நாட்டின் வெற்றியும்
மட்டுமே தான்
அரசனுக்கு
முக்கியமாக
இருக்க வேண்டும்
வெற்றியை
அடைய அரசன்
முயற்சி
செய்யும் போது
அரசன் நியாயம்
அநியாயங்களைப்
பார்க்கக் கூடாது
பாவம் செய்ய
பயப்படக்கூடாது
தப்பு செய்ய
தயங்கக் கூடாது
வெற்றியை
அடைவதற்கு
அரசன் எந்த தப்பை
வேண்டுமானாலும்
செய்யலாம் என்பதைத்
தான் போதிக்கிறது
ராஜநீதி”

“மன்னர்
குலத்தில் பிறந்த
ஒவ்வொருவரும் 
ராஜநீதியை
படிக்க வேண்டும்
ராஜ நீதியை உணர்ந்து
கொள்ள வேண்டும்”

“ராஜ நீதியை
பின்பற்ற
வேண்டும் என்ற
காரணத்திற்காக
ராஜ குலத்தில் பிறந்த
ஒவ்வொருவருக்கும்
ராஜ நீதி என்பது
அன்று முதல்
இன்று வரை
கற்பிக்கப்பட்டுத்
தான் வந்து
கொண்டிருக்கிறது 

“ஒவ்வொரு
ராஜகுமாரனும்
ராஜ நீதியைப் படிக்க
வேண்டும் என்று
ராஜ குலம்
ராஜ குமாரர்களை
நிர்பந்தம் செய்து
கொண்டு தான்
இருக்கிறது”

“இப்போதும் கூட
ராஜ குலத்தில்
பிறந்தவர்களுக்கு
ராஜ நீதி என்பது
கற்றுக்
கொடுக்கப்பட்டுக்
கொண்டு தான்
இருக்கிறது”

“குருகுலங்களில்
ராஜ நீதி என்பது
தற்போதும்
கற்பிக்கப்பட்டுக்
கொண்டு தான்
இருக்கிறது”

“அந்தக்கால
மன்னர்கள் முதல்
இந்தக்கால
மன்னர்கள்
வரை யாருமே
ராஜநீதி தேவை
இல்லை என்று ஒதுக்கி
வைக்கவில்லை
ராஜ நீதியை
பின்பற்றிக் கொண்டு
தான் இருக்கிறார்கள்
ராஜ நீதியை
ஏற்றுக் கொண்டு
தான் இருக்கிறார்கள்”

“நானும் ராஜ குலத்தில்
பிறந்தவன்
எனக்கும் ராஜ நீதி
கற்பிக்கப்பட்டது
நானும் ராஜ நீதியை
கற்றிருக்கிறேன்
நான் கற்ற
ராஜ நீதியைத் தான்
நான் இப்போது
துரியோதனனை
அரியணை
ஏற்றுவதற்காக
பயன்படுத்திக்
கொண்டிருக்கிறேன்”

“ராஜ நீதியைப்
பற்றி உனக்குத்
தெரிந்திருக்க
வாய்ப்பில்லை கர்ணா
ஏனென்றால் நீ
ராஜ குலத்தில்
பிறக்கவில்லை
அல்லவா”

“ராஜ குலத்தில்
நீ பிறந்திருந்தால் 
ராஜ நீதி என்றால்
என்ன என்பதை
நீ தெரிந்து இருப்பாய்
ராஜ நீதியை
கடைபிடித்து இருப்பாய்
ராஜ நீதியை
செயல்படுத்தி இருப்பாய்   
ராஜ நீதியை
குறை சொல்லி
இருக்க மாட்டாய்
ராஜ நீதியை
கடைபிடித்து
செயல் படுத்திக்
கொண்டிருக்கும்
என்னையும் குறை
சொல்லிக் கொண்டு
இருக்க மாட்டாய்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 02-08-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment