August 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-131


              ஜபம்-பதிவு-623
        (அறிய வேண்டியவை-131)

கர்ணன் :
“வேறு யார் நாட்டை
காப்பாற்றுகிறார்கள்”

சகுனி :
“மக்கள் அனைவருக்கும்
உணவு கிடைக்க
வேண்டும் என்பதற்காக
அல்லும் பகலும்
விவசாயம் செய்து
உழைத்துக்
கொண்டிருக்கிறானே
அந்த விவசாயி

மக்களுடைய
வயிற்றுப் பசியை
போக்குகிறானே
அந்த விவசாயி

மக்களுடைய
உயிரானது
பசியால் உடலை விட்டு
வெளியே போகாமல்
காப்பாற்றுகிறானே
அந்த விவசாயி

அந்த விவசாயி
இந்த நாட்டில்
உள்ள மக்களை
காப்பாற்றவில்லையா?”

“மக்கள் அனைவரும்
மானத்தோடு
வாழ வேண்டும்
என்ற காரணத்திற்காக
உடலை மறைத்து
மானத்தைக்
காப்பாற்றுவதற்காக
உடைகளைத் தைத்து
கொடுக்கிறானே
அந்த நெசவாளி

அந்த நெசவாளி
இந்த நாட்டில்
உள்ள மக்களை
காப்பற்றவில்லையா?”

“நோயினால்
பாதிக்கப்பட்ட
நோயாளிகளை
நோயின்
பாதிப்பிலிருந்து
மீட்டெடுக்கும்
மிகப் பெரும்
பணியினையினைச்
செய்து
கொண்டிருக்கிறார்களே
அந்த மருத்துவர்கள்

இறப்பின் வாசலில்
இருப்பவர்களை
இறப்பின் வாயில்
விழாமல்
இறப்பிலிருந்து
நோயாளியை
மீட்டெடுத்து
வாழ்வு கொடுக்கும்
மிகப்பெரிய
வேலையைச்
செய்கிறார்களே
அந்த மருத்துவர்கள்

அந்த மருத்துவர்கள்
இந்த நாட்டில்
உள்ள மக்களைக்
காப்பாற்றவில்லையா?”

“மக்கள் அனைவரும்
கல்வி அறிவைப் பெற்று
இந்த சமுதாயத்தில்
சுயமரியாதையுடன்
கூடிய ஒரு
மனிதனாக வாழ
வேண்டும் என்பதற்காக
தேவையான கல்வியை
போதிக்கிறார்களே
அந்த ஆசிரியர்கள்

மடமை
இருளை நீக்கி
அறிவுக்
கண்ணைத் திறந்து
இந்த சமுதாயத்தில்
உள்ள மக்கள்
அனைவரும்
தங்களைத் தாங்களே
காப்பாற்றிக்
கொள்வதற்குத்
தேவையான கல்வியை
போதிக்கிறார்களே
அந்த ஆசிரியர்கள்

அந்த ஆசிரியர்கள்
இந்த நாட்டில்
உள்ள மக்களைக்
காப்பாற்றவில்லையா?”

“இந்த நாட்டைக்
காப்பாற்றுவதற்காகப்
போரிடப் போகிறேன்
என்று சொன்னாலும்
உனக்கு
போரிடுவதற்குத்
தேவையான
ஆயுதங்களை செய்து
கொடுக்கிறானே
ஒரு ஆயுதம்
செய்யும் தொழிலாளி
அவன்
போரிடுவதற்குத்
தேவையான
ஆயுதங்களைச்
செய்து கொடுத்தால்
தான் உன்னால்
போரிடவே முடியும்
நாட்டைக்
காப்பாற்ற முடியும்
நீ போரிட்டு
நாட்டைக்
காப்பாற்றுவதற்குத்
தேவையான
ஆயுதங்களைச்
செய்து
கொடுக்கிறானே
அந்த ஆயுதம்
செய்யும் தொழிலாளி

அந்த ஆயுதம்
செய்யும் தொழிலாளி
இந்த நாட்டில்
உள்ள
மக்களைக்
காப்பாற்றவில்லையா?”

“இந்த நாட்டில் உள்ள
ஒவ்வொருவரும்
தாங்கள் செய்யும்
ஏதேனும் ஒரு
தொழிலின் மூலம்
இந்த நாட்டில்
உள்ள மக்கள்
அனைவரையும்
காப்பாற்றிக்
கொண்டு தான்
இருக்கிறார்கள்”

“அப்படி இருக்கும்
போது ஒரு
போர் வீரன்
மட்டும் தான்
நாட்டைக் காப்பாற்றிக்
கொண்டு இருக்கிறான்
என்று எப்படி
சொல்ல முடியும்”

“இந்த நாட்டில்
உள்ள
ஒவ்வொருவரும்
ஏதேனும்
ஒரு வழியில்
இந்த நாட்டைக்
காப்பாற்றிக்
கொண்டு தான்
இருக்கிறார்கள்”

“நீ ஒரு போர்
வீரன் என்பதற்காக
இந்த நாட்டைக்
காப்பாற்றிக்
கொண்டிருக்கும்
மற்றவர்களுடைய
தியாகங்களை
மற்றவர்களுடைய
செயல்களை
மற்றவர்களுடைய
உழைப்பை
மற்றவர்களுடைய
நேர்மையை
களங்கப்படுத்தாதே
கர்ணா”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 02-08-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment