August 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-124


              ஜபம்-பதிவு-616
        (அறிய வேண்டியவை-124)

“இருவருடைய
பலத்தையும்
கூட்டிக் கழித்துப்
பார்க்க வேண்டும் “

“யாருக்கு பலம்
அதிகம் என்பதை
முதலில் முடிவு
செய்ய வேண்டும்”

“எதிரியின் பலம்
அதிகமாக இருக்கும்
பட்சத்தில்
எதிரியின் பலத்தை
எப்படி குறைப்பது
நம்முடைய
பலத்தை எப்படி
அதிகரிக்கச்
செய்வது
என்பதை
ஆராய்ந்து
பார்த்த பிறகு
நம்முடைய
பலத்தைக்
கூட்ட வேண்டும்
அல்லது
எதிரியின் பலத்தைக்
குறைக்க வேண்டும்”

“அதுமட்டுமல்ல
நம்முடன் நட்புடன்
இருக்கும்
மன்னர்களை
எல்லாம் அழைக்க
வேண்டும்
அவர்களோடு
கலந்து
பேச வேண்டும்
அவர்களுடைய
அபிப்ராயம்
என்ன என்பதை
கேட்டறிய
வேண்டும்”

“அப்போது தான்
மன்னர்களில்
யாரெல்லாம்
நமக்கு சாதகமாக
இருக்கிறார்கள்”

“நமக்கு ஆதரவாக
இருக்கிறார்கள்
நம்முடன்
நட்புடன்
இருந்து
போர் செய்ய
இருக்கிறார்கள்
என்பதை அறிந்து
கொள்ள முடியும்”

“யாரோ ஒருவர்
அல்லது இருவர்
நமக்கு சாதகமாக
இல்லை
நம்முடன்
இணைந்து
போர் செய்ய
விரும்பவில்லை
என்றால்
விரும்பாதவர்களுடைய
இடத்தை வேறு
யாரையேனும்
வைத்து நிரப்ப
முடியுமா என்று
பார்க்க வேண்டும்”

“அதற்கான மாற்று
ஏற்பாடுகளை
எப்படி செய்ய
வேண்டும்
எவ்வாறு செய்ய
வேண்டும்
என்பதைப் பார்த்து
செய்ய வேண்டும்”

“இதற்கெல்லாம்
அவகாசம்
வேண்டாமா”

“நமக்கு சாதகமான
ஒரு நிலையை
உருவாக்க
வேண்டும்
நமக்கு
முழுமையான
ஒரு சாதக நிலை
உருவாகும்
வரைக்கும்
நாம் சண்டை
செய்யாமல்
இருக்க வேண்டும்”

“நமக்கு சாதகமான
ஒரு நிலை
உருவான
பிறகே சண்டை
செய்வதற்கு
ஆரம்பிக்க
வேண்டும்”

“போரை ஆரம்பித்து
நடத்துவதற்குத்
தேவையான
செல்வ வளங்கள்
கஜானாவில்
இருக்கிறதா என்றும்
போரை நடத்தி
முடிக்கும் வரை
கஜானாவில்
தேவையான
செல்வ வளங்கள்
இருக்குமா என்றும்
பார்க்க வேண்டும்”

“போரில்
ஈடுபடுபவர்களுக்கு
உணவு நீர்
ஆகியவற்றை
அன்றாடம் எந்தக்
குறையும் இல்லாமல்
வழங்க முடியுமா
என்பதை
ஆராய்ந்து
பார்க்க
வேண்டும்”

“போரை நடத்தி
முடித்து விட்டு
ஏற்படப் போகும்
இழப்புகளை
நம்மால் சமாளிக்க
முடியுமா என்று
பார்க்க வேண்டும்”

“இப்படி அனைத்து
நிலைகளிலும்
நின்று யோசித்துப்
பார்க்க
வேண்டும் “

“போரினால்
ஏற்படக்கூடிய
சாதக
பாதகங்களையும்
ஆராய்ந்து
பார்க்க வேண்டும்”

“அனைத்தையும்
ஆராய்ந்து
பார்த்த பிறகே
போர் செய்ய
வேண்டும்”

“போரைத்
தொடங்குவதற்கு
முன்பும்
போரை
நடத்தும் போதும்
போர்
முடிந்த பின்பும்
நடக்கக்
கூடியவைகளை
நினைத்து
யோசித்துப்
பார்த்துத் தான்
போரைத்
தொடங்க
வேண்டும்”

“இப்போது புரிகிறதா
கர்ணா
போர் செய்வது
எவ்வளவு
கடினமானது என்று”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 02-08-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment