August 05, 2020

அறிய வேண்டியவை-பதிவு-143

ஜபம்-பதிவு-635

(அறிய வேண்டியவை-143)

 

புரோசனன் :

“ஏற்றுக்

கொள்கிறேன்”

 

சகுனி :

“யார்

அங்கே”

 

(பணிப்பெண்

வருகிறாள்)

 

சகுனி :

“பால்

கொண்டு வா”

 

(பணிப்பெண் ஒரு

பாத்திரத்தில்

பாலைக்

கொண்டு

வந்து

வைக்கிறாள்

சகுனி அதில்

விஷத்தைக்

கலக்குகிறான்)

 

சகுனி :

“புரோசனா

எனக்கு மிகவும்

பிடித்தமானவனே

என்னுடைய

விசுவாசியாய்

இருப்பவனே

என்னுடைய

நம்பிக்கைக்கு

உரியவனாய்

இருப்பவனே

காந்தாரத்தின்

உளவுப்படை

தலைவனே

உன்னுடைய

சேவையை

மனதில்

கொண்டு தான்

அதிக அளவு

மரண

வேதனையை

அளிக்கும்

படியான

மரணத்தை

உனக்குத்

தராமல்

வலியில்லாத

எளிமையான

மரணத்தை

உனக்கு

அளிக்கிறேன்”

 

“இல்லை

என்றால்

நீ செய்த

தவறுக்கு

உன்னுடைய

மரணம்

யாரும்

நினைத்து கூட

பார்க்க

முடியாத

அளவிற்கு

பயங்கரமானதாக

இருக்கும்”

 

“இந்த

பாலைக்

குடித்து

உன்னுடைய

வாழ்வை

முடித்துக் கொள்

இந்த உலகத்தை

விட்டு சென்று

இளைப்பாறு”

 

(புரோசனன்

மறுப்பேதும்

சொல்லாமல்

கிண்ணத்தில்

இருந்த பாலைக்

குடிக்கிறான்

சிறிது நேரத்தில்

இறக்கிறான்)

 

(இக் காட்சியைக்

கண்ட

கர்ணனும்

துரியோதனனும்

அமைதியாக

நின்று

கொண்டிருந்தனர்

சகுனி

துரியோதனன்

அருகில்

சென்று

பேசுகிறான்)

 

சகுனி :

“நாம்

எப்போது

ஒரு சதித்

திட்டத்தை

தீட்டி

அதை

எதிரிகளுக்கு

எதிராக

செயல்

படுத்துகிறோமோ

அந்த

சதித்திட்டத்தை

எதிரிகளுக்கு

எதிராக

திட்டமிட்டு

செயல்படுத்தியது

நாம் தான்

என்று

தெரியக்கூடிய

சூழ்நிலை

ஏற்பட்டால்

அத்திட்டம்

யார்

மூலமாக

வெளிப்பட்டால்

நாம்

எல்லோரும்

மாட்டிக்

கொள்வோமோ

அந்த நபரை

உயிரோடு

விடக்கூடாது

அழித்து

விட வேண்டும்

அப்போது

தான்

நாம்

மாட்டாமல்

இருப்போம்”

 

“அழிக்க

வேண்டியவைகளை

அழிக்க

வேண்டிய

தருணத்தில்

அழிக்கவில்லை

என்றால் 

நாம்

அழிந்து

விடுவோம்

அதனால்

அழிக்க

வேண்டியவனான

புரோசனனை

அழிக்க

வேண்டிய

தருணத்தில்

விஷம்

கொடுத்து

அழித்தேன்”

 

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

----------- 05-08-2020

/////////////////////////////////


No comments:

Post a Comment