August 05, 2020

அறிய வேண்டியவை-பதிவு-142

ஜபம்-பதிவு-634

(அறிய வேண்டியவை-142)

 

சகுனி :

“ஆமாம் உலகம்

அப்படித் தான்

சொல்கிறது

பாண்டவர்கள்

உயிரோடு

இருக்கிறார்கள்

என்று

ஆனால் நீ

சொல்கிறாய்

பாண்டவர்கள்

இறந்து

விட்டார்கள்

என்று”

 

புரோசனன் :

“பாண்டவர்கள்

இறந்து விட்டார்கள்

பாண்டவர்கள்

உயிரோடு

இருப்பதற்கு

வாய்ப்பே

கிடையாது

பாண்டவர்கள்

உயிரோடு

இருக்கிறார்கள்

என்றால்

எங்கோ

தவறு நடந்து 

விட்டிருக்கிறது

என்று பொருள்”

 

சகுனி :

“உன்னையும்

அறியாமல்

தவறு நடந்து

இருக்கிறதா

அல்லது

உன்னை அறிந்து

யாரிடமாவது

காட்டிக்

கொடுத்தாயா”

 

புரோசனன் :

“அரக்கு மாளிகை

சம்பவத்தில்

எனக்குத்

தெரியாமல்

எங்கோ தவறு

தான் நடந்து

இருக்கிறது

துரோகம் செய்ய

வேண்டும் என்ற

எண்ணமோ

காட்டிக் கொடுக்க

வேண்டும் என்ற

எண்ணமோ

எனக்கு

எப்போதும்

ஏற்பட்டதே

இல்லை”

 

சகுனி :

“நான் உன்னை

செய்யச் சொன்ன

விஷயம் எவ்வளவு

முக்கியத்துவம்

வாய்ந்தது

என்பது உனக்குத்

தெரியும் அல்லவா?”

 

“விஷயம் வெளியே

தெரிந்தால் எங்கள்

அனைவருக்கும்

ஆபத்து என்பது

உனக்குத் தெரியும்

அல்லவா”

 

“அரக்கு மாளிகை

சம்பவத்தில் தவறு

நடந்தாலோ

 

அல்லது

 

அரக்கு மாளிகை

சம்பவத்திற்கு

நாங்கள் தான்

காரணம் என்று

நீ என்னை

காட்டிக்

கொடுத்தாலோ

மாட்டிக் கொள்வது

நாங்கள் தான்

என்று உனக்குத்

தெரியும் அல்லவா?”

 

“அப்படி

தெரிந்திருந்தும்

ஏன் இப்படி

நடந்து

கொண்டாய்”

 

“உன்னுடைய

கவனக்

குறைவினால்

தவறு

நடந்திருந்தாலோ

அல்லது

தீட்டிய திட்டத்தை

யாருக்கேனும்

காட்டிக்

கொடுத்திருந்தாலோ

மாட்டிக் கொள்வது

நாங்கள் தான்

என்ற நிலை

இருக்கும் போது

இரண்டிற்கும்

தண்டனை என்பது

ஒன்று தானே”

 

“என்ன தண்டனை

என்பது உனக்குத்

தான் தெரியுமே

புரோசனா”

 

புரோசனன் :

“மரணம் தான்

தண்டனை”

 

சகுனி :

“மரண

தண்டனையைத்

தான் நான்

இப்போது

உனக்கு அளிக்கப்

போகிறேன்”

 

புரோசனன் :

“நடந்து விட்ட

தவறுக்கு எனக்கு

மன்னிப்பு

கிடையாதா?”

 

சகுனி :

“தவறு என்று

எடுத்துக்

கொண்டால்

மன்னிக்கக்

கூடிய தவறு

மன்னிக்க முடியாத

தவறு என்று

இரண்டு தவறுகள்

இருக்கிறது”

 

“இந்த உலகத்தில்

பெரும்பாலோர்

செய்யும் தவறு

மன்னிக்கக்கூடிய

தவறாக

இருக்கின்ற

காரணத்தினால்

மன்னித்து

விடலாம்

ஆனால் நீயோ

மன்னிக்க

முடியாத

தவறை

செய்திருக்கிறாய்

அதனால்

உனக்கு

மன்னிப்பு என்பதே

கிடையாது”

 

“மரணத்தை

சந்திக்க

தயாராக இரு

புரோசனா

மரணம் உன்னை

நெருங்கிக்

கொண்டிருக்கிறது “

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

----------- 05-08-2020

/////////////////////////////////


No comments:

Post a Comment